உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
          உதயணன் மாழாந் துயிர்வாழ் வொழிகெனச்
          சிதர்பொறி எந்திரம் போலச் சிதர்ந்து
    110    தாரும் பூணு மார்பிடைத் துயல்வரச்
          சோருங் கண்ணினன் துளங்கிமெய்ம் மறப்ப
 
        108 - 111; உதயணன்.,,,,,,நோக்கி
 
(பொழிப்புரை) அவ்வுதயணன் மயங்கிக் 'கெடுக என் ஆயுள்' என்று மார்பிலணிந்த மலர்மாலைகளும் அணிகலன்களும்மார்பிற்கிடந்து புரளா நிற்ப, நீர்சோருங் கண்ணையுடையனாய்ச் சிதர்ந்துபோன இயந்திரம் போலப் பொறிகள் சிதர்ந்துபோக நடுங்கி வீழ்ந்து மூர்ச்சையடைய என்க.
 
(விளக்கம்) 108. மாழாந்து - மயங்கி ,என் உயிரினது வாழ்க்கை ஒழிவதாக என்று கூறி என்க.
    109. பொறி-மெய்வாய் முதலிய பொறிகள்; விசைகெட்ட எந்திரம் எனினுமாம், சிதர்ந்து - சிதைந்து,
    110, தார்-மாலை, பூண்-அணிகலன்.
    111. துளங்கி -நடுங்கி. மெய்ம்மறப்ப -மூர்ச்சையடைய.