|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | முகிழ்விரற்
பணைத்தோள் வாசவ
தத்தையை வகையுளிக் காண்கெனத் 40 தேச
மன்னன் திறத்துளிக்
கூறக் கன்றுகாண்
கறவையிற் சென்றவட்
பொருந்தித்
தளர்நடை இளமையில்
தான்கொண்டோம்பிய
வளர்கொடி மருங்குல் வருந்தப்
புல்லி உவகைத்
தண்துளி ஊழ்ஊழ் சிதறி
| | 38 - 44 ;
முகிழ்விரல்,,,,,,,,,,சிதறி
| | (பொழிப்புரை) காநதள் அரும்பு
போன்ற விரலையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய வாசவதத்தையை
முறைப்படி சென்று காண்மின்! என்று உதயணன் சாங்கியத்தாய்க்குக் கூறுந்
திறத்தாலே கூறா நிற்ப; அவளும் தனது கன்றை விரும்பிக் காணச்
செல்லும் கறவைப்பசுப் போல விரைந்து சென்று அவ் வாசவதத்தையை எய்தி,
குழவிப் பருவந்தொட்டுத் தான் மேற்கொண்டு பாதுகாத்த அவளது கொடியிடை
வருந்தும்படி இறுகத் தழுவிக்கொண்டு இன்பக் கண்ணீர் உகுத்து நின்று
என்க,
| | (விளக்கம்) 38. முகிழ் - ஈண்டுக் காந்தளரும்பு, பணை - மூங்கில்
39 வகையுளி-முறைமையினாலே, காண்க -
காண்மின், 40. தேசமன்னவன் ; உதயணன். திறத்துளி -
கூறுந்திறத்தாலே. 41 அவள் - அவ்
வாசவதத்தையை. 42. வளரும் பூங்கொடி போன்ற நுண்ணிடை என்க.
ஆதரத்துடன் இறுக்கத் தழுவி என்றவாறு. 43. உவகைக்
கண்ணீர் ஆகலின், ''தண்டுளி'' என்றார் ஊழூழ் முறைமுறையாக அடுத்தடுத்து
என்றவாறு.
|
|