உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
         
     145   பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய
          தோழ ரோடு மிகப்பல கழறி
          வேற்றோன் போல மாற்றம் பெருக்கிப்
          படிவப் பள்ளிபயுள் பகலிடங் கழித்துக்
 
        145 - 148; பூசுபு...,..கழித்து
 
(பொழிப்புரை) அவ்விடத்தே வேற்றுவண்ணங்களைப் பூசிக்கொண்டு அவை உலர்ந்து கெடாத உடலோடே வந்த தன் தோழரோடு அயலான்போல மிகப்பலவாகப் பேசுமாற்றானே மொழிகளைப் பெருக்கி அத்தவப்பள்ளியிலேயே அற்றைப் பகற்பொழுதைப் போக்கி என்க,
 
(விளக்கம்) 145. பூசுபு - பூசி. யாக்கை-உடல்,பெயரிய - வந்த.
   147. வேற்றோன் - ஏதிலன்.மாற்றம் - மொழி,