அயோத்தியின் பெருமை (93-99)

93.செவ்விய, மதுரம் சேர்ந்த நல் பொருளின்
    சீரிய, கூரிய, தீம் சொல்
வவ்விய கவிஞர் அனைவரும்,
    வடநூல் முனிவரும் புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும் தவம் செய்து
    ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர் இழிவதற்கு
    அருத்தி புரிகின்றது அயோத்தி மாநகரம்,
1

உரை
   
 
அயோத்தியை வியத்தல்

94.நில மகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
    நிறை நெடு மங்கல நாணோ!
இலகுபூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
    இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர் கொல்லோ! மாயோன் மார்பின் நல்
    மணிகள் வைத்த பொன் பெட்டியோ! வானோர்
உலகின்மேல் உலகோ! ஊழியின் இறுதி
    உறையுேளா! யாது என உரைப்பாம்.
2

உரை
   
 
பருதியும் மதியும் உலாவரற் காரணம்

95.உமைக்கு ஒருபாகத்து ஒருவனும், இருவர்க்கு
    ஒருதனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெரும் செல்வக் கடவுளும், உவமை,
    கண்டிலா நகர் அது காண்பான்,
அமைப்பரும் காதல் அது பிடித்து உந்த,
    அந்தரம் சந்திர ஆதித்தர்,
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
    இயம்பலாம் ஏது வேறு உளதோ.
3

உரை
   
 
அயோத்தி அமராவதியினும்
அளகையினும் விஞ்சியது

96.அயில் முகக் குலிசத்து அமரர் கோன் நகரும்
    அளகையும் என்றிவை அயனார்
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை
    இப்பெருந் திருநகர் படைப்பான்
மயன் முதல் தயெ்வத் தச்சரும் தத்தம்
    மனத் தொழில் நாணினர் மறந்தார்;
புயல் தொடு குடுமி நெடுநிலை மாடத்து இந்நகர்
    புகலுமாறு எவனோ?
4

உரை
   
 
அயோத்தியே புண்ணியபூமியும் போகபூமியுமெனல்

97.‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம், ‘
    என்னும் ஈது அரு மறைப் பொருளே,
மண் இடை யாவர் இராகவன் அன்றி
    மாதவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண்ணரும் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்
    ஏழ் உலகு ஆளிடம் என்றால்,
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம்
    உண்டு என உரைத்தல்?
5

உரை
   
 
அயோத்தியை ஒக்கும்நகரம்
அமரர் நாட்டிலும் இல்லையெனல்

98.தங்கு பேரருளும் தருமமும் துணையாத்
    தம்பகைப் புலன் களைந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும்
    புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங்கண் மால், பிறந்து ஆண்டு அளப்பரும் காலம்
    திருவின் வீற்று இருந்தனன் என்றால்,
அங்கண்மா ஞாலத்து, அந் நகர் ஒக்கும் பொன் நகர்
    அமரர் நாட்டு யாதோ?
6

உரை
   
 
இந்நகரில் எல்லாப் பொருளும் உள்ளன எனல்

99.அரசு எலாம் அவண; அணி எலாம் அவண;
    அரும் பெறல் மணி எலாம் அவண;
புரசை மால் களிறும், புரவியும், தேரும்,
    பூதலத்து யாவையும் அவண;
விரசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர்
    விஞ்சையர் முதலினோர் எவரும்
உரை செய்வார் ஆனார்; ஆனபோது அதனுக்கு
    உவமைதான் அரிது அரோ உளதோ.
7

உரை
   
 
மதிலின் உயர்ச்சி

100.நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி,
    நனிதவ உயர்ந்தன பனிதோய்
மால்வரைக் குலத்து யாவையும் இல்லை;
    ஆதலால் உவமை மற்று இல்லை,
நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி,
    நுணங்கிய நுவலரும் உணர்வே
போல்வகைத்து; அல்லால், உயர்வினோடு உயர்ந்தது
    என்னலாம் பொன் மதில் நிலையே.
8

