| (விளக்கம்)     
20. 
      தணப்புஇல் - பிரிவில்லாத.   21, ஊடியவழி  அதனை உணர்த்தல் 
      ஒருதலையாகலின்   உணர்ப்புள்ளுறுத்த ஊடல் என்றார்; 'ஊடுதல் காமத்திற்கு 
      இன்ப' மாகலின்   அதனை அமிர்தம் என்றார், ஐம்பொறி நுகர்ச்சிகளையும் 
      உடைய   மகளிர்பால் ஊற்றின்பமே தலை சிறந்ததாதல் பற்றி அதனை 
      விதந்தோதுவார்   புணர்ப்புள்ளுறுத்த புரைபதம் என்றார். புரைபதம் பேணும் - 
      உயர்ந்த   செவ்வி  கெடாமற் பாதுகாக்கும் (மகளிர்) என்க. அஃதாவது 
      ஊடல்மிக்க   வழிக் கூடல் இன்பமின்றாதல் அறிந்து காமம் பதனழியாது 
      உணர்ந்து   கூடுகின்ற மகளிர் என்றவாறு. 
       23. 
      காரிகை - அழகு, பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கஞ் சிறந்ததன்றென்பது 
      தோன்ற காதன் மகளிர் என்றார்.
 
        24. தாமம் - மாலை. 
      புணர்தற்குக் காரணமான முலை என்க, பிணியுறீஇ - பிணைத்து. 25. 
      யாமக்கோட்டம் என்றது உவளகத்தை;  தப்புதற்கரிய சிறை என்க. கோடல் - 
      கொள்ளுதல்,
 
       26. வணங்காமன்னர் - பகையரசர். 
      வாழ்வுகெட முருக்கி அணங்குதலானே  வரும் பெருந்திறை என்க. அணங்கு - 
      துன்பம்.28, பூமலர்; இருபெயரொட்டு, பொதுளிய - நிரம்பிய, 
      புனலையுடைய   மலையின்கட் சோலை என்க.    
      ''
 
        29. கானம் - காடு, |