|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | இடியே றுண்ட நாகம்
போலக் கொடியேர் சாயற் கொழுங்கவின் வாடப்
பூவிருங் கூந்தல் புல்லென விரிய
115 வாசவ தத்தையும் வத்தவன் மார்பின் மம்மர்
எய்திய மயக்க நோக்கி விம்மல் எய்தி
வியன்பெருங் கோயில் அழுகை ஆகுலங் கழுமிய
பின்றை
| | 112 -118;
இடி,,,,,,,,பின்றை
| | (பொழிப்புரை) உதயணன்
இங்ஙனம் - மூர்ச்சித்து வீழ்ந்தமை கண்ட வாசவதத்தையும் இடிஏறு
கேட்ட நாகப்பாம்பு போலத் தனது சாயலும் அழகும் வாடும்படியும்
கூந்தல் பொலிவிழந்து விரியாநிற்பவும் அவன் மார்பின்கண் சாய்ந்து
மயங்கி மூர்ச்சையுற்றாள் ; அதுகண்ட அரண்மனையினுள்ள ஏனை மகளிரும்
பிறரும் நெஞ்சம் பொருமி அழுதலாலே அவ்வரண்மனை அழுகையொலியான்
நிரம்பாநிற்பப் பின்னர் என்க.
| | (விளக்கம்) 112.
இடியேறுகேட்ட நாகம் என்க. 113, பூங்கொடிபோன்ற
மென்மையும் கொழுவிய அழகும் என்க. 114.
பூச்சூடப்பட்ட கரிய கூந்தல் புற்கென்று விரிய என்க
116 மம்மர்-மயக்கம்;மூர்ச்சை. அம்மயக்கத்தை நோக்கி என்க
117. அகன்ற பெரிய அரண்மனை
என்க. 118,ஆகுலம்-ஆரவாரம், கழுமிய-நிறைந்த ;
இகனைச் செயவெனெச்சமாக்குக.
|
|