(விளக்கம்) 54,
பொருவு இல் போகம் - ஒப்பற்ற இன்ப நுகர்ச்சி, ஒருமீக்
கூறிய-ஒப்பற்றதாகப் புகழப்பட்ட என்க. 55. உருவம் - அழகு.
56. வள்ளி - சங்கு வளையல். பனை - மூங்கில். அமர்நகை-விரும்புதற்குக்
காரணமான புன்முறுவல். 57. வாள் மணிக் கொடும் பூண் -
ஒளியுடைய மணிகளிழைத்த வளைந்த அணிகலன்கள்,
58. செய்யவாயினும் - சிவந்தனவானாலும், 59. ஆட்டினும் -
ஆடுதலானும். திளைப்பினும் - ஆடுதலானும். 60 - 61. பொலிவுடைய
குழையணிந்த ஏவன் மகளிர் பொன்வள்ளத்திலே ஏந்திக் கொணரும் தேன்
மணக்கும் தேறலோடு தெளிந்த மதுவினையும் நுகர்தலானும் என்க.
பொலங்கலம் - பொற்கலம். தேம் - தேன். தேறல் - கட்டெளிவு. மது -
பழச்சாற்றாலே இயற்றியதொரு கள். 62 - 63. செந்தாமரை
மலரின் சிவந்த இதழ் போன்று சிறந்த நிறத்தைப் பரப்பிய அழகிய நெடிய
கண் என்க, 64. கனிந்த காதல் - முதிர்ந்த காதல். முனிந்து
- ஊடி. ஈண்டு. ஒருசீர் விடுபட்டது.
65. பிரிவின்மையானே முயக்கும் இன்றி
என்க. 66, பிரிவரும் புள் - இருதலைப்புள். ஒருமையின் ஒட்டி
என்றது இரண்டறக் கலந்து என்றவாறு.
67. வண்டு ஆர் சோலை-வண்டுகள் ஆரவாரிக்கும்
சோலை. சோலையினையுடைய வளவிய மலைச்சாரலிலே என்க.
. 68. அயர்ப - செய்வர், உவகையுள் மகிழ்ந்து-இன்பத்துள்
மகிழ்ந்தென்க.
14.
உண்டாட்டு முற்றிற்று,
|