|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 10 . யூகிக்கு விலாவித்தது |  |  |  | முகிழ்விரற் 
      பணைத்தோள் வாசவ 
      தத்தையை வகையுளிக் காண்கெனத்
 40    தேச 
      மன்னன் திறத்துளிக் 
      கூறக்
 கன்றுகாண் 
      கறவையிற் சென்றவட் 
      பொருந்தித்
 தளர்நடை இளமையில் 
      தான்கொண்டோம்பிய
 வளர்கொடி மருங்குல் வருந்தப் 
      புல்லி
 உவகைத் 
      தண்துளி ஊழ்ஊழ் சிதறி
 |  |  |  | 38 - 44 ; 
      முகிழ்விரல்,,,,,,,,,,சிதறி |  |  |  | (பொழிப்புரை)  காநதள் அரும்பு 
      போன்ற விரலையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய வாசவதத்தையை 
      முறைப்படி சென்று காண்மின்! என்று உதயணன் சாங்கியத்தாய்க்குக் கூறுந் 
      திறத்தாலே கூறா நிற்ப; அவளும் தனது கன்றை விரும்பிக் காணச்
      செல்லும் கறவைப்பசுப் போல விரைந்து சென்று அவ் வாசவதத்தையை எய்தி, 
      குழவிப் பருவந்தொட்டுத் தான் மேற்கொண்டு பாதுகாத்த அவளது கொடியிடை 
      வருந்தும்படி இறுகத் தழுவிக்கொண்டு இன்பக் கண்ணீர் உகுத்து நின்று 
      என்க, |  |  |  | (விளக்கம்)  38. முகிழ் - ஈண்டுக் காந்தளரும்பு, பணை - மூங்கில் 39 வகையுளி-முறைமையினாலே, காண்க - 
      காண்மின்,
 40. தேசமன்னவன் ; உதயணன். திறத்துளி - 
      கூறுந்திறத்தாலே.
 41 அவள் - அவ் 
      வாசவதத்தையை.
 42. வளரும் பூங்கொடி போன்ற நுண்ணிடை என்க. 
      ஆதரத்துடன் இறுக்கத் தழுவி என்றவாறு.
 43. உவகைக் 
      கண்ணீர் ஆகலின், ''தண்டுளி'' என்றார் ஊழூழ் முறைமுறையாக அடுத்தடுத்து 
      என்றவாறு.
 | 
 |