|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 17. தேவியைப் பிரித்தது |  |  |  | விம்முறு 
      நிலைமை நோக்கித் துன்னிய உறுதி வேண்டும் யூகி 
      மற்றிவன்
 இறுதி 
      செப்பி இவண்வந் தோனெனத்
 தாய்தெரிந் துரைப்பச் சேயிழை 
    தேறி
 |  |  |  | (சாங்கியத்தாய் 
      வாசவதத்தைக்கு இவன் யூகி என்று 
      உணர்த்துதல்) 156 -159 . விம்முறு.......தேறி
 |  |  |  | (பொழிப்புரை)  இவ் 
      வண்ணம் வாசவதத்தை ஐயுற்றுத் துன்பமுறா நின்ற நிலைமையினை அறிந்த 
      சாங்கியத்தாய் 'அன்னாய்! நின்னை எய்திய இவன் நுங்கட்கு எப்பொழுதும் 
      ஆக்கத்தையே விரும்பா நின்ற யூகி என்னும் அமைச்சனே ஆவன்; நுமக்கு நலஞ் 
      செயற் பொருட்டுத் தனது பொய்ச் சாவினை உலகுக்குக் காட்டி இவ்விடத்தே 
      தோன்றினான்' எனத்தெரியும்படி கூறா நிற்ப, அதுகேட்ட வாசவதத்தையும் 
      ஐயந் தெளிந்தவளாய் என்க. |  |  |  | (விளக்கம்)  156 
      -7.விம்முறு நிலைமை துன்னிய இவன் (நுங்கட்கு) உறுதிவேண்டும் யூகியே என 
      இயைக்க, உறுதிவேண்டும் -  ஆக்கத்தையே விரும்புகின்ற, அவ்வாக்கத்தின் 
      பொருட்டே தனது மாய இறுதியை உலகிற்குக்காட்டி இவ்விடத்தே வந்தான் 
      என விரித்து ஓதுக, 158. இறுதி - சாக்காடு. 
      செப்பி என்றது, காட்டி என்னும் பொருட்டு, இவண் - இவ்விடத்தே, வந்தோன் 
      என்புழி ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தது 
      செய்யுளாகலின்.
 159. தெரிந்துரைப்ப என்புழித் தெரிந்து 
      என்னும் எச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
 | 
 |