|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 15. விரிசிகை மாலைசூட்டு | | 135 ஈயக் கொண்டுதன்
எழின்முடிக்
கேற்பச் சூடுதல்
தேற்றாள் சுற்றுபு திரியும்
ஆடமைத் தோளி அலமரல் நோக்கி
| | 135 - 137 ;
ஈயக்கொண்டு.,,,,,அலமரனோக்கி
| | (பொழிப்புரை) இங்ஙனம்
உதயணண் அளிப்ப அவ்விரிசிகை அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தன்
அழகிய முடிக்கேற்பச் சூடுதலை அறியாதவளாய்த் தன்மனம் போனபடி அவற்றை
முடியிலே சுற்றிக்கொண்டு திரிந்தாளாக; அங்ஙனம் திரியா நின்ற
அவ்விரிசிகையினது மனச்சுழற்சியை அவ் வுதயணன் குறிப்பால்
உணர்ந்து என்க.
| | (விளக்கம்) 135. அழகிய
தன் மயிர்முடிக்குப் பொருந்த. 136, சூடுதல் தேற்றாள் -
சூடுதலை அறியாதவளாய், சுற்றுபு - தன் மனம்போனவாறு சுற்றிக்
கொண்டென்க, 137. ஆடமைத் தோளி - ஆடாநின்.ற மூங்கிலை
ஒத்த தோளையுடைய அவ்விரிசிகையினுடைய, அலமரல் - சுழற்சி,
மனக்கலக்கம்.
|
|