உரை
   
 
மதிலுக்குப் பெருமையால் ஒப்பன இவை எனல்

101.மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்
    வேதமும் ஒக்கும், விண் புகலால்
தேவரும் ஒக்கும், முனிவரும் ஒக்கும்
    திண் பொறி அடக்கிய செயலால்,
காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும்,
    சூலத்தால் காளியை ஒக்கும்,
யாவையும் ஒக்கும் பெருமையால், எய்தற்கு
    அருமையால் ஈசனை ஒக்கும்.
9

உரை
   
 
மதிலின் உயர்ச்சி

102.பஞ்சி வான் மதியை ஊட்டியது அனைய
    படர் உகிர்ப் பங்கயச் செங்கால்
வஞ்சிபோல் மருங்குல் குரும்பைபோல் கொங்கை
    வாங்கு வேய் வைத்த மென் பணைத் தோள்
அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின்
    அழகு உடைத்து அன்று என அறிவான்
இஞ்சி, வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய,
    எழுந்தது ஒத்து உளதே.
10

உரை
   
 
மதில் சூரியகுலத்தரசர்களை ஒத்துள்ளது எனல்

103.கோலிடை உலகம் அளத்தலின்,
    பகைஞர் முடித்தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும்
    நோக்கு அரும் காவலின், வலியின்,
வேலொடு வாள் வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின்,
    வெலற்கு அரு வலத்தின்,
சால்பு உடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,
    தலைவர் ஒத்து உளதே.
11

உரை
   
 
மதிற்பொறிகளும் - அவற்றின் ஆற்றலும்

104.சினத்து அயில் கொலை வாள்
    சிலை மழுத் தண்டு சக்கரம் தோமரம் உலக்கை
கனத்து இடை உருமின் வெருவரும்
    கவண்கல் என்று இவை கணிப்பில; கொதுகின்
இனத்தையும் உவணத்து இறையையும்
    இயங்கும் காலையும் இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள; என்றால்,
    மற்று இனி உணர்த்துவது எவனோ?
12

உரை
   
 
நகருக்கு அணியாக மதில் அமைந்தமை

105.‘பூணினும் புகழே அமையும், ‘ என்று, இனைய
    பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும்
    இரவிதன் குல முதல் நிருபர்,
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,
    திகிரியும் செந்தனிக் கோலும்
ஆணையும் காக்கும் ஆயினும், நகருக்கு
    அணி என, இயற்றியது அன்றோ!
13

உரை
   
 
அகழியைப் பற்றி அறிவிப்போம் எனல்

106.அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
    அலை கடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ்போய்,
    புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும்
    படிவு அரும் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;
    நவிலல் உற்றது நாம்
14

உரை
   
 
மேகம் அகழைக் கடலாக மயங்கிற்று எனல்

107.ஏகுகின்ற தம் கணங்கேளாடும்
    எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகன் கிடங்கை,
    ‘நாம வேலையாம் ‘எனா
மேகம், மொண்டுகொண்டு, எழுந்து,
    ‘விண் தொடர்ந்த குன்றம், ‘ என்று
ஆகம் நொந்து நின்று, தாரை
    அம் மதிற்கண் வீசுமே.
15

உரை
   
 
அகழில் உள்ள தாமரைக் காட்டின் தோற்றம்

108.அந்த மா மதில் புறத்து
    அகத்து எழுந்து அலர்ந்த நீள்
கந்தம் நாறு பங்கயத்த
    கானம் மான, மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன,
    மொய்ம்பு எலாம்
வந்து, போர் மலைக்க மா மதில்
    வளைத்த மானுமே.
16

உரை
   
 
அகழியில் முதலைகள் முழுகி எழும்புதல்

109.சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை,
    சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கு இடைக் கிடந்து
    பொங்கு இடங்கர் மா,
தாழ்ந்த வங்க வாரியில்
    தடுப்ப ஒணா மதத்தினால்
ஆழ்ந்த யானை மீது எழுந்து
    அழுந்துகின்ற போலுமே.
17

உரை
   
 
முதலைகள் ஒன்றோடொன்று பொருதல்

110.ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று
    இளம் பிறைக் குலம்
பேர மின்னி, வாய் விரித்து, எரிந்த கண்
    பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து
    சீறு இடங்கர் மா,
போரில் வந்து சீறுகின்ற
    போர் அரக்கர் போலுமே.
18

