|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 15. விரிசிகை மாலைசூட்டு |  |  |  | 135    ஈயக் கொண்டுதன் 
      எழின்முடிக் 
      கேற்பச்
 சூடுதல் 
      தேற்றாள் சுற்றுபு திரியும்
 ஆடமைத் தோளி அலமரல் நோக்கி
 |  |  |  | 135 - 137 ; 
  ஈயக்கொண்டு.,,,,,அலமரனோக்கி |  |  |  | (பொழிப்புரை)  இங்ஙனம் 
      உதயணண் அளிப்ப அவ்விரிசிகை அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தன் 
      அழகிய முடிக்கேற்பச் சூடுதலை அறியாதவளாய்த் தன்மனம் போனபடி அவற்றை 
      முடியிலே சுற்றிக்கொண்டு திரிந்தாளாக; அங்ஙனம்  திரியா நின்ற 
      அவ்விரிசிகையினது மனச்சுழற்சியை அவ் வுதயணன் குறிப்பால்
      உணர்ந்து என்க. |  |  |  | (விளக்கம்)  135. அழகிய 
      தன் மயிர்முடிக்குப் பொருந்த. 136, சூடுதல் தேற்றாள் - 
      சூடுதலை அறியாதவளாய், சுற்றுபு - தன் மனம்போனவாறு சுற்றிக் 
      கொண்டென்க,
 137. ஆடமைத் தோளி - ஆடாநின்.ற மூங்கிலை 
      ஒத்த தோளையுடைய அவ்விரிசிகையினுடைய, அலமரல் - சுழற்சி, 
      மனக்கலக்கம்.
 | 
 |