உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
8. யூகி போதரவு |
|
தெய்வப்
படைக்கலங் கையகத் தடக்கி
வத்தவன் நன்னா டத்திசை
முன்னி வித்தக ஆணி
வேண்டுவயின் முருக்கி
வித்ணகத் திழிந்து விமானம் ஏறி 195
மண்ணகத் தியங்கன் மனத்தின்
வேண்டிய பூந்தார்
மார்பிற் புரந்தர குமரனிற்
போந்தனன் மாதோ புறநகர் கடந்தென்.
|
|
191 - 197 ; தெய்வ,,..,கடந்தென்
|
|
(பொழிப்புரை) கடவுட்டன்மையுடைய
படைக்கலன்களைக் கைக்கொண்டு உதயணகுமரனுடைய நாடிருக்கின்ற அத்திசை
நோக்கி இயந்திரத் தேரின் விசையாணியை வேண்டுமிடமெல்லாம் முறுக்கி
மண்ணுலகத்திலே தன் வானவூர்தியைச் செலுத்துதலை மனத்தின்கண்
விரும்பிய இந்திரன் மகனாகிய சயந்தனைப்போன்று அவ்வுச்சயினி
நகர்ப்புறத்தைக் கடந்து சென்றனன், என்க.
|
|
(விளக்கம்) 192 வத்தவன் ; உதயணன். நன்னாடிருக்கின்ற அத்திசையை
என்க. 193.வித்தகஆணி-வித்ககத்தொழிலானியற்றிய
விசையாணி. வேண்டுவயின்-முறுக்க வேண்டுமிடமெல்லாம்.
194. தனக்குரிய வானுலகத்தினை விட்டுக் கீழிறங்கி வானவூர்தியில் ஏறி
என்க. 195. மண்ணகத்து-நிலவுலகத்தின்கண். 196.
புரந்தரகுமரன்-இந்திரன் மகன்; அவன் சயந்தன் எனப்படுவான். 197.
புறநகர்-நகர்ப்புறம் என்றும் ஆறாம்வேற்றுமைத் தொகை நிலைத்தொடர்
முன்பின்னாக மாறி நின்றது, புறநகர்க் கடந்து போந்தனன் என மாறுக. மாது, ஒ
இரண்டும் அசைச்சொல்.
|