உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
20. சண்பையுள் ஒடுங்கியது |
|
யாங்கினி
திருத்துமென் றறிவினிற் சூழ்ந்து 100 பற்றார்
ஆயினும் உற்றார் ஆயினும்
ஒற்றுவர் உளரெனின் அற்றந் தருமென
மற்றவண் ஒடுங்கார் மறைந்தனர் போகி
|
|
99 - 102 :
யாங்கு.......போகி ( யூகி முதலிய நால்வரும் அத் தவப்பள்ளியினின்றும்
சண்பை
நகர்க்குச் செல்லுதல். )
|
|
(பொழிப்புரை) பகைவராயினும்,
உறவினரேயாயினும், இரு திறத்தாருள்ளும் ஒரோவழி ஒற்றர் இருத்தலும் கூடும்
அங்ஙனம் இருப்பராயின் நமக்குத் துன்பமுண்டாதல் ஒருதலை; ஆகலின்
ஈண்டிருத்தல நன்றன்று என்றும் இனி எவ்விடத்தே சென்றிருத்தல் நன்றாம்
என்றும் அந் நால்வரும் தம்முட் கூடி ஆராய்ந்து (ஓரிடத்தைத்
துணிந்தனராய்) அத் தவப்பள்ளியினின்றும் பிறர் அறியாமல் புறப்பட்டுச்
சென்று என்க.
|
|
(விளக்கம்) யாங்கு -
எவ்விடத்து. இனிதிருத்தும் - இனிதே சென்றிருப்போம்.
100, பற்றார் - பகைவர், உற்றார் - உறவினர். பகைவருள்
அல்லது உற்றாருள்ளும் ஒற்றுவர் இருத்தல் கூடும் அங்ஙனம் இருப்பாராயின்
என்பது கருத்து. 101. அற்றம் -
துன்பம். 102. அவண் - அத் தவப்பள்ளியின்கண். ஒடுங்கார் -
உறையாராய், மறைந்தனர் ; முற்றெச்சம்,
|