உரை
   
 
அகழி அரசர் சேனையை ஒக்கும் எனல்

111.ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா,
    அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற
    குன்றம் அன்ன யானையா
தாள் உலாவு வெம் கதத்
    துரங்கமும் தரங்கம் மா
வாளும் வேலும் மீனம் ஆக
    மன்னர் சேனை மானுமே.
19

உரை
   
 
அகழியின் கரையமைப்பு

112.விளிம்பு தறெ்றி முற்றுவித்து
    வெள்ளி கட்டி உள் உறப்
பளிங்கு பொன் தலத்து அகட்டு
    அடுத்து உறப் படுத்தலின்
தளிந்த கல் தலத்தொடு அச் சலத்தினைத்
    தனித்து உறத்
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல்
    தேவராலும் ஆவதே.
20

உரை
   
 
அகழியும் காவற்காடும்

113.அன்ன நீள் அகன் கிடங்கு,
    சூழ் கிடந்த ஆழியைத்
துன்னி வேறு சூழ் கிடந்த
    தூங்கு வீங்கு இருள் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ் கிடந்த
    சோலை, எண்ணில் அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
    நீல ஆடை போலுமே.
21

உரை
   
 
கோபுர வாயிலின் சிறப்பு

114.எல்லை நின்ற வென்றி யானை
    என்ன நின்ற முன்னம் மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த
    தாளின்மீது உயர்ந்தவால்
மல்லல் ஞாலம் யாவும் நீதி
    மாறு உறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம்
    நான்கும் அன்ன; வாயிலே.
22

உரை
   
 
கோபுர அமைப்பும் சிற்பச் சிறப்பும் (115-118)

115.தா இல் பொன் தலத்தின் நல்
    தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர்
    புக்கு ஒதுங்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து
    அணைந்து இடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க
    ஊடு பேடையே.
23

உரை
   
 
116.கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு
    அரிந்து கட்டி, மீது
எல் இடப் பசும்பொன் வைத்து, இலங்கு
    பல் மணிக் குலம்
வில் இடக் குயிற்றி, வாள்
    விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால்
    பொருத்தியே.
24

உரை
   
 
117.மரகதத்து இலங்கு போதிகைத்
    தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது
    பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி
    நீள்வகுத்த ஒளிமேல்
விரவு கைத் தலத்தின் உய்த்த
    மேதகத்தின் மீது அரோ!
25

உரை
   
 
118.ஏழ் பொழிற்கும் ஏழ் நிலைத்
    தலம் சமைத்தது என்ன நூல்
ஊழ் உறக் குவித்து அமைத்த
    உம்பர் செம்பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரத்து நல்
    மணித் தசும்பு தோன்றலால்
வாழ் நிலக் குலக் கொழுந்தை
    மௌலி சூட்டி அன்னவே.
26

உரை
   
 
மாளிகைகளின் அமைதி (119-123)

119.திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதை உடைத் தவள மாளிகை
வெங் கருங் கால் பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பால் கடல் தரங்கம் போலுமே.
27

உரை
   
 
120.புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ளரும் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ளரும் கதிரவன் இளம் வெயில் குழாம்
வெள்ளி அம் கிரி மிசை விரிந்த போலுமே.
28

உரை
   
 
121.வயிர நல் கால் மிசை மரகதத் துலாம்
செயிர் அறப் போதிகை கிடத்திச் சித்திரம்
உயிர்பெறக் குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவில் கோடியே.
29

உரை
   
 
122.சந்திர காந்தத்தின் தலத்த சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகைச்
செந்தனி மணித் துலாம் செறிந்த திண் சுவர்
இந்திர நீலத்த எண் இல் கோடியே.
30

உரை
   
 
123.பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன;
சேடரைத் தழீஇயின; செய்ய வாயின;
நாடகத் தொழிலின நடுவு துய்யன
ஆடகத் தோற்றத்த அளவு இலாதன.
31

உரை
   
 
மாளிகைகள் தேவவிமானம்போலத் திகழ்தல்

124.புக்கவர் கண் இமை
    பொருந்து உறாது ஒளி
தொக்கு உடன் தயங்கி
    விண்ணவரின் தோன்றலால்,
திக்கு உற நினைப்பினில்
    செல்லும் தயெ்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன
    உம்பர் நாட்டினும
32

