|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | நீலப் பொய்கைப் பாசடைத்
தாமரை கதிர்வாய்
திறந்து,,,,,,, ,,. ,,,,
, பகுவாய்க்
கிண்கிணி பரட்டுமிசை ஆர்ப்பக் 70
கோடுவாய் சிலம்பி்ற் கொழுஞ்சிகைக்
குன்றின் பாடமை
படுகால் பைய
ஏறி நங்காய்
காணுன் பெருமா
னன்னகர் உந்தத்
திசையதென் றொன்றப்
பிறவும்
உகப்பக் கூறி மிகப்பல வருட்டி
| | 67 - 74;
நீலப்பொய்கை........வருட்டி
| | (பொழிப்புரை) மேலும் அவள்
துன்பத்தை அகற்றுதற்பொருட்டு 'நங்காய்! நின்காற் கிண்கிணி
ஒலிக்கும்படி இச்செய்குன்றின் மேற் சாத்தப்பட்ட ஏணியின் மிசை மெல்ல
ஏறி நோக்குதி; உந்தத் திசையிற் றோன்றுவதுதான் நின் தந்தையின் நல்ல
உச்சைனி நகரமாகும் என்னும் இன்னோரன்ன பிறவும் அவள் மகிழும்படி மிகவும்
பலவாகிய மொழி களையும் கூறித் தன்வயப்படுத்திப் பின்னர்
என்க.
| | (விளக்கம்) 67-68.
இவ்வடிக்கு முடிக்குஞ் சொல் சிதைந்தது போலும். நீலநிறமுடைய நீர்மிக்க
வாவியிடத்துள்ள பசிய இலைகளோடு கூடிய தாமரை மலரினது ஒளியுடைய வாயைத்
திறந்து என்க. இது (72) நன்னகர்க்கு அடையாகும்
போலும். 69, பகுவாய் - பிளவுபட்டவாய். கிண்கிணி-சதங்கை,
பரடுகாலில் ஓருறுப்பு. 70-71, குவடு வாய்க்கப்பெற்ற இயற்கை மலையை
ஒத்த கொழுவிய குவட்டி னையுடைய இச்செயற்கை மலையின்மேல் சார்த்திய
படியமைந்த ஏணியில் மெல்ல ஏறி என்க. கோடு-குவடு; சிகரம்,சிலம்பு - மலை.
சிகை - முடி; சிகரம். குன்றென்றது செய்குன்றினை. பைய-மெல்ல.
படுகால்-ஏணி. 72. நங்காய் - வாசவதத்தையே!
உன்பெருமான் - உன்தந்தை. நகர் - உச்சைனி. இஃதிடமணித்தென்று
ஆற்றியவாறு. 73. உந்த;சுட்டு. திசையிலே தோன்றுவது என்க,
ஒன்ற
- அவள் மனம் தன்மொழியோடு பொருந்தும்படி இன்னோரன்ன பிறவும்
என்க, 74. வருட்.டி-வயப்படுத்து, பின்னர் என ஒருசொல்
பெய்க
|
|