உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
18. கோயில் வேவு |
|
வல்லே 60 மாய மள்ளரை ஆயமொ
டோட்டி உருமண்
ணுவாவும் வயந்தக
குமரனும் பொருமுரண்
அண்ணல் புகுதரும்
வாயிலுள்
பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப
|
|
59 - 63 :
வல்லே.........நிற்ப
|
|
(பொழிப்புரை) பொய்மையையுடைய
பகைமறவரைக் கூட்டத்தோடே ஓடும்படி அவருடன் பொய்ப்போர்
புரிந்து உருமண்ணுவாவும் வயந்தக குமரனும் அண்ணல் வந்து புகுதற்குரிய
வாயிலினிடத்தே அவன் புகுங்கால் உண்டாகும் சோர்வினைத் தவிர்த்து அவனை
உய்யக்கோடல் செய்வாராய் விரைந்துவந்து நிற்ப
என்க,
|
|
(விளக்கம்) 56. வல்லே - விரைந்து
6o,மாய மள்ளர் - பொய்யாகப் பகைவர் போல வந்து அரண்மலையில் தீக்கொளுவிய மறவர். ஆயம் - கூட்டம்,
62. பொருமுரண் - போர்செய்யும் வலிமை. அண்ணல் ; உதயணகுமரன். புகும்பொழுது அவ்வாயிலின்கண் துனப மிகுதியாலே தீயினுட்புகுதலும் கூடும் அன்றே! அத்தகைய பொச்சாப்பு நேராதபடிபாது காவல் செய்தனராய் நிற்ப என்க.
63, பொச்சாப்பு - ஈண்டுத் துன்பமிகுதியால் உண்டாகும் சோர்வு.
|