(விளக்கம்) 5. வேண்டிடம் - தான் விரும்பும் இடத்தின்கண். விருப்புறு நீக்கம் -
விருப்பத்தால் உற்ற சிறு பிரிவு. 6. யாண்டு கழிந்தன்ன - ஓரியாண்டு
பிரிந்திருந்தாற் போல. அச்சிறு பிரிவு மிக நீளிதாய்த் தோன்றி வருத்த
என்பது கருத்து, 'உவக்காண்எங் காதலர்
செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர்
வது'
(குறள் . 1185) எனவும்,
'ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட்
சென்றார் வருநாள்வைத் தேங்கு
பவர்க்கு' (குறள் , 1269)
எனவும் வரும் அருமைத் திருக்குறள்களானே தலையன்புடைய காதலர்க்குச் சிறு
பிரிவும் நீளிதாய்த் தோன்றிப் பசப்புறுத்தி வருத்துமியல்புடைத்தாத
லறிக. 7. விழைவன - தன்னால் விரும்பப்பட்டன.
8. கிண் கிணி - சதங்கை, 9. நற்பூங்கொம்பர் - நல்ல பூங்கொடி,
இது தழையுங் கண்ணியும் ஏந்தி அசைந் தொல்கி நடக்கும் வாசவதத்தைக்கு
உவமை. நடைபெற்றாங்கு - நடந்தாற்போன்று. 10,
கவவுறு காதல் - அகத்தே பின்னிக் கிடந்த அன்பு, கண்ணுற -
காண்டற்கு, 11 - 12 பூரணையைப் பொருந்திய முழுவெண்டிங்கள்
போன்ற முகத்தினையும், ஒளியையுடைய வளையல் அணிந்த முன்கையினையும்
கண்னுக்கு நிறைந்த அழகுடைய பொற் குழையினையும் உடைய வாசவதத்தை
என்க. கதுமென - விரைந்து ; (குறிப்புமொழி)
|