| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 10 . யூகிக்கு விலாவித்தது | 
|  | 
| 75    உலகியல் வழாஅ 
      உருமண் ணுவாவொடு
 வலிகெழு நோன்றாள் வயந்தகற் 
      குறுகி
 நட்டோன் 
      துணிந்த கட்டழற் 
      கருமம்
 மந்தண மாக 
      அந்தணி உரைத்தலும்
 | 
|  | 
| 75-78 ; உலகியல், 
      ..,...உரைத்தலும் | 
|  | 
| (பொழிப்புரை)  அப் பாரபபன 
      மகளாகிய சாஙகியத்தாய் அவளினின்றும் நீங்கி உருமண்ணுவாவையும் 
      வயந்தகனையும் எய்தி யூகி இனிச் செய்யவேண்டியதாக ஆராய்ந்து துணிந்த 
      தீக்கொளுவும் செயலைப் பிறர் அறியாதபடி மறைவாக வுணர்த்தா நிற்ப 
      என்க, | 
|  | 
| (விளக்கம்)  75. உலகியலினின்றும் வழுவாத உருமண்ணுவா என்க. 76. வலிமை பொருந்திய தாளையுடைய வயந்தகன் 
      என்க.நோன்றாள் - இயல்படைச்சொல்.
 77.நட்டோன் - யூகி. துணிந்த-ஆராய்ந்து தெளிந்த. அழற்கருமம் என்றது,
      உதயணனிருக்கும் அரண்மனையில் தீக்கொளுவி வாசவதத்தையைப் பிரிக்குஞ்
      செயலை.
 78.. மந்தணம் - மறைவு. அந்தணி-பார்ப்பனி; 
      சாங்கியத்தாய்.
 |