| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 18.  கோயில் வேவு | 
|  | 
| கண்டா னாகித் திண்தேர் உதயணன்
 55   
      வண்டார் கோதை வாசவ 
      தத்தை
 இருந்த 
      இடமும் பரந்தெரி 
      தோன்றஅவட்,
 கேதுகொல் உற்றதென் றெஞ்சிய 
      நெஞ்சின்
 ஊறவண் 
      உண்மை தேறின 
      னாகிச்
 செல்லா 
      நின்ற காலை
 | 
|  | 
| 54 - 59; 
      கண்டானாகி..........காலை | 
|  | 
| (பொழிப்புரை)  அவ்வுதயணகுமரன் 
      அப்புகைப் படலத்தைக்   கண்டதோடன்றி மேலும் வாசவதத்தை இருந்த மாடத்தின் 
      மீதும்   தீப்பரவித் தோன்றா நிற்பவும் கண்டு அவளுக்கு யாதுற்றதோ? 
        என்று பெரிதும் கலங்காநிற்ப எஞ்சிய சிறு கூற்றையுடைய   
      நெஞ்சாலே அவளிருந்த மாடத்தினும் இடையூறு உண்டாதலைத்   தெளிந்து 
      செல்லாநின்ற பொழுது என்க, | 
|  | 
| (விளக்கம்)  54. திண்ணிய தேரினையுடைய உதயணன் என்க. 55. வண்டுகள் 
      முரலாநின்ற மலர் மாலையினையுடைய
 வாசவதத்தை என்க.
 56, எரி பரந்துதோன்ற எனமாறுக. எரி - நெருப்பு.
 57.அவட்கு - அவ்வாசவதத்தைக்கு. உற்றதென்று கலங்கி
 அக்கலக்கத்தினின்றும் எஞ்சிய (கூறாகிய)  நெஞ்சினாலே - நெஞ்சினைக் 
      கலக்கமே பெரிதும  கவர்ந்துகொள்ள எஞ்சிய சிறு கூறாகிய நெஞ்சினாலே 
  தெளிந்து என்பது கருத்து,
 |