உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
18. கோயில் வேவு |
|
கண்டா னாகித் திண்தேர் உதயணன் 55
வண்டார் கோதை வாசவ
தத்தை இருந்த
இடமும் பரந்தெரி
தோன்றஅவட்,
கேதுகொல் உற்றதென் றெஞ்சிய
நெஞ்சின் ஊறவண்
உண்மை தேறின
னாகிச் செல்லா
நின்ற காலை
|
|
54 - 59;
கண்டானாகி..........காலை
|
|
(பொழிப்புரை) அவ்வுதயணகுமரன்
அப்புகைப் படலத்தைக் கண்டதோடன்றி மேலும் வாசவதத்தை இருந்த மாடத்தின்
மீதும் தீப்பரவித் தோன்றா நிற்பவும் கண்டு அவளுக்கு யாதுற்றதோ?
என்று பெரிதும் கலங்காநிற்ப எஞ்சிய சிறு கூற்றையுடைய
நெஞ்சாலே அவளிருந்த மாடத்தினும் இடையூறு உண்டாதலைத் தெளிந்து
செல்லாநின்ற பொழுது என்க,
|
|
(விளக்கம்) 54. திண்ணிய தேரினையுடைய உதயணன் என்க. 55. வண்டுகள்
முரலாநின்ற மலர் மாலையினையுடைய வாசவதத்தை என்க.
56, எரி பரந்துதோன்ற எனமாறுக. எரி - நெருப்பு.
57.அவட்கு - அவ்வாசவதத்தைக்கு. உற்றதென்று கலங்கி
அக்கலக்கத்தினின்றும் எஞ்சிய (கூறாகிய) நெஞ்சினாலே - நெஞ்சினைக்
கலக்கமே பெரிதும கவர்ந்துகொள்ள எஞ்சிய சிறு கூறாகிய நெஞ்சினாலே
தெளிந்து என்பது கருத்து,
|