உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           நேர்ந்த மாதரை நெடுந்தகைக் குருசில்
           பெயர்ந்த காலைப் பிழைப்பிலன் ஆகுதல்
           அறியு மாத்திர மவ்வழி அமைத்துச்
     195    செறியத் செய்த செவியுந் தானும்
           மறுதர வுடைய மாயச் சூழ்ச்சி
           உறுதியொ டொளித்தனர் உள்ளியது முடித்தென்.
 
           192 - 197 ; நேர்ந்த..............முடித்தென்
 
(பொழிப்புரை) இவ்வண்ணம் உடம்பட்ட வாசவதத்தைக்குக் குருசில் காட்டினின்றும் மீண்டகாலத்தே அவன் தீங்கிலன் ஆதலை அறிவித்தற்பொருட்டு அதுகாறும் அவ்விடத்தேயே ஒரு மறைவிடம் அமைத்துக்கொண்டு அவ்வியூகியும் செவிலித் தாயும் அவ்வாசவதத்தையுடனே, அப்பொய்யாகிய சூழ்ச்சிக்குப் பொருந்தத் தாம் எண்ணிய காரியத்தை முடித்துக்கொண்டு மறைந்து உறைவாராயினர் என்க.
 
(விளக்கம்) 192. இவ்வாற்றால் உடம்பட்ட வாசவதத்தைக்கு என்க, மாதரை என்புழி இரண்டனுருபு நான்காவதன்கண் மயங்கிற்று. நீண்ட புகழையுடைய தலைவனாகிய உதயகணன் கானத்தினின்றும் மீண்டகாலத்தே தீங்கிலனாய் உயிரோடிடுத்தலை அறிவிக்கும் பொருட்டு என்க. அங்ஙனம் அறிவியாதுவிடின் வாசவதத்தை தேறுதலரிதாகலின் அங்ஙனம் செய்தனர் என்க. அறியும் ; அறிவிக்கும் எனப் பிறவினையாக்குக.
    196. மறுதரவு - மீட்சி, மீட்சியைத் தன்பாலுடைய குழ்ச்சித் துணிவோடே உள்ளியது முடித்து ஒளித்தனர் என்க, உள்ளியதுப் கருதிய செயல். அ.ஃதாவது உதயணனிடமிருந்து வாசவதத்தையை - பிரித்தல்.
              17, தேவியைப் பிரித்தது முற்றிற்று
                ----------------------------