| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 10 . யூகிக்கு விலாவித்தது | 
|  | 
| 45    அமிர்துகடை 
      கடலின் அரவம் 
      ஓவாது
 தமர்தலை 
      மணந்த தன்பெருங் 
      கோயிற்
 கண்ணீர் 
      வெள்ளங் காலலைத் 
      தொழுக
 வட்டிகை 
      வாக்கின் வனப்பொடு 
      புணர்ந்த
 பட்டச் 
      சின்னுதற் பதினா றாயிரர்
 50    நும்மோய் 
      மார்களுந் தம்மின 
      மகளிரும்
 ஒருதுணை 
      ஆயமும் உடைவுகொண் டொழியப்
 | 
|  | 
| 45 
      - 51 அமிர்து.......உடைவு 
      கொண்டொழிய | 
|  | 
| (பொழிப்புரை)  அமிழ்தம் வரக் 
      கடையப்பட்ட பாற்கடல் போன்று இடையறாத ஆரவாரத்தோடே சுற்றத்தார் வந்து 
      குழுமிய அரண்மனையின்கண் . நீ பிரிந்த காலத்தே பொற்பட்ட மணிந்த 
      நெற்றியையுடையராகிய நின் தாயர் பதினாறாயிரவரும் அவர்
      தம்மினத்தாராய மகளிரும் நின் தோழியரும் நெஞ்சுடைந்து தங்கண்ணீர்
      வெள்ளமாகப் பெருகிக் காலை அலைத்து ஓடும்படி புலம்பா நிற்ப என்க. | 
|  | 
| (விளக்கம்)  45. 
      மந்தரமலையை மத்தாகக் .கொண்டு அமரரும் அசுரரும் திருப்பாற் கடலை 
      அமிழ்தெழக் கடைந்த பொழுது ஆண்டு எழுந்த ஆரவாரம் போல இடையறாது 
      அரண்மனையில் ஆரவாரம் உண்டாக 
      என்றவாறு. 46, தமர் 
      தலைமணந்த - சுற்றத்தாரால் குழுமப்பட்ட, பெருங்கோயில் - 
      அரண்மனை.
 48 - 50 
      ஓவியப் பலகையின்கண் எழுதிய சித்திரத்தின் திருத்தத்தைப் போல 
      அழகமைந்த நுந்தாய்மார், பட்டமணிந்த சிறிய நுதலையுடைய நுந்தாய்மார் 
      எனத் தனித்தனி கூட்டுக. வட்டிகை - ஓவியப்பலகை. வாக்கு - திருத்தம், 
      சின்னுதல் - சிறிய நெற்றி. நும்மோய் - நும் தாய்மார்; நும் என்றது, 
      அவள் உடன் பிறந்தாரையும் உளப்படுத்தியபடியாம், இனமகளிர் - அவரைச் 
      சார்ந்த மகளிர்,
 51. ஒப்பற்ற துணையாகிய 
      நின் தோழியரும் என்க. உடைவு - உடைதல்.
 |