|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 11. அவலந் தீர்ந்தது | | 15 வீழாக் காதலொடும்
விரும்புவனன் ஆகிச்
செய்பொருள் இதுவென ஐயந் தீர
மன்னுயிர் ஞாலக் கின்னுயிர்
ஒக்கும்
இறைபடு துன்பங் குறைபட
எறியும்
மருந்தின் பிண்டந்
தெரிந்தனிர் கேண்மின்
| |
[ உருமண்ணுவாவிண் கூற்று
] 15 - 19.
வீழாக்கதல்,.,,,,,,,கேண்மின்
| | (பொழிப்புரை) அக்கடமையை
ஏற்றுக் கோடற்கண் கெடாத விருப்பமுடையனாய் அவ் ''உருமண்ணுவாவும், தன்
தோழரை நோக்கி உணர்வுடையீரே! நமது வேந்தன்படும் துன்பந்தீரும்படி
அவனுக்கு ஊட்டற்பாலவாகிய மருந்தின் தொகுதியையான் கூறக்
கேண்மின்'' என்றான், என்க,
| | (விளக்கம்) 15.
வீழாக்காதல் - குறையாத அன்பு. விரும்புவனன் -
விரும்புவோன். 16. செய்பொருள் - யாம்செய்யற்பால
செயல். 17. நிலைபெற்ற உயிர்த்தொகுதியையுடைய உலகத்திற்கு
உயிர் எனச் சிறந்த அரசன் என்க, ''நெல்லும் உயிரன்றே நீரும் உயிர் -
அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்''(புறநா, 186)என்றார்
பிறரும், குறைபட -தணிய. எறியும் என்றது தீர்க்கும் என்பதுபட
நின்றது. 19, பிண்டம்-தொகுதி. தெரிந்தனிர் ; விளி.
அறிவுடையீரே என்று விளித்தபடியாம்,
|
|