|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 12. மாசன மகிழ்ந்தது | | 35 தேரும் வையமுஞ் சிவிகையும்
பண்டியும் ஊரும்
ஊர்தியும் பிடிகையும் உயர்வரை
மையணி வேழமு மாவும்
பண்ணி மடமொழி
மகளிரு மைந்தரும் ஏறிக்
கடன்மலை பெயருங் காலம்
போல 40 ............விடு தேனிற்
பூநகர் புல்லென
நீரணி பெருமலைச் சாரல் எய்தி
| | (நகரமாந்தர் மலைச்சாலை
அடைந்தது.)
35 - 41 ; தேரும்......எய்தி
| | (பொழிப்புரை) சயந்தியிலுள்ள மகளிரும் மைந்தரும் தேர் முதலிய ஊர்திகளை ஒப்பனைசெய்து
அவற்றில் ஏறிக், கடல் மலை நிலத்திலே பெயர்ந்து செல்லுமாறுபோல் அழகிய
சயந்தி நகரம் பொலிவிழக்கும்படி அருவியை அணிந்த பெரிய மலைச்சாரலை
அடைந்து என்க.
| | (விளக்கம்) 35.வையம் -
கூடாரப்பண்டி; தண்டிகை என்னும் ஊர்தியுமாம், சிவிகை - பல்லக்கு. பண்டி -
வண்டி, பிடிகை - ஒருவகை ஊர்தி, 36 - 37. மாவும் இன்னோரன்ன ஊரும்
ஊர்தியும் பண்ணிஎன மாறிக்கூட்டுக, உயர்ந்த மலையைநிகர்த்த மைபூசப்பட்ட
வேழம் என்க. வேழம் - யானை. மா - குதிரை. பண்ணி - பண்ணுறுத்தி; ஒப்பனை
செய்து, 38, மடமொழி மகளிர் - மடப்பமுடைய
மொழியையுடைய மகளிர். கடல்; மக்கட்கூட்டத்திற்கு உவமை. ஊழி
இறுதிக்காலத்தே கடல் ; மலை நிலத்திலே பெயர்தல்போல என்பது
கருத்து. 40. ஈண்டு ஒருசொல் விடுபட்டது.
பூநகர்-பொலியுடைய சயந்திநகர், நீர் - அருவிநீர்,
|
|