|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 11. அவலந் தீர்ந்தது |  |  |  | 15   வீழாக் காதலொடும் 
      
 
விரும்புவனன் ஆகிச்
 செய்பொருள் இதுவென ஐயந் தீர
 மன்னுயிர் ஞாலக் கின்னுயிர் 
      ஒக்கும்
 இறைபடு துன்பங் குறைபட 
      எறியும்
 மருந்தின் பிண்டந் 
      தெரிந்தனிர் கேண்மின்
 |  |  |  | [ உருமண்ணுவாவிண் கூற்று 
      ] 15 - 19. 
      வீழாக்கதல்,.,,,,,,,கேண்மின்
 |  |  |  | (பொழிப்புரை)  அக்கடமையை 
      ஏற்றுக் கோடற்கண் கெடாத   விருப்பமுடையனாய் அவ் ''உருமண்ணுவாவும், தன் 
      தோழரை    நோக்கி உணர்வுடையீரே! நமது வேந்தன்படும் துன்பந்தீரும்படி 
        அவனுக்கு ஊட்டற்பாலவாகிய மருந்தின் தொகுதியையான் கூறக்   
      கேண்மின்'' என்றான், என்க, |  |  |  | (விளக்கம்)  15. 
      வீழாக்காதல் - குறையாத அன்பு.  விரும்புவனன் - 
      விரும்புவோன். 16. செய்பொருள் - யாம்செய்யற்பால 
      செயல்.
 17. நிலைபெற்ற உயிர்த்தொகுதியையுடைய உலகத்திற்கு 
      உயிர் எனச்   சிறந்த அரசன் என்க, ''நெல்லும் உயிரன்றே நீரும் உயிர் - 
      அன்றே   மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்''(புறநா, 186)என்றார் 
      பிறரும்,  குறைபட -தணிய. எறியும் என்றது தீர்க்கும் என்பதுபட  
      நின்றது.    19, பிண்டம்-தொகுதி. தெரிந்தனிர் ; விளி. 
      அறிவுடையீரே என்று  விளித்தபடியாம்,
 | 
 |