உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
          உறுவளங் கவினி
          ஐந்திணை மரனும் பைந்தளிர்க் கொடியும்
     15    தந்துணைச் செல்வந் தலைத்தலை பெருகி
          அருமதி முனிவர் நிருமிதம் போல
 
        13 - 16 ; உறுவளம்....,.,நிருமிதம் போல
 
(பொழிப்புரை) மெய்ஞ்ஞானமுடைய துறவோர் தம் தவவலிமையானே படைத்துவைத்தாற் போன்று குறிஞ்சி முதலிய ஐந்து திணைக்கும் உரியவாகிய மரமும் கொடியும் முதலிய எல்லாம் அவ்வொரு திணையிடத்தேயே தத்தமளவில் இடந்தோறும் செழிப்புடையவாய்ப் பெருகி மிக்க வளத்தானே அழகுற்றுத் திகழ்ந்தென்க.
 
(விளக்கம்) 13. உறு - மிக்க. கவினி - அழகுற்று,
    14. ஐந்திணை - குறிஞ்சிமுல்லை மருதம் நெய்தல் பாலை என்பன. மரன் - மரம், மரமும் கொடியுமே கூறினும் இனம்பற்றிப் புற்பூண்டு செடி முதலியனவும் கொள்க    
    15. செல்வம். கிழங்கு தளிர் மலர் காய்கனி, முதலியன.
    16. அருமதி - மெய்யறிவு. நிருமிதம் - படைப்பு.