| (விளக்கம்)  (8) 
      பள்ளி முன்னர் (உள்ளதும் 28-9) கயமரம் (இல்லாததும் ஆகியதோர்) காவினுள் 
      இரீஇ காவல் போற்றி எனச்சென்று இயையும். 1, மலைவயின் - 
      அம்மலைச்சாரலிடத்தே.
 2. வெந்திறல் - வெவ்விய ஆற்றல். 
      வேந்தன் ;  உதயணகுமரன். வீழ்பவை - 
      விரும்புவனவற்றை.
 3., 
      ஐம்பெருங்குழு - 'அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற்
      றூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் 
      படுமே,'
 3. எண் பேராயம் - 
      'கரணத் தியலவர் கருமகாரர் கனகச்சுற்றங் கடைகாப்பாளர் நகரமாந்தர் 
      நளிபடைத் தலைவர், யானை வீரர் இவுளி மறவர் இனையர் எண்பேராயம் என்ப' 
      இவை சிலப்பதிகாரத்தில் (5; 157 -60) அடியார்க்கு நல்லார் உரை 
      மேற்கோள்கள். இனி அந்நூலின் 
      அருபதவுரையாசிரியர்,
 'சாந்துபூக் கச்சாடை பாக்கிலை 
      கஞ்சுகநெய்
 ஆய்ந்த இவரெண்மர் 
      ஆயத்தார்-வேந்தர்க்கு
 மாசனம் 
      பார்ப்பார் மருத்தர்வா னிமித்தரோ
 டாசில் அவைக்களத்தார் ஐந்து'
 எனக் 
      காட்டுவர்,
 4. கவவி - சூழ்ந்து. விடாஅ - 
      விடாத.
 5, அருமைக்கு ஒத்த - அருமையுடையதாக மதித்துப் 
      பேணத் தகுந்த. அஞ்சு - அச்சம், காப்பின் 
      -காவலையுடைய.
 6. உரிமைச் சுற்றம் - உவளக மகளிர் 
      (அந்தப்புரத்து மகளிர்). உய்த்து - செலுத்தி
 7. தீது - 
      காதிகர்மம். இவை உயிர்ப்பண்புகளைக் கொல்லுதல் பற்றித் தீது
      எனப்பட்டன. அவையாவன ; ஞானவரணியம் தரிசனாவரணீயம் மோகனீயம்
      வேதனீயம் 
      என்பன.இவற்றை,
 ' 
      பாலனைய சிந்தை சுடரப் படர்செய் காதி
 நாலுமுட னேயறிந்து'
   எனவரும் சீவக சிந்தாமணியானும் (3062) உணர்க,தெரிபொருள் 
      கேள்வி  மூது அறிமுனிவன் - ஆராய்ந்தறியும் பொருட் கேள்வியானே 
      உணரப்படும் பழம்பொருளை அறிந்த முனிவன் என்க, மெய்யுணர்ந்தோன் என்பது 
      கருத்து.
 8, பள்ளி - தவக்குடில்.
 9 
      - 29 இனி இடைப்பிறவரலாக அத்தவப் பள்ளியின் முன்னுள்ள அப் பொழிலின் 
      மாண்பு கூறுகின்றார்.
 |