உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
13. குறிக்கோள் கேட்டது |
|
வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம் படாது
தாழ்ந்த கச்சைநின் தாள்முதல்
தங்கலிற் பிரிந்த
போகம் பெயர்த்தும் பெறுகுவை 60 நிலத்துமிசை
இருந்தனை ஆதலின் மற்றுநின்
தலைப்பெரு நகரமொடு நன்னாடு
தழீஇக் கொற்றங்
கோடலு முற்றிய தாகி
முன்னிய நின்றவை முடியந் தோன்றுமென
|
|
57
- 63 ; வீழ்ந்த,..,...தோன்றுமென்று
|
|
(பொழிப்புரை) அம்மலர் தானும்
வறுநிலத்தே வீழாமல் நினது கான்மேல் வீழ்ந்து கிடத்தலான் அங்ஙனம்
பிரிந்த இன்பநுகர்ச்சியை நீ மீண்டும் எய்துவை என்பது திண்ணம்; இனி நீ
நிலத்தின்மேல் இருக்கின்றனை; அதனால் நினது தலைநகரத் தோடே நல்ல
நாட்டினையும் நீ மீளவும் பெறுவாய்; மேலும் நினது வெற்றியும் முற்றியதாகி
எஞ்சிநின்ற நின் கருத்துக்களும் நிறைவுறும் என்பதும் நன்கு தோன்றும்
(என்றார்) என்க.
|
|
(விளக்கம்) 57.தாழக் கட்டிய கச்சையையுடைய நின் கான் மேல் என்க 62. கொற்றங்
கோடலும் - வெற்றி கொள்ளுதற் றொழிலும் என்க. 63. முன்னியநின்றவை -
எஞ்சி நின்ற கருத்துக்கள்.
|