உரை
   
 
மாளிகையில் வாழ்வார் இயல்பும் அணிகளும்

125.அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும்
தணிவன அறம்; நெறி தணிவு இலாதன;
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றன பாங்கும் இல்லையே.
33

உரை
   
 
மாளிகைச் சிறப்பு

126.வான் உற நிமிர்ந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழன; தயங்கு சோதிய;
ஊனம் இல் அறநெறி உற்ற; எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.
34

உரை
   
 
மாளிகைகள் மலைகளை ஒத்திருத்தல்

127.அருவியில் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த;
விரி முகில் குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும்பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன.
35

உரை
   
 
மாளிகைகளிற் சூலங்கள் மின்வரிசைபோலுதல்

128.அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின;
முகிலொடு வேற்றுமை தரெிகலா; முழுத்
துகிலொடு நெடுங்கொடிச் சூலம் மின்னுவ;
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.
36

உரை
   
 
கொடிச்சரங்கள் கற்பகமாலையை ஒத்தல்

129.துடி இடைப் பணைமுலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்றும் மாளிகை
கொடி இடைத் தரள வெண் கோவை சூழ்வன
கடி உடைக் கற்பகம் கான்ற மாலையே.
37

உரை
   
 
மாளிகையின் கொடிகள் தேய்ப்பதால் மதி தேய்தல்

130.காண்வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்
கோள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள்நிலா மழுங்கிட மடங்கி வைகலும்
சேண்மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்கவே.
38

உரை
   
 
அயோத்தி நகரெங்கும் மாடமாளிகைகளும்
கூடகோபுரங்களும் அமைந்தமை

131.பொன் திணி மண்டபம் அல்ல பூத் தொடர்
மன்றுகள் அல்லன மாட மாளிகை
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.
39

உரை
   
 
அயோத்தியின் ஒளிபெற்று தேவருலகு
பொன்னுலகாயிற்று எனல்

132.மின் என, விளக்கு என,
    வெயில் பிழம்பு எனத்
துன்னிய தமனியத் தொழில்
    தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல்
    கதுவலால் அரோ
பொன் உலகு ஆயது அப்
    புலவர் வானமே.
40

உரை
   
 
சூரியன் ஒளி அயோத்தியின் ஒளியே எனல்

133.எழும் இடத்து அகன்று இடை
    ஒன்றி எல் படு
பொழுது இடைப் போதலின்
    புரிசைப் பொன் நகர்
அழல்மணி திருத்திய
    அயோத்தி ஆளுடை
நிழல் எனப் பொலியுமால்,
    நேமி வான்சுடர்
41

உரை
   
 
அகில் புகையுண்ட மேகங்கள் தோய்தலால்
கடல் நறுமணம் கமழுகின்றதனெல்

134.ஆய்ந்த மேகலையவர்
    அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை
    உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறும்
    தூபம் நாறு
பாய்ந்த தாரையின் நிலை
    பகரல் வேண்டுமோ?
42

உரை
   
 
அயோத்தியில் உள்ள மகளிர் குதலை
முதலியவற்றின் இயல்பு

135.குழல் இசை மடந்தையர்
    குதலைக் கோதையர்
மழலை அம் குழல் இசை
    மகர யாழ் இசை
எழில் இசை மடந்தையர்
    இன் சொல் இன் இசை
பழையர்தம் சேரியில்
    பொருநர் பாட்டிசை.
43

உரை
   
 
யானைகள் செய்த குழிகளைச் சுண்ணம் தூர்க்கின்றது எனல்

136.கண் இடைக் கனல்சொரி களிறு கால்கொடு
மண் இடை வெட்டுவ; வேட்கும் மைந்தர்கள்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.
44

உரை
   
 
மகளிர் பந்தாடல்

137.பந்துகள் மடந்தையர் பயிற்றுவார்; இடைச்
சிந்துவ முத்து இனம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சிலதியர்; ஆற்ற குப்பைகள்
சந்திரன் ஒளி கெடத் தழைப்ப தண் நிலா.
45

உரை
   
 
நடனமாதர் கண்பட்டுக் காண்பார்க்கு உயிர்
மெலிதலும் காதல் வளர்தலும்

138.அரங்கு இடை மடந்தையர் ஆடுவார் அவர்
கருங் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல் போல் தேய்வன; வளர்வது ஆசையே.
46

