(விளக்கம்) 291.
தவமுதுமகள் ; சாங்கியத்தாய், தலைமகற் குறுகி - உதயணன்பாற்
சென்று, 292. முன்னையிராமின் என்று முகனமர்ந்துரைத்து
என மாறுக. முகனமர்ந்து - முகத்தானே விரும்பி,
முன்னையிராமின் - பண்டிருந்தாற்போல இருமின். 293, அகன் அமர்
காதல் - நெஞ்சின் ஆழத்தே பொருந்திய அன்பு , ஆற்றுளி - முறைப்படி.
முகமன் கூறு முறைப்படி கூறி என்க. 294. காவலன் - உதயணன்.
296, தெரிமதியமைச்சன் என்றது யூகியை.
திறவிதல் - செவ்விதாக. மகள் ; சாங்கியத்தாய்.
9. யூகி சாக்காடு
முற்றிற்று,
|