உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
         
     120   வழித்தொழிற் கரும மனத்தின் எண்ணான்
          விழுத்தகு மாதரொடு விளையாட்டு விரும்பிக்
          கழிக்குவன் மாதோ கானத் தினிதென்.
 
        119 - 122 ; மணந்த.........................கானத்தினிதென
 
(பொழிப்புரை) இவ்வாற்றாற் கூடிய வேந்தண் தனது மரபுத் தொழிலாகிய அரசாட்சியையும் தன் நெஞ்சிற் கருதாத வனாய்ச் சிறப்பாற் றகுதி பெற்ற அவ்வாசவதத்தையோடு கூடி விளையாடுதலையே பெரிதும் விரும்பி அக்காட்டினூடே நீண்ட நாள் இனி தாக உறைவானாயினன் என்க,
 
(விளக்கம்) 119. தார்கெழு - மாலை பொருந்திய.   வேந்தன் ; அவ்வுதயண குமரன்,
    120, வழி - தன் மரபு, தொழிற் கருமம்; இருபெயரொட்டு,
    122. கழிக்குவன் - (காலங்) கழிப்பான், கானம் - காடு. மாது, ஓ - இரண்டும் அசைச்சொல்,

               16. ஊடல் உணர்த்தியது முற்றிற்று.