(விளக்கம்) 181.
ஒருப்பட்டு - உடம்பட்டு. 182. பெரிய இதழ்களையுடைய நறிய
மலர்மாலையினையுடைய உதயணனை என்க. 184. வள்ளல்; உதயணகுமரன். வள்ளல்
என்றது கலனும் பதியும் அருளுதற்குக் குறிப்பேதுவாய் நின்றது,
185.நிதியக்கலம் ; இருபெயரொட்டு ; நிதியமாகிய அணிகலன் என்க. பதி -
ஊர். 186, கொற்றமுரசின் - வெற்றி முரசத்தின்கண். கோடணை
முழக்கம். ஓசை-செய்தி.
11. அவலந்தீர்ந்தது முற்றிற்று,
|