|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | மாதாங்கு தடக்கை மன்னருள்
மன்னவன் நளிகதிர் மண்டில நாண்முதல்
தோன்றி ஒளியிடப் பெறாஅ உலகம் போல
135 இருளகம் புதைப்ப மருளகத் தெய்தித் தருமமுங்
கருமமுந் தளரச் சாஅய் ஆழின் அல்லதை அரசியல்
வழாமை வாழ்தல் ஆற்றேன் யானென
மயங்கியும்
| | 132-137 - ;
மாதாங்கு,,,,,,,,மயங்கியும்
| | (பொழிப்புரை) அவ்வுதயணன்
ஞாயிறுதோன்றி ஒளிசெய்யப்படாத உலகம்போலத் தனது நெஞ்சத்தைத் துயரஇருள்
மறைத்தொழிதலானே மயங்கி இனி யான் அறங்களும் செயல்களும் தளரும்படி
இளைப்புற்றுத துன்பக் கடலிலே அழுந்துதலன்றி, எனது அரசியலின்கண்
வழுவாமனின்று வாழகில்லேன் என்று அரற்றி மீண்டு மயங்கியும்
என்க.
| | (விளக்கம்) 132,யானையைத் தடுத்து வயமாக்கி நடத்தும்
பெரிய கையினையுடையவனும், அரசர்க்கரசனுமாகிய உதயணகுமரன் என்க.
133.. நளிகதிர் மண்டிலம்-செறிந்த கதிரையுடைய
ஞாயிற்று மண்டிலம். நாள்முதல் - வைகறைப்
பொழுது. ஞாயிறு - யூகிக்கும். 134. உலகம் உதயணன்
நெஞ்சத்திற்கும் உவமைகள். 135.
மருள்-மயக்கம். அகம்-நெஞ்சு, 136. தருமம்-அரசியலறம்.
கருமம்- அரசியற் செயல். சாஅய்- இளைத்து.
137. ஆழின் அல்லதை- துன்பத்திலே அழுந்துதலன்றி
|
|