உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
         
    75    உலகியல் வழாஅ உருமண் ணுவாவொடு
          வலிகெழு நோன்றாள் வயந்தகற் குறுகி
          நட்டோன் துணிந்த கட்டழற் கருமம்
          மந்தண மாக அந்தணி உரைத்தலும்
 
        75-78 ; உலகியல், ..,...உரைத்தலும்
 
(பொழிப்புரை) அப் பாரபபன மகளாகிய சாஙகியத்தாய் அவளினின்றும் நீங்கி உருமண்ணுவாவையும் வயந்தகனையும் எய்தி யூகி இனிச் செய்யவேண்டியதாக ஆராய்ந்து துணிந்த தீக்கொளுவும் செயலைப் பிறர் அறியாதபடி மறைவாக வுணர்த்தா நிற்ப என்க,
 
(விளக்கம்) 75. உலகியலினின்றும் வழுவாத உருமண்ணுவா என்க.    
    76. வலிமை பொருந்திய தாளையுடைய வயந்தகன் என்க.நோன்றாள் - இயல்படைச்சொல்.
    77.நட்டோன் - யூகி. துணிந்த-ஆராய்ந்து தெளிந்த. அழற்கருமம் என்றது, உதயணனிருக்கும் அரண்மனையில் தீக்கொளுவி வாசவதத்தையைப் பிரிக்குஞ் செயலை.
    78.. மந்தணம் - மறைவு. அந்தணி-பார்ப்பனி; சாங்கியத்தாய்.