|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 12. மாசன மகிழ்ந்தது | | மாம்பொழிற்
சோலை மகிழ்ந்துடண் ஆடும்
ஒள்ளிழை மகளிர்க் கொளிர்மதி யன்ன
சுள்ளிவெண் சூழ்ச்சி சுரும்புணத்
தொடுத்து
நெறிப்பல கூந்தல் நேயந் தோன்றக்
110 குறிப்பறிந் தணிந்து கூடினர் ஒருசார்
| | 106 - 110;
ஒள்ளிழை,,,,,,,,கூடினரொருசார்
| | (பொழிப்புரை) அம்
மகளிருடைய கேள்வர் நிலாப்போன்று ஒளிரும் மராமலர் மாலைகளைப்
புதியனவாகத் தொடுத்துக் கொடுபோய் அவர்தம் கூந்தலிலே தமது அன்புடைமை
தோன்றும்படி சூட்டி அவர்தம் குறிப்பறிந்று கூடிமகிழாநின்றனர்
என்க.
| | (விளக்கம்) 107 ஓளிரும்
திங்கள் போன்று ஒளிரும் சூழ்ச்சி என்க. 108. சுள்ளி -
மராமர மலர்;ஆகுபெயர், வெண்சூழ்ச்சி - வெள்ளிய மாலை. சுரும்பு - வண்டு.
கரும்புணத் தொடுத்து என்றது புதிய மலர்களை எடுத்துத் தொடுத்து என்பது பட
நின்றது, 109, ,நெறிப்புடைய பலவாகிய கூந்தல் என்க,
நெறிப்பு - அறல்படுதல். நேயம் - தம்மன்புடைமை,
110, அம்மகளிரும் கூடுதற்கவாவும் செவ்வியைக் குறிப்பினாலே
உணர்ந்து என்க.
|
|