| (விளக்கம்)  67. 
      பூந்தண்சாாரல்-அழகிய குளிர்ந்த மலைச்சாரல். பொங்கு குலை - மிக்க 
      பூங்கொத்து; பரிய பூங்கொத்துமாம்.     68 கொழுமுகை - 
      கொழுத்த(பருத்த)அரும்பு.69, எழில்நலம்-அழகினது 
      நன்மை, இவை-இவ்வரும்புகள்.
 70  கொய்த பூவாகிய 
      காந்தட்பூ என்க.
 71 -72 இவை அம்மகளிர் 
      தம்மோதிரத்தை முன்னிலைப்படுத்துக் கூறுவன, எமக்கு அழகு செய்தல் 
      உடையீர் போல வாளா எம்மோடு உறையாநின்ற நீர் என்பது 
      கருத்து,
 72, இப்பொழுது நுமக்கும் அணி செய்தல் 
      உடையரைத் தலைப் பட்டீர் ஆதவின் ஒழிக என்று கூறிக் களைந்து கழித்தனராய் 
      என்க.
 74. கழுமணி-கழுவிய மணி; அராவப்பட்ட மணி 
      என்றவாறு.
 75. அப் பூக்களுக்குத் தங் கைவிரலழகு, 
      தோற்றமைக்குக் கவற்சி கொண்ட என்க .கவற்சி-கவலை. 
      காமத்துணைவியர்-காமக் கிழத்தியர்
 76, இம் மகளிரின் 
      இயல்பினை ஆராயின் இத்தகைய பேதைமைத்தே ஆகும் என்று கருதித்தம்முள் 
      நக்கென்க;என்னை ? பிறர் பேதைமை காண்டல் 
நகைக்கிடமாதலின்.
 77. காலக்காந்தள் - செவ்வியுடைய 
      காந்தள் மலர் .கதழ்விடம - மலர்ந்துள்ள இடம்.
 78. கோலக் கொழுவிரல்-அழகிய கொழுவிய நும் விரல் என்க, ஏல் ஒளி - 
      எழுச்சியையுடைய ஒளி .
 79. நுங்கைவிரல் எழில் அழிப்பதாகிய 
      அரும்பாந்தன்மையிலே நிலைத்து நிற்றல் ஆற்றாது,அஞ்சி 
      விரிந்தன என்க.கோட்டுப் பூ ஒளி கண்டு மலரும் இயல்புடையன ஆதல் 
      அறிக.   அஞ்சின ஆதலால்; அளிய என்க அளிய - இரங்கத் 
      தக்கன
 80. வேர்வு - சினம் ; ஆகுபெயர். ''பொள்ளென 
      ஆங்கே புறம் வேரார் (குறள்-487) 
      என்புழிப்போல
 81. இரந்தனர் ; 
      முற்றெச்சம். தெருட்டி-தெருளச் செய்து.
 |