| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 17. தேவியைப் பிரித்தது | 
|  | 
| நேர்ந்த 
      மாதரை நெடுந்தகைக் 
      குருசில் பெயர்ந்த காலைப் பிழைப்பிலன் ஆகுதல்
 அறியு மாத்திர மவ்வழி 
      அமைத்துச்
 195    செறியத் செய்த 
      செவியுந் தானும்
 மறுதர வுடைய மாயச் சூழ்ச்சி
 உறுதியொ டொளித்தனர் உள்ளியது 
      முடித்தென்.
 | 
|  | 
| 192 - 197 ; 
      நேர்ந்த..............முடித்தென் | 
|  | 
| (பொழிப்புரை)  இவ்வண்ணம் 
      உடம்பட்ட வாசவதத்தைக்குக் குருசில் காட்டினின்றும் மீண்டகாலத்தே அவன் 
      தீங்கிலன் ஆதலை அறிவித்தற்பொருட்டு அதுகாறும் அவ்விடத்தேயே ஒரு 
      மறைவிடம் அமைத்துக்கொண்டு அவ்வியூகியும் செவிலித் தாயும் 
      அவ்வாசவதத்தையுடனே, அப்பொய்யாகிய சூழ்ச்சிக்குப் பொருந்தத் தாம் 
      எண்ணிய காரியத்தை முடித்துக்கொண்டு மறைந்து உறைவாராயினர் 
  என்க. | 
|  | 
| (விளக்கம்)  192. 
      இவ்வாற்றால் உடம்பட்ட வாசவதத்தைக்கு என்க, மாதரை என்புழி இரண்டனுருபு 
      நான்காவதன்கண் மயங்கிற்று. நீண்ட புகழையுடைய தலைவனாகிய உதயகணன் 
      கானத்தினின்றும் மீண்டகாலத்தே தீங்கிலனாய் உயிரோடிடுத்தலை 
      அறிவிக்கும் பொருட்டு என்க. அங்ஙனம் அறிவியாதுவிடின் வாசவதத்தை 
      தேறுதலரிதாகலின் அங்ஙனம் செய்தனர் என்க. அறியும் ;
      அறிவிக்கும் எனப் பிறவினையாக்குக. 196. மறுதரவு - மீட்சி, 
      மீட்சியைத் தன்பாலுடைய குழ்ச்சித் துணிவோடே உள்ளியது முடித்து ஒளித்தனர் 
      என்க, உள்ளியதுப் கருதிய செயல். அ.ஃதாவது உதயணனிடமிருந்து
      வாசவதத்தையை - 
      பிரித்தல்.
 17, தேவியைப் பிரித்தது 
      முற்றிற்று
 ----------------------------
 |