|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 11. அவலந் தீர்ந்தது |  |  |  | விலாவணை 
      ஒழியான் வீணைக் கைவினை நிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகை 
      நினைந்து
 வைகல் தோறும் 
      வான்மதி மெலிவிற்
 பையுள் 
      கொண்ட படிமை நோக்கி
 5    அரும்பெறல் 
      அமைச்சரொ டொருங்குடன் குழீஇக்
 |  |  |  | 1 - 5 ; விலாவணை...,,,,,,,,,குழீஇ |  |  |  | (பொழிப்புரை)  இவ்வண்ணமாக 
      நெடுந்தகை யூகியை நினைத்து   புலம்புதல் தவிரானாய், நாள்தோறும் தேய்பிறை 
      போல மெலிந்து   வருத்தம் மேற்கொள்ளா நிற்ப, வனது உருவத்தை நோக்கிய 
        உருமண்ணுவா ஏனை அமைச்சரோடு ஒருங்குகூடி   ஆராய்ந்தபொழுது என்க. |  |  |  | (விளக்கம்)  1 - 2. 
      விலாவணை-அழுகை, வீணை வாசித்தலிற்   சிறந்தவனும், முத்துமாலை முதலிய 
      அணிகலன்களை அணிந்தவனும்   நெடிய புகழினையுடையவனும் ஆகிய உதயணகுமரன் என்க. 
      யூகியை    நினைந்தென்க. 3, வைகறோறும்- நாள்தோறும். மதி - 
      தேய்பிறை,
 4. பையுள்-துன்பம். படிமை-உருவம்.
 5. குழீஇ-கூடி.  
      ஆராய்ந்தபொழுது   என வருவித்துரைக்க.
 | 
 |