உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          வென்றி வியனகர் வெந்துயர் உற்றதும்
     45   பட்டாங் குணர்ந்து முட்டாங் கியற்றி
          உணரா தான்போல் ஒருமீக் கொற்றவன்
          புணரா தார்முற் பொச்சாப் பஞ்சி
          வணங்குகொடி மருங்குல் வாசவ தத்தையைப்
          பயந்தினி தெடுத்த பத்தினித் தெருட்டி
     50   உயர்ந்த கோயிலுள் ஒடுங்கிய ஒடுக்கமும
 
        44 - 50 : வென்றி...,..,ஒடுக்கமும்
 
(பொழிப்புரை) பிரச்சோதனன் வெற்றியையுடைய தன் உச்சயினி - நகரத்துள்ளோர் வெவ்விய துயர் எய்தியதனையும் ஆண்டு நிகழ்ந்த பிறவற்றையும் நிகழ்ந்தபடியே உணர்ந்தும், அவற்றை உள்ளத்தே அடக்கி அறியாதான் போன்று தன் பொச்சாப்பினைப் பகைவர் உணர்தலை அஞ்சி அரண்மனையகத்தே சென்று தன் பெருந்தேவியைத் தேற்றி உயர்ந்த அவ் வரண்மனையினுள்ளேயே ஒடுங்கியிருந்தமையையும் என்க.
 
(விளக்கம்) 45. உள்தாங்கு இயற்றி - உள்ளத்திலே தாங்குதலைச் செய்து; அடக்கி என்றவாறு,
   46, புணராதார் - பகைவர்; அவர் முன்னர்த் தன் பொச்சாப்பு வெளிப்படுதற்கு அஞ்சிஎன்க, பொச்சாப்பு - உவகை மகிழ்ச்சியிற்சோர்வு.
   48. வணங்குகொடி - வளைகின்ற பூங்கொடியை ஒத்த.
   49. பயந்து-ஈன்று. பத்தினி-ஈண்டு மனைவி என்னும் பொருட்டாய் நின்றது. தெருட்டி - தேற்றி,
   50. (47) பொச்சாப்பு அஞ்சி ஒடுங்கிய ஒடுக்கமும் என்க.கோயில்-அரண்மனை.