உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
          நீலப் பொய்கைப் பாசடைத் தாமரை
          கதிர்வாய் திறந்து,,,,,,, ,,. ,,,, ,
          பகுவாய்க் கிண்கிணி பரட்டுமிசை ஆர்ப்பக்
    70    கோடுவாய் சிலம்பி்ற் கொழுஞ்சிகைக் குன்றின்
          பாடமை படுகால் பைய ஏறி
          நங்காய் காணுன் பெருமா னன்னகர்
          உந்தத் திசையதென் றொன்றப் பிறவும்
          உகப்பக்  கூறி மிகப்பல வருட்டி
 
        67 - 74; நீலப்பொய்கை........வருட்டி
 
(பொழிப்புரை) மேலும் அவள் துன்பத்தை அகற்றுதற்பொருட்டு 'நங்காய்! நின்காற் கிண்கிணி ஒலிக்கும்படி இச்செய்குன்றின் மேற் சாத்தப்பட்ட ஏணியின் மிசை மெல்ல ஏறி நோக்குதி; உந்தத் திசையிற் றோன்றுவதுதான் நின் தந்தையின் நல்ல உச்சைனி நகரமாகும் என்னும் இன்னோரன்ன பிறவும் அவள் மகிழும்படி மிகவும் பலவாகிய மொழி களையும் கூறித் தன்வயப்படுத்திப் பின்னர் என்க.
 
(விளக்கம்) 67-68. இவ்வடிக்கு முடிக்குஞ் சொல் சிதைந்தது போலும். நீலநிறமுடைய நீர்மிக்க வாவியிடத்துள்ள பசிய இலைகளோடு கூடிய தாமரை மலரினது ஒளியுடைய வாயைத் திறந்து என்க. இது (72) நன்னகர்க்கு அடையாகும் போலும்.
    69, பகுவாய் - பிளவுபட்டவாய். கிண்கிணி-சதங்கை, பரடுகாலில் ஓருறுப்பு.
    70-71, குவடு வாய்க்கப்பெற்ற இயற்கை மலையை ஒத்த கொழுவிய குவட்டி னையுடைய இச்செயற்கை மலையின்மேல் சார்த்திய படியமைந்த ஏணியில் மெல்ல ஏறி என்க. கோடு-குவடு; சிகரம்,சிலம்பு - மலை. சிகை - முடி; சிகரம். குன்றென்றது செய்குன்றினை. பைய-மெல்ல. படுகால்-ஏணி.
    72. நங்காய் - வாசவதத்தையே! உன்பெருமான் - உன்தந்தை. நகர் - உச்சைனி. இஃதிடமணித்தென்று ஆற்றியவாறு.
    73. உந்த;சுட்டு. திசையிலே தோன்றுவது என்க, ஒன்ற - அவள் மனம் தன்மொழியோடு பொருந்தும்படி இன்னோரன்ன பிறவும் என்க,
    74. வருட்.டி-வயப்படுத்து, பின்னர் என ஒருசொல் பெய்க