உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          நளிவரை அன்ன நளகிரி ஏறி
          ஒளிமணிக் கொடும்பூண் உதயண குமரனைப்
          பற்றுபு தம்மின் செற்றெனப் பகைகொண்டு
          வெற்ற வேந்தன் வெகுண்டெழல் இன்மையும
 
        51-54 : நளிவரை................எழலின்மையும்
 
(பொழிப்புரை) வெற்றியையுடைய அப்பிரச்சோதன மன்னன் அந்நிகழ்ச்சியை உணர்ந்தவுடண் உதயணன்பாற் பகைமைகொண்டு தன் நளகிரி என்னும் களிற்றியானையில் ஏறித் தன் படைஞரை நோக்கி ''ஒளிமிக்க மணிகளையுடைய வளைந்த அணிகலனை அணிந்த அவ்வுதயணகுமரனை நெருங்கிப் பற்றிக்கொண்டு வம்மின்'' என்று கட்டளையிட்டவனாய் சினந்துஎழுதல் இல்லாமையும் என்க.
 
(விளக்கம்) நளிவரை-பெரிய மலை. இது நளகிரி என்னும் களிற்றியானைக்குவமை.பிரச்சோதனன் இந்நிகழ்ச்சியினை உணர்ந்தவுடனே இங்ஙனம் வெகுண்டு எழுதல் வேண்டும்; அங்ஙனம் எழுதல் இல்லாமையும் என்க. எனவே, பிரச்சோதனனுக்கு உதயணன்பால் உட்பகை சிறிதும் இல்லை என்பதனையும் இதனால் அறிந்தும் என்பது கருத்து.