|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 9. யூகி சாக்காடு |  |  |  | உருமண் ணுவாவொடு வயந்தக குமரனைக் கருமக் கிடக்கை காண்வரக் 
      காட்டி
 இன்னுழி வருகென 
      அன்னவை பிறவும்
 ஒருபொருள் ஒழியா தவளொடுஞ் சூழ்ந்து
 |  |  |  | 246 - 249 ; உருமண்ணுவா..,,,,,,சூழ்ந்து |  |  |  | (பொழிப்புரை)    பின்னர் 
      உருமண்ணுவாவும் வயந்தக குமரனுமாகிய அமைச்சர்க்கும் தான் செய்யக்கருதிய 
      செயன் முறைகளைத் தெளியும்படி கூறுமின் என்றும் நீவிர் இன்ன 
      விடத்தே வந்து என்னைக் காண்மின் என்றும் கூறி அத்தகைய 
      பிறசெய்திகளையும், அச் சாங்கியத்தாயோடே ஒன்றும் விடாதபடி ஆராய்ந்து 
      என்க. |  |  |  | (விளக்கம்)  247 
      கருமக்கிடக்கை - இன்னது செய்தபின்னர் இன்னது செய்தல் வேண்டும் என 
      நெஞ்சத்துள்ளே முறைப் படுத்தப்பட்டுக் கிடந்த .கிடக்கை எனக, 
      காண்வர-விளங்கும்படி. 248. இன்னுழி-இன்ன இடத்தில்,
 249 
      அவளொடு- அச் சாங்கியத்தாயோடு,
 | 
 |