(விளக்கம்) 68.
பொய்ந்நிலம்-சுருங்கைவழி. பொறி-இயந்திரம்.
69 - 71, அரசனுக்கு முடிக்கலன் செய்யுங்கால் பொன்னைக்
களவு கொண்டு, அதற்கீடாக இரும்பையும் வெள்ளியையும் உருக்கிச்சேர்த்து
அம் முடிக்கலனைச் செய்து அக்குற்றத்தின் பொருட்டு விலங்கிட்டுக்
கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடைக் கிடந்த இரண்டு கள்வரை
விரைந்து அம் மாடத்துள்ளே புகுத்தி என்க. இங்ஙனம் புகுத்தியது அம்
மாடத்திலிருந்த மகளிரிருவரும் தீயான் மாண்டனர் என்று இக் கள்வர்
உடலைக் காட்டி உதயண குமரனை நம்பச்செய்தற்
பொருட்டென்க, 72, நலத்தகுமாதர் - வாசவதத்தையின். அவள்
அணிகலன் களைப் பின்னர் இறந்த வாசவதத்தையினுடையன இவை என உதயணனுக்குக்
காட்டும் பொருட்டு அம் மாடத்துள்ளிட்டு வைத்தனர் என்பது
கருத்து. 73, தலைக்கலம்- தலைக்கோல முதலிய
அணிகலன். 74. சித்திரத் தொழில் அமைந்த பெரிய பொறி
என்க, உய்த்து அகற்றி தள்ளிநீக்கி. 75.
துணைவி - மனைவியாகிய வாசவதத்தை. 76. தத்துவ முணர்ந்த சாங்கியத்தாய்
ஆகிய செவிலி என்க. பெருங்கோயிற்றலை அழல் மொய்த்துப்
புதைப்பினும் (அஞ்சாமல்) என்று மாறுக. புதைத்ததல் - மூடுதல்,
80. கருமக் கள்வர் - ஒரு கருமத்தின் பொருட்டுக் கள்வராய் நடித்த
அவ்வேடரை. கலங்கும்படி பொய்யாகத் தாக்கி என்க.
82, பொறிவரித் தவிசு-புள்ளியுடைய மான்தோலிருக்கையும், வரியுடைய புலித்
தோலிருக்கையும் என்க. 83, அரக்குறீஇய - நிறமூட்டிய
எனினுமாம். ஒடெரி-விரையும் நெருப்பு.
|