| (விளக்கம்)  அவலம் - 
      நினைவிழப்பு;அவலம் கவலை கையாறு அழுங்கல் என்னும் துன்பத்தின் நால்வகை 
      நிலையுள் ஈண்டு அவலம்   என்றது மூன்றா நிலையாகிய கையாற்றினை என்க, 
      அதனைத் தீர்த்தலாவது  மீண்டும் உணர்ச்சிவரச் செய்தல். கடுங்கூட்டு - 
      கடிதிற்றீர்க்கும் மருந்துக்   கூட்.டு. கையிலே கொண்ட அப்போகக் கலவையை 
      என்க. (108) போகக்   கலவை - நுகர்ச்சிக்குக் காரணமான உணர்ச்சியை 
      ஊட்டும் அக்   கூட்டுமருந்து. ஆகம்-மார்பு. அப்பி - பூசி. 109, சந்தனங் கலந்த அழகிய குளிர்ந்த பனிநீர் என்க.
 110. தண்தளி - குளிர்ந்த துளி. வண்டின மிரிய (115) வீச   
      என இயைக்க.
 111. குளிரி - ஒரு நீர்ப்பூடு; அதனை 
      இக்காலத்தார்  துளிரி எனவழங்குப, செங்கழு நீருமாம். கொடி - 
      ஒழுங்கு.
 112. விசிறியின் பக்கங்கள் தட்டுப் போறலின் - 
      தட்டம் எனப்பட்டன.
 113, பிடிகை - கைப்பிடி,
 114. பொன்னலகு - பொன்னாற் செய்த கதிர் (குஞ்சம்,   
      சாந்தாற்றி - ஒருவகை விசிறி;பூசிய சந்தனம் புலர்வதன் பொருட்டு  
      வீசப்படுவதொரு விசிறி என்க.
 115-17. 
      தொன்முறை.......அரற்றா - பண்டும் பண்டும் முறையே   பிறவிகள் தோறும் 
      தொடர்ந்து அடிப்பட்டு வந்த காதற்   கேண்மையையுடைய தன்மனைக் கிழத்தியினது 
      பெயரை வாய்விட்டுச்  சொல்லிப் புலம்பியபடியே என்க.
 117. மறப்படை மன்னன்- வீரமிக்க படையையுடைய   உதயண 
      மன்னன். அரற்றா - அரற்றி,
 118-119. இனியவரிடை செங்கண் 
      ஏற்று எழுந்தனன் என மாறுக. இனியவர் - தோழர்.
      தாமரை மலர் மலர்வது போலக் கண் மலர்ந்து எழுந்தனன் என்க.
                
             18, கோயில் வேவு 
      முற்றிற்று,
 
 |