|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 16. ஊடல் உணர்த்தியது | | மண்ணார் மார்வன் மாதரைச் சூட்டிய
காமர்ப் பிணையற் கதுப்பணி கனற்றத்
15 தாமரை யன்னதன் தகைமுக
மழுங்கா ஓடரி சிதரிய
ஒள்ளரி மழைக்கண் ஊடெரி
யுமிழு மொளியே போலச்
சிவப்புள் ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ
நயப்புள் ளுறுத்த வேட்கை நாணி
| | 13 - 19; மண்ணார்...................நாணி
| | (பொழிப்புரை) மார்வன்
விரிசிகைக்குச் சூட்டிய கூந்தலணி தன் நெஞ்சத்தைக் கனற்றுதலானே
செந்தாமரை மலரை ஒத்த அழகுடைய தன்முகத்தினது ஒளி மழுங்கா
நிற்பவும்,குளிர்ந்த கண்கள தீப் போலச் சிவப்பவும், சினமுடையளாய்த்
தான் அவ்வுதயணன்பாற் கொண்டுள்ள வேட்கைக்குத் தானே நாணியவளாய்
என்க,
| | (விளக்கம்) 13. மண் ஆர் மார்வன் - ஒப்பனை பொருந்திய மார்பையுடைய உதயணகுமரன்.
மாதரை - விரிசி்கைக்கு, 14. அழகிய மாலையாகிய கூந்தல் அணி என்க,
கனற்ற - நெஞ்சத்தைக கனலச் செய்தலானே. 15. தாமரை
- சிறப்பானே ஈண்டுச் செந்தாமரை மலரைக் குறித்து நின்றது, தகை - அழகு.
மழுங்கா - மழுங்கி. 16, ஓடாநின்ற வரிகள் சிதர்ந்த ஒள்ளிய
அழகிய குளிர்ந்தகண்கள் என்க, அரி இரண்டனுள் முன்னது வரி பின்னது அழகு
என்க. 17. அகத்தே கனலுமிழும் தீப்போல என்க. ஒளி -
நெருப்பு. 18, சிவப்பு - நிறம். செயிர்ப்பு - சினம்.
செயிர்ப்பு முந்துறீஇ என்றது, சினந்து என்றவாறு. 19.
நயத்தலைத் தன்னகத்தே கொண்ட வேட்கை என்க. வேட்கை - அவா. அதன்
தொழில் நயத்தலாகலின் நயப்புள்ளுறுத்த வேட்கை எனப்பட்டது. இங்ஙனம் பிற
மகளிரையும் விரும்பும் இயல்புடைய அவ்வுதயணன்பாற் செல்லாநின்ற தனது வேட்
கையை நாணி என்பது கருத்து.
|
|