உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          அங்கண் மாநிலத் தகன்றுயிர் வாழ்வோர்
          வன்க ணாளர் என்றுபண் டுரைப்போய்
          நின்கண் அம்மொழி நிற்ப என்கண்
    175    புன்கண் நோக்காது போதியோ எனவும்
 
        172 -175 ; அங்கண்.......போதியோ
 
(பொழிப்புரை) ''இவ்வுலகத்தே காதலரைப் பிரிந்து வாழும் இயல் புடையோர் வன்கண்மையுடையோரே ஆவர்'' என்று பண்டு நீயே கூறுவை, அவ்வசைமொழி நின்மேல் நிற்கும்படி எம்பாற் றோன்றிய துன்பத்தையும் நோக்காயாய்ப் பிரிந்து போயினையோ! என்றும் என்க,
 
(விளக்கம்) 172, காதலரைப் பிரிந்து தனித்து வாழ்வோர் என்க.
    174. அம்மொழி -அவ்வசைமொழி.
    175. புன்கண்-துன்பம்.