(விளக்கம்) அவலம் -
நினைவிழப்பு;அவலம் கவலை கையாறு அழுங்கல் என்னும் துன்பத்தின் நால்வகை
நிலையுள் ஈண்டு அவலம் என்றது மூன்றா நிலையாகிய கையாற்றினை என்க,
அதனைத் தீர்த்தலாவது மீண்டும் உணர்ச்சிவரச் செய்தல். கடுங்கூட்டு -
கடிதிற்றீர்க்கும் மருந்துக் கூட்.டு. கையிலே கொண்ட அப்போகக் கலவையை
என்க. (108) போகக் கலவை - நுகர்ச்சிக்குக் காரணமான உணர்ச்சியை
ஊட்டும் அக் கூட்டுமருந்து. ஆகம்-மார்பு. அப்பி - பூசி.
109, சந்தனங் கலந்த அழகிய குளிர்ந்த பனிநீர் என்க.
110. தண்தளி - குளிர்ந்த துளி. வண்டின மிரிய (115) வீச
என இயைக்க. 111. குளிரி - ஒரு நீர்ப்பூடு; அதனை
இக்காலத்தார் துளிரி எனவழங்குப, செங்கழு நீருமாம். கொடி -
ஒழுங்கு. 112. விசிறியின் பக்கங்கள் தட்டுப் போறலின் -
தட்டம் எனப்பட்டன. 113, பிடிகை - கைப்பிடி,
114. பொன்னலகு - பொன்னாற் செய்த கதிர் (குஞ்சம்,
சாந்தாற்றி - ஒருவகை விசிறி;பூசிய சந்தனம் புலர்வதன் பொருட்டு
வீசப்படுவதொரு விசிறி என்க. 115-17.
தொன்முறை.......அரற்றா - பண்டும் பண்டும் முறையே பிறவிகள் தோறும்
தொடர்ந்து அடிப்பட்டு வந்த காதற் கேண்மையையுடைய தன்மனைக் கிழத்தியினது
பெயரை வாய்விட்டுச் சொல்லிப் புலம்பியபடியே என்க.
117. மறப்படை மன்னன்- வீரமிக்க படையையுடைய உதயண
மன்னன். அரற்றா - அரற்றி, 118-119. இனியவரிடை செங்கண்
ஏற்று எழுந்தனன் என மாறுக. இனியவர் - தோழர்.
தாமரை மலர் மலர்வது போலக் கண் மலர்ந்து எழுந்தனன் என்க.
18, கோயில் வேவு
முற்றிற்று,
|