| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 8. யூகி  போதரவு | 
|  | 
| தெய்வப் 
      படைக்கலங் கையகத் தடக்கி வத்தவன் நன்னா டத்திசை 
      முன்னி
 வித்தக ஆணி 
      வேண்டுவயின் முருக்கி
 வித்ணகத் திழிந்து விமானம் ஏறி
 195  
       மண்ணகத் தியங்கன் மனத்தின் 
      வேண்டிய
 பூந்தார் 
      மார்பிற் புரந்தர குமரனிற்
 போந்தனன் மாதோ புறநகர் கடந்தென்.
 | 
|  | 
| 191 - 197 ; தெய்வ,,..,கடந்தென் | 
|  | 
| (பொழிப்புரை)  கடவுட்டன்மையுடைய 
      படைக்கலன்களைக் கைக்கொண்டு உதயணகுமரனுடைய நாடிருக்கின்ற அத்திசை 
      நோக்கி இயந்திரத் தேரின் விசையாணியை வேண்டுமிடமெல்லாம் முறுக்கி 
      மண்ணுலகத்திலே தன் வானவூர்தியைச் செலுத்துதலை மனத்தின்கண் 
      விரும்பிய இந்திரன் மகனாகிய சயந்தனைப்போன்று அவ்வுச்சயினி 
      நகர்ப்புறத்தைக் கடந்து சென்றனன், என்க. | 
|  | 
| (விளக்கம்)  192 வத்தவன் ; உதயணன். நன்னாடிருக்கின்ற  அத்திசையை
      என்க. 193.வித்தகஆணி-வித்ககத்தொழிலானியற்றிய 
      விசையாணி. வேண்டுவயின்-முறுக்க வேண்டுமிடமெல்லாம்.
 194. தனக்குரிய வானுலகத்தினை விட்டுக் கீழிறங்கி வானவூர்தியில் ஏறி 
      என்க.
 195. மண்ணகத்து-நிலவுலகத்தின்கண்.
 196. 
      புரந்தரகுமரன்-இந்திரன் மகன்; அவன் சயந்தன் எனப்படுவான்.
 197. 
      புறநகர்-நகர்ப்புறம் என்றும் ஆறாம்வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் 
      முன்பின்னாக மாறி நின்றது, புறநகர்க் கடந்து போந்தனன் என மாறுக. மாது, ஒ 
      இரண்டும் அசைச்சொல்.
 |