உரை
   
 
சோலை தேன் பொழிய மகளிர் வருந்துதல்

139.பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தனெ்றலும் மிஞிறும் மெல் என
நுழைவன; அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே.
47

உரை
   
 
பாடலால் பறவைகளும் பரவசமாதல்

140.இறங்குவ மகர யாழ் எடுத்த இன்னிசை
நிறம் கிளர் பாடலான் நிமிர்வ; அவ் வழி
கறங்குவ வள் விசி கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே.
48

உரை
   
 
ஆடவர் தோள்கள் அரிவையர்
தாளால் உதைபட்டுச் சிவத்தல்

141.குதை வரிச் சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்
உதைபடச் சிவப்பன உரவுத் தோள்களே.
49

உரை
   
 
சித்திரங்கள் இமையாத காரணம்

142.பொழுது உணர்வு அரிய
    அப் பொருவில் மாநகர்
தொழு தகை மடந்தையர்
    சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப்
    பார்க்கும் ஆசைகொல்
எழுது சித்திரங்களும்
    இமைப்பு இலாதவே.
50

உரை
   
 
மாளிகைகளில் மகளிர் மேனியே இருளகற்றுதல்

143.தணி மலர்த் திருமகள் தங்கும் மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன
திணி சுடர் நெய் உடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே.
51

உரை
   
 
ஆடற்சதியை அளந்து காட்டுவன
குதிரைகளின் கிண் கிணி மாலை

144.பதங்களில் தண்ணுமை பாணி பண் உற
விதங்களின் விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவித் தார்களே.
52

உரை
   
 
மதங்கியர் அழகின் மாட்சி

145.முளைப் பன முறுவல் வெந் துயர்
விளைப்பன; அன்றியும் மெலிந்து நாள் தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப மென் முலை
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே.
53

உரை
   
 
களிப்புடையன இவை எனல்

146.இடை இடை எங்கணும் களி அறாதன;
நடை இள அன்னங்கள் நளின நீர்க் கயல்
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும்
கடகரி அல்லன மகளிர் கண்களே.
54

உரை
   
 
யானையின் மதநீரால் பூமி குழைதல்

147.தழல் விழி யாளியும்
    துணையும் தாழ்வரை
முழை விழை கிரி நிகர்
    களிற்றின் மும்மத
மழை விழும்; விழும் தொறும்
    மண்ணும் கீழ் உறக்
குழைவிழும்; அதில் விழும்
    கொடித் திண் தேர்களே.
55

உரை
   
 
மாலை கலவைச்சாந்து இவற்றின் மிகுதி

148.ஆடுவார் புரவியின் குரத்தை ஆர்ப்பன
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவ ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே.
56

உரை
   
 
மாலை மணிகளைக் கழுவுதல்

149.இளைப்பு அரும் குரங்களால் இவுளி பாரினைக்
கிளைப்பன; அவ் வழி கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர மீது தேன்
துளிப்பன குமரர்தம் தோளின் மாலையே.
57

உரை
   
 
நாறுவ இவை எனல்

150.விலக்கு அரும் கரி மதம் வேங்கை நாறுவ;
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ;
கலக்கடை கணிப்பு அரும் கதிர்கள் நாறுவ;
மலர்க் கடி நாறுவ; மகளிர் கூந்தலே.
58

உரை
   
 
அயோத்தி நகரின் ஆவண வீதிக்கு
அளகாபுரி தோற்றது எனல்

151.கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி இந் நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே.
59

உரை
   
 
மைந்தர் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இவை எனல்

152.அதிர் கழல் ஒலிப்பன அயில் இமைப்பன
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன முத்தம் மின்னுவ
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே.
60

உரை
   
 
வாச்சிய ஒலிகள் கடலொலியை வென்றமை

153.வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே.
61

உரை
   
 
மண்டப வகைகள்

154.மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்;
அன்னம் மென் நடையவர் ஆடும் மண்டபம்;
உன்ன அரும் அரு மறை ஓதும் மண்டபம்;
பன்ன அரும் கலை தரெி பட்டிமண்டபம்.
62

