|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 8. யூகி  போதரவு |  |  |  | வென்றி 
      வியனகர் வெந்துயர் உற்றதும் 45  
       பட்டாங் குணர்ந்து முட்டாங் 
      கியற்றி
 உணரா 
      தான்போல் ஒருமீக் 
      கொற்றவன்
 புணரா 
      தார்முற் பொச்சாப் 
      பஞ்சி
 வணங்குகொடி 
      மருங்குல் வாசவ தத்தையைப்
 பயந்தினி தெடுத்த பத்தினித் தெருட்டி
 50   உயர்ந்த கோயிலுள் ஒடுங்கிய ஒடுக்கமும
 |  |  |  | 44 - 50 : வென்றி...,..,ஒடுக்கமும் |  |  |  | (பொழிப்புரை)  பிரச்சோதனன் 
      வெற்றியையுடைய தன் உச்சயினி - நகரத்துள்ளோர் வெவ்விய துயர் 
      எய்தியதனையும் ஆண்டு நிகழ்ந்த பிறவற்றையும் நிகழ்ந்தபடியே உணர்ந்தும், 
      அவற்றை உள்ளத்தே அடக்கி அறியாதான் போன்று தன் பொச்சாப்பினைப் 
      பகைவர் உணர்தலை அஞ்சி அரண்மனையகத்தே சென்று தன் பெருந்தேவியைத் 
      தேற்றி உயர்ந்த அவ் வரண்மனையினுள்ளேயே ஒடுங்கியிருந்தமையையும் 
      என்க. |  |  |  | (விளக்கம்)  45. உள்தாங்கு 
      இயற்றி - உள்ளத்திலே தாங்குதலைச் செய்து; அடக்கி 
      என்றவாறு, 46, புணராதார் - பகைவர்; அவர் முன்னர்த் தன் 
      பொச்சாப்பு வெளிப்படுதற்கு அஞ்சிஎன்க, பொச்சாப்பு - உவகை 
      மகிழ்ச்சியிற்சோர்வு.
 48. வணங்குகொடி - வளைகின்ற பூங்கொடியை 
      ஒத்த.
 49. பயந்து-ஈன்று. பத்தினி-ஈண்டு மனைவி என்னும் பொருட்டாய் 
      நின்றது. தெருட்டி - தேற்றி,
 50. (47) பொச்சாப்பு 
      அஞ்சி ஒடுங்கிய ஒடுக்கமும் என்க.கோயில்-அரண்மனை.
 | 
 |