|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 13. குறிக்கோள் கேட்டது |  |  |  | 50   பசுமரஞ் சார்ந்தனை ஆதலின் 
      மற்றுநின்
 உசிர்ப்பெருந் 
      தோழன் உண்மையுங் கூட்டமும்,
 கண்ணகன் றுறைந்த கடிநாள் 
      அமையத்துத்
 திண்ணி 
      தாகுந் தெளிந்தனை யாகுமதி
 விரும்பிநீ பிடித்த வெண்மலர் வீழ்ச்சி
 55   பொருந்திநீ அளக்கும் பொருவில் 
      போகத்
 திடையூ றுண்மை 
      முடியத் தோன்றும்
 |  |  |  | ( 
      50 - 71 முனிவர் நிமித்தம் கூறுதல் 
      ) 50 
      - 56 ; பசுமரம்.....தோன்றும்
 |  |  |  | (பொழிப்புரை)  வேந்தனே! நீ 
      பசிய மரத்தினைச் சார்ந்திருக்கின்றனை ஆதலான், நின் உயிர் நண்பன் 
      உயிருடன் இருத்தலும், அந் நண்பன் நெடிதுநாள் நின்னைப் 
      பிரிந்துறைவானாயினும் ஒருகாலத்தே நின்னைக் கூடுதல் ஒருதலையே ஆகும்;  
      இவற்றைத் தெளிந்து கொள்வாயாக ! இனி நீ விரும்பி நினது கையிற் 
      பிடித்திருந்த வெள்ளிய மலர் நின்கையினின்றும் நழுவி  
      வீழ்ந்தமையான் நீ இப்பொழுது நுகராநின்ற ஒப்பற்ற காமநுகர்ச்சிக்கு 
      இடையூறு உண்டாகும் என்பது நன்கு விளங்கும்  (என்றார்) என்க. |  |  |  | (விளக்கம்)  50 - 51. 
      பசுமரம் என்றது,, உயிருடைய மரத்தை. நீ உயிர் மரத்தைச் 
      சார்ந்திருந்து நிமித்தம் கேட்டலான் நின் தோழன் உயிருடன் 
      இருக்கின்றான் என்பது உணரப்படும் என்பது கருத்து. 51, உசிர் 
      - உயிர் என்பதன் திரிபு, உயிர்போன்ற சிறந்த நண்பன் என்க. அவனாவான் 
      யூகி. எனவே அவன் மனத்தகத்தே யூகியை நினைந்து வருந்துதலையும் அம்முனிவர் 
      உணர்ந்து கொண்டமை விளங்கும், உண்மையும் - உயிருடன் 
      இருத்தலும் என்க. கூட்டம் - அவனோடு கூடும் கூட்டமும் 
      என்க,
 52., கண் அகன்று உறைந்த கடிநாள் அமையத்து - நீயிர் 
      இடத்தால் அகன்று உறையா நின்று கழிக்கும் எதிர்காலத்தே ஓரமையத்து என்க, 
      கடி.நாள்; வினைத்தொகை. கடியும் நாள் என விரிக்க. 
      கடிதல்-கழித்தல்.
 53. 
      தெளிந்தனையாகுமதி என்புழி: மதி, முன்னிலை அசைச்சொல்.
 55. பொருந்தி - நெஞ்சம் பொருந்தி என்க. அளக்கும் 
      - நுகரா நின்ற. போகம் - ஈண்டுக் காம 
      நுகர்ச்சி,
 56. முடிய - முற்ற; நன்கு என்றவாறு.
 | 
 |