உரை
   
 
தோரணம் தரெு புரவிப்பந்தி இவற்றின் சிறப்பு

155.இரவியில் சுடர் மணி இமைக்கும் தோரணம்
தரெுவினில் சிறியன திசைகள்; சேண் விளங்கு
அருவியில் பெரியன ஆனைத் தானங்கள்;
பரவையில் பெரியன புரவிப் பந்தியே.
63

உரை
   
 
மாளிகையில் மாதர்கள் முகமும் விழிகளும் மலர்தல்

156.சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ மற்றவை
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.
64

உரை
   
 
மன்னவர் கழலொலியோடும் மகளிர் சிலம்பொலியோடும்
மாறுகொள்வன இவை எனல்

157.மன்னவர் கழலொடு மாறு கொள்வன
பொன் அணித் தேர் ஒலி புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே.
65

உரை
   
 
மகளிர்சிலர் பொழுதுபோக்கும்

158.ஊடவும் கூடவும்
    உயிரின் இன் இசை
பாடவும் விறலியர்
    பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல்
    ஆடி, அம் மலர்
சூடவும் பொழுது போம்
    சிலர்க்கு அத் தொல் நகர்.
66

உரை
   
 
ஆடவரிற் சிலர் பொழுதுபோக்கும் முறை

159.முழங்கு திண் கட கரி
    முன்பின் ஊரவும்
எழும் குரத்து இவுளியோடு
    இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர்
    பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம்
    சிலர்க்கு அம் மா நகர்.
67

உரை
   
 
சிலர் போர்க்கலை ஆராய்ச்சியால் பொழுதுகழித்தல்

160.கரியொடு கரி எதிர் பொருத்தி,
    கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி,
    வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடிப்
    போர்க் கலை
தரெிதலின் பொழுது போம் சிலர்க்கு
    அச் சேண் நகர்.
68

உரை
   
 
சிலர் பொழுதுகழிக்கும் முறை

161.நந்தன வனத்து அலர் கொய்து,
    நவ்வி போல்
வந்து இளைய வரொடு
    வாவி ஆடி, வாய்ச்
செந்துவர் அழிதரத் தேறல்
    மாந்திச் சூது
உந்தலின் பொழுது போம்
    சிலர்க்கு அவ் ஒள் நகர்.
69

உரை
   
 
கொடிகளின் உயர்வு

162.நானா விதமா நளி
    மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண்
    முகில் உண்ணுமா போல்,
ஆனாத மாடத்து இடை
    ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணிப் புனல்
    வற்றிட நக்கும் மன்னோ!
70

உரை
   
 
கோபுர மதில்களின் உயர்வு

163.வன் தோரணங்கள் புணர்
    வாயிலும் வானின் உம்பர்
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் எனச்
    செம்பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளார் குணம்
    கூட்டு இசைக் குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து
    ஓங்கின உம்பர் நாண.
71

உரை
   
 
எங்கும் மலர்ப்பல்லவப் பள்ளி

164.காடும், புனமும், கடல் அன்ன
கிடங்கும், மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும்,
உம்பர் வீடும், விரவும் மணிப் பந்தரும்,
வீணை வண்டு
பாடும் பொழிலும், அல நல் அறப்
பள்ளி மன்னோ.
72

உரை
   
 
அயோத்தியில் கள்வாருமில்லை கொள்வாருமில்லை

165.தெள் வார் மழையும்
    திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர்
    வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள்
    காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக்
    கொடுப்பார்களும் இல்லை மாதோ.
73

உரை
   
 
அயோத்தி நகரில் கல்வியும் செல்வமும் சிறந்தவாறு

166.கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்
    கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை
    வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும்
    எய்தலாலே,
இல்லாரும் இல்லை; உடையார்களும்
    இல்லை மாதோ.
74

உரை
   
 
அயோத்தி மாநகரம் தருவை நிகர்க்கும் எனல்

167.ஏகம் முதல் கல்வி முளைத்து
    எழுந்து எண் இல் கேள்வி
ஆகு அம் முதல் திண் பணை போக்கி,
    அருந்தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பித்
    தருமம் மலர்ந்து,
போகம் கனி ஒன்று பழுத்தது
    போலும்; அன்றே.
75

உரை