|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 10 . யூகிக்கு விலாவித்தது |  |  |  | மாதாங்கு தடக்கை மன்னருள் 
      மன்னவன்
 நளிகதிர் மண்டில நாண்முதல் 
      தோன்றி
 ஒளியிடப் பெறாஅ உலகம் போல
 135    இருளகம் புதைப்ப மருளகத் தெய்தித்
 தருமமுங் 
      கருமமுந் தளரச் சாஅய்
 ஆழின் அல்லதை அரசியல் 
      வழாமை
 வாழ்தல் ஆற்றேன் யானென 
      மயங்கியும்
 |  |  |  | 132-137 -  ; 
      மாதாங்கு,,,,,,,,மயங்கியும் |  |  |  | (பொழிப்புரை)  அவ்வுதயணன் 
      ஞாயிறுதோன்றி ஒளிசெய்யப்படாத உலகம்போலத் தனது நெஞ்சத்தைத் துயரஇருள் 
      மறைத்தொழிதலானே மயங்கி இனி யான் அறங்களும் செயல்களும் தளரும்படி 
      இளைப்புற்றுத துன்பக் கடலிலே அழுந்துதலன்றி, எனது அரசியலின்கண் 
      வழுவாமனின்று வாழகில்லேன் என்று அரற்றி மீண்டு மயங்கியும் 
  என்க. |  |  |  | (விளக்கம்)     132,யானையைத் தடுத்து வயமாக்கி நடத்தும்
      பெரிய கையினையுடையவனும், அரசர்க்கரசனுமாகிய உதயணகுமரன் என்க. 133.. நளிகதிர் மண்டிலம்-செறிந்த கதிரையுடைய 
      ஞாயிற்று மண்டிலம். நாள்முதல் - வைகறைப் 
      பொழுது. ஞாயிறு - யூகிக்கும்.
 134. உலகம் உதயணன் 
      நெஞ்சத்திற்கும் உவமைகள்.
 135. 
      மருள்-மயக்கம். அகம்-நெஞ்சு,
 136. தருமம்-அரசியலறம். 
      கருமம்- அரசியற் செயல். சாஅய்- இளைத்து.
 137. ஆழின் அல்லதை- துன்பத்திலே அழுந்துதலன்றி
 | 
 |