|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 19. தேவிக்கு விலாவித்தது |  |  |  | அங்கண் மாநிலத் தகன்றுயிர் வாழ்வோர் வன்க ணாளர் என்றுபண் 
      டுரைப்போய்
 நின்கண் 
      அம்மொழி நிற்ப என்கண்
 175    புன்கண் 
      நோக்காது போதியோ எனவும்
 |  |  |  | 172 -175 ; அங்கண்.......போதியோ |  |  |  | (பொழிப்புரை)  ''இவ்வுலகத்தே 
      காதலரைப் பிரிந்து வாழும் இயல்  புடையோர் வன்கண்மையுடையோரே ஆவர்'' 
      என்று பண்டு   நீயே கூறுவை, அவ்வசைமொழி நின்மேல் நிற்கும்படி 
      எம்பாற்  றோன்றிய துன்பத்தையும் நோக்காயாய்ப் பிரிந்து போயினையோ! 
        என்றும் என்க, |  |  |  | (விளக்கம்)  172, 
      காதலரைப் பிரிந்து தனித்து வாழ்வோர் என்க. 174. 
      அம்மொழி -அவ்வசைமொழி.
 175. புன்கண்-துன்பம்.
 | 
 |