|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | உதயணன் மாழாந் துயிர்வாழ்
வொழிகெனச்
சிதர்பொறி எந்திரம் போலச் சிதர்ந்து
110 தாரும் பூணு மார்பிடைத்
துயல்வரச் சோருங்
கண்ணினன் துளங்கிமெய்ம் மறப்ப
| | 108 - 111;
உதயணன்.,,,,,,நோக்கி
| | (பொழிப்புரை) அவ்வுதயணன் மயங்கிக் 'கெடுக என் ஆயுள்' என்று மார்பிலணிந்த
மலர்மாலைகளும் அணிகலன்களும்மார்பிற்கிடந்து புரளா நிற்ப, நீர்சோருங்
கண்ணையுடையனாய்ச் சிதர்ந்துபோன இயந்திரம் போலப் பொறிகள்
சிதர்ந்துபோக நடுங்கி வீழ்ந்து மூர்ச்சையடைய என்க.
| | (விளக்கம்) 108. மாழாந்து
- மயங்கி ,என் உயிரினது வாழ்க்கை ஒழிவதாக என்று கூறி
என்க. 109. பொறி-மெய்வாய் முதலிய பொறிகள்; விசைகெட்ட
எந்திரம் எனினுமாம், சிதர்ந்து - சிதைந்து,
110, தார்-மாலை, பூண்-அணிகலன். 111. துளங்கி -நடுங்கி.
மெய்ம்மறப்ப -மூர்ச்சையடைய.
|
|