உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           மாம்பொழிற் சோலை மகிழ்ந்துடண் ஆடும்
           ஒள்ளிழை மகளிர்க் கொளிர்மதி யன்ன
           சுள்ளிவெண் சூழ்ச்சி சுரும்புணத் தொடுத்து 
           நெறிப்பல கூந்தல் நேயந் தோன்றக்
     110    குறிப்பறிந் தணிந்து கூடினர் ஒருசார்
 
        106 - 110; ஒள்ளிழை,,,,,,,,கூடினரொருசார்
 
(பொழிப்புரை) அம் மகளிருடைய கேள்வர் நிலாப்போன்று ஒளிரும் மராமலர் மாலைகளைப் புதியனவாகத் தொடுத்துக் கொடுபோய் அவர்தம் கூந்தலிலே தமது அன்புடைமை தோன்றும்படி சூட்டி அவர்தம் குறிப்பறிந்று கூடிமகிழாநின்றனர் என்க.
 
(விளக்கம்) 107 ஓளிரும் திங்கள் போன்று ஒளிரும் சூழ்ச்சி என்க.
    108. சுள்ளி - மராமர மலர்;ஆகுபெயர், வெண்சூழ்ச்சி - வெள்ளிய மாலை. சுரும்பு - வண்டு. கரும்புணத் தொடுத்து என்றது புதிய மலர்களை எடுத்துத் தொடுத்து என்பது பட நின்றது,
    109, ,நெறிப்புடைய பலவாகிய கூந்தல் என்க, நெறிப்பு - அறல்படுதல். நேயம் - தம்மன்புடைமை,
    110, அம்மகளிரும் கூடுதற்கவாவும் செவ்வியைக் குறிப்பினாலே உணர்ந்து என்க.