உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          உருமண் ணுவாவொடு வயந்தக குமரனைக்
          கருமக் கிடக்கை காண்வரக் காட்டி
          இன்னுழி வருகென அன்னவை பிறவும்
          ஒருபொருள் ஒழியா தவளொடுஞ் சூழ்ந்து
 
        246 - 249 ; உருமண்ணுவா..,,,,,,சூழ்ந்து
 
(பொழிப்புரை)   பின்னர் உருமண்ணுவாவும் வயந்தக குமரனுமாகிய அமைச்சர்க்கும் தான் செய்யக்கருதிய செயன் முறைகளைத் தெளியும்படி கூறுமின் என்றும் நீவிர் இன்ன விடத்தே வந்து என்னைக் காண்மின் என்றும் கூறி அத்தகைய பிறசெய்திகளையும், அச் சாங்கியத்தாயோடே ஒன்றும் விடாதபடி ஆராய்ந்து என்க.
 
(விளக்கம்) 247 கருமக்கிடக்கை - இன்னது செய்தபின்னர் இன்னது செய்தல் வேண்டும் என நெஞ்சத்துள்ளே முறைப் படுத்தப்பட்டுக் கிடந்த .கிடக்கை எனக, காண்வர-விளங்கும்படி.
    248. இன்னுழி-இன்ன இடத்தில்,
    249 அவளொடு- அச் சாங்கியத்தாயோடு,