| (விளக்கம்)  141. 
      சின்மலர் -சிலவாகிய விடுபூக்களை, பத்தி - வரிசை, கட்டுபு - கட்டி. 
      விடுபூக்களைச் சரமாகக் கட்டி என்க. 142. நீலநிறமுடைய 
      நாகப்பாம்பு தனது படத்தை விரித்தாற் போன்ற அழகுடைய சிகழிகை என்க. 
      சிகழிகை - மயிர்முடி, தான் ; அசை
 144. அம்செங் 
      கத்திகை - அழகிய சிவந்த மாலை, அடைச்சி -  செருகி.
 145.. பைங்கேழ்த் தாமம் - பசிய நிறமுடைய மாலை. 146, 
      இருளறு மதி - முழுத்திங்கள்.
 147. 
      மூங்கிலை ஒத்த தோளையுடைய அவ்விரிசிகையை அன்பின் அளைஇ என்றது அன்பாலே 
      கலந்து என்றவாறு இ.ஃது அவளை அவன் காதலித்தானாயவாறு 
      கூறிற்று
 148, புகன்று சூட்டினன் என மாறுக. புகன்று - 
      விரும்பி.
               15. விரிசிகை 
      மாலைசூட்டு 
      முற்றிற்று.--------------------------------
 |