|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 9. யூகி சாக்காடு |  |  |  | வெஞ்சொல் வேட்டத் 
      தஞ்சுவரு சீற்றத்துச் சலம்புரி நெஞ்சிற் சவரர் புளிஞர்
 கலந்தனர் எழுந்து கானந் 
      தெரிவோர்
 ஊன்என 
      மலர்ந்த வேனில் இலவத்துக்
 140    கானத் 
      தகவயிற் கரந்தனன் இருந்த
 அரச குமரனை அகப்படுத் தார்ப்ப
 |  |  |  | 136 - 141 ; 
      வெஞ்சொல்,,,,,,,,ஆர்ப்ப |  |  |  | (பொழிப்புரை)   சொல் 
      முதலியவற்றையுடைய சவரரும் புளிஞருமாகிய வேட்டுவர் தம்முட்கூடி எழுந்து 
      அக்காட்டினை ஆராய்ந்து வந்தனராக ; அங்ஙனம் வரும் பொழுது 
      அதனூடே  ஓரிலவின் கீழே மறைந் திருந்த நம் அரசகுமரனை அவ்வேடர் 
      கண்டு சூழ்ந்து கொண்டு ஆரவாரியா நிற்ப, என்க. |  |  |  | (விளக்கம்)  136 - 137 ; 
      கேள்விக்கின்னாத வெவ்விய சொல்லினையும், வேட்டத்தினையும், பிறர்க்கு 
      அச்சம் வருதற்குக் காரணமான வெகுளியையும் வஞ்சணையே செய்யும் 
      நெஞ்சினையும் உடைய சவரரும் புளிஞரும் ஆகிய வேடர் என்க. சீற்றம்-வெகுளி. 
      சலம்-வஞ்சனை. சவரர் புளிஞர் என்பன வேட்டுவர் வகை. 138. 
      கலந்தனர்; முற்றெச்சம். தெரிவோர் - ஆராய்வோர். 
      ஆறுசெல்வோ ருளரோ என்றும், தமக்கிரையாகும் விலங்குகள் உளவோ
      என்றும் ஆராய்வோர்என்க.
 139, வேனிற் காலத்தே ஊன் 
      போலச் சிவப்பாக மலரும் இலவம் என்க.
 140. 
      அக்கானத் தகவயின் இலவத்துக் கரந்து இருந்த நம் மரசகுமரனை என்க. 
      கரந்தனன்; முற்றெச்சம்.
 141. தாம் சூழ்ந்து கொள்ளுமாற்றல் 
      தம்முட்படுத்தி மகிழ்ச்சி யாலே ஆரவாரிப்ப என்க.
 | 
 |