|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 13. குறிக்கோள் கேட்டது | | உறுவளங்
கவினி ஐந்திணை
மரனும் பைந்தளிர்க் கொடியும் 15
தந்துணைச் செல்வந் தலைத்தலை பெருகி
அருமதி முனிவர் நிருமிதம் போல
| | 13
- 16 ; உறுவளம்....,.,நிருமிதம் போல
| | (பொழிப்புரை) மெய்ஞ்ஞானமுடைய
துறவோர் தம் தவவலிமையானே படைத்துவைத்தாற் போன்று குறிஞ்சி முதலிய
ஐந்து திணைக்கும் உரியவாகிய மரமும் கொடியும் முதலிய எல்லாம் அவ்வொரு
திணையிடத்தேயே தத்தமளவில் இடந்தோறும் செழிப்புடையவாய்ப்
பெருகி மிக்க வளத்தானே அழகுற்றுத் திகழ்ந்தென்க.
| | (விளக்கம்) 13. உறு -
மிக்க. கவினி - அழகுற்று, 14. ஐந்திணை - குறிஞ்சிமுல்லை
மருதம் நெய்தல் பாலை என்பன. மரன் - மரம், மரமும் கொடியுமே கூறினும்
இனம்பற்றிப் புற்பூண்டு செடி முதலியனவும்
கொள்க 15. செல்வம். கிழங்கு
தளிர் மலர் காய்கனி, முதலியன. 16. அருமதி - மெய்யறிவு.
நிருமிதம் - படைப்பு.
|
|