|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 13. குறிக்கோள் கேட்டது | | 50 பசுமரஞ் சார்ந்தனை ஆதலின்
மற்றுநின் உசிர்ப்பெருந்
தோழன் உண்மையுங் கூட்டமும்,
கண்ணகன் றுறைந்த கடிநாள்
அமையத்துத் திண்ணி
தாகுந் தெளிந்தனை யாகுமதி
விரும்பிநீ பிடித்த வெண்மலர் வீழ்ச்சி
55 பொருந்திநீ அளக்கும் பொருவில்
போகத் திடையூ றுண்மை
முடியத் தோன்றும்
| | (
50 - 71 முனிவர் நிமித்தம் கூறுதல்
) 50
- 56 ; பசுமரம்.....தோன்றும்
| | (பொழிப்புரை) வேந்தனே! நீ
பசிய மரத்தினைச் சார்ந்திருக்கின்றனை ஆதலான், நின் உயிர் நண்பன்
உயிருடன் இருத்தலும், அந் நண்பன் நெடிதுநாள் நின்னைப்
பிரிந்துறைவானாயினும் ஒருகாலத்தே நின்னைக் கூடுதல் ஒருதலையே ஆகும்;
இவற்றைத் தெளிந்து கொள்வாயாக ! இனி நீ விரும்பி நினது கையிற்
பிடித்திருந்த வெள்ளிய மலர் நின்கையினின்றும் நழுவி
வீழ்ந்தமையான் நீ இப்பொழுது நுகராநின்ற ஒப்பற்ற காமநுகர்ச்சிக்கு
இடையூறு உண்டாகும் என்பது நன்கு விளங்கும் (என்றார்) என்க.
| | (விளக்கம்) 50 - 51.
பசுமரம் என்றது,, உயிருடைய மரத்தை. நீ உயிர் மரத்தைச்
சார்ந்திருந்து நிமித்தம் கேட்டலான் நின் தோழன் உயிருடன்
இருக்கின்றான் என்பது உணரப்படும் என்பது கருத்து. 51, உசிர்
- உயிர் என்பதன் திரிபு, உயிர்போன்ற சிறந்த நண்பன் என்க. அவனாவான்
யூகி. எனவே அவன் மனத்தகத்தே யூகியை நினைந்து வருந்துதலையும் அம்முனிவர்
உணர்ந்து கொண்டமை விளங்கும், உண்மையும் - உயிருடன்
இருத்தலும் என்க. கூட்டம் - அவனோடு கூடும் கூட்டமும்
என்க, 52., கண் அகன்று உறைந்த கடிநாள் அமையத்து - நீயிர்
இடத்தால் அகன்று உறையா நின்று கழிக்கும் எதிர்காலத்தே ஓரமையத்து என்க,
கடி.நாள்; வினைத்தொகை. கடியும் நாள் என விரிக்க.
கடிதல்-கழித்தல். 53.
தெளிந்தனையாகுமதி என்புழி: மதி, முன்னிலை அசைச்சொல்.
55. பொருந்தி - நெஞ்சம் பொருந்தி என்க. அளக்கும்
- நுகரா நின்ற. போகம் - ஈண்டுக் காம
நுகர்ச்சி, 56. முடிய - முற்ற; நன்கு என்றவாறு.
|
|