உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
          வல்லே
     60   மாய மள்ளரை ஆயமொ டோட்டி
          உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
          பொருமுரண் அண்ணல் புகுதரும் வாயிலுள்
          பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப
 
          59 - 63 : வல்லே.........நிற்ப
 
(பொழிப்புரை) பொய்மையையுடைய பகைமறவரைக் கூட்டத்தோடே ஓடும்படி அவருடன் பொய்ப்போர் புரிந்து உருமண்ணுவாவும் வயந்தக குமரனும் அண்ணல் வந்து புகுதற்குரிய வாயிலினிடத்தே அவன் புகுங்கால் உண்டாகும் சோர்வினைத் தவிர்த்து அவனை உய்யக்கோடல் செய்வாராய் விரைந்துவந்து நிற்ப என்க,
 
(விளக்கம்) 56. வல்லே - விரைந்து
     6o,மாய மள்ளர் - பொய்யாகப் பகைவர் போல வந்து அரண்மலையில் தீக்கொளுவிய மறவர்.  ஆயம் - கூட்டம்,
     62. பொருமுரண் - போர்செய்யும் வலிமை. அண்ணல் ; உதயணகுமரன்.   புகும்பொழுது அவ்வாயிலின்கண் துனப மிகுதியாலே தீயினுட்புகுதலும் கூடும் அன்றே!   அத்தகைய பொச்சாப்பு நேராதபடிபாது காவல் செய்தனராய் நிற்ப என்க.
     63, பொச்சாப்பு - ஈண்டுத் துன்பமிகுதியால் உண்டாகும்  சோர்வு.