புதல்வரில்லாக் குறையைத் தசரதன்
வசிட்டனுக்குக் கூறுதல் (180-183)

180.ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது ‘தொல் குலத்
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.
1

உரை
   
 
181.‘எம் குலத் தலைவர்கள் இரவி தன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்
மங்குநர் இல் என; வரம்பு இல் வையகம்
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன்.
2

உரை
   
 
182.‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.
3

உரை
   
 
183.‘அரும் தவ முனிவரும்,
    அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே
    வாழ்வின் வைகினார்,
இரும் துயர் உழக்குவர்
    என் பின், என்பது ஓர்
அரும் துயர் வருத்தும்
    என் அகத்தை ‘என்றனன்.
4

உரை
   
 
திருமால் கொடுத்த வரத்தினை வசிட்டன்
நினைத்தல் (184-185)

184.முரசு அறை செழும் கடை
    முத்தம் மா முடி
அரசர் தம் கோமகன்
    அனைய கூறலும்,
விரை செறி கமலம்
    மென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன்
    மனத்தின் எண்ணினான்.
5

உரை
   
 
185.அலைகடல் நடுவண் ஓர்
    அனந்தன் மீமிசை
மலை என விழி துயில்
    வளரும் மா முகில்,
‘கொலை தொழில் அரக்கர் தம்
    கொடுமை தீர்ப்பென்‘ என்று,
உலைவு உறும் அமரருக்கு
    உரைத்த வாய்மையை.
6

உரை
   
 
வசிட்டன் மனத்தில் கருதிய தேவலோக
நிகழ்ச்சிகள் (186-208)

186.சுடு தொழில் அரக்கரால்
    தொலைந்து, வான் உேளார்,
கடு அமர் களன் அடி
    கலந்து கூறலும்,
படு பொருள் உணர்ந்த அப்
    பரமன், ‘யாம் இனி
அடுகிலம், மாயனோடு
    அறைதிர் ‘என்னவே.
7

உரை
   
 
187.கறை மிடற்று இறை சொலக்,
    கடவுேளார்களும்,
மறை தரெி முனிவரும்,
    வச்சிர ஆயுதத்து
இறைவனும், வணங்கி நின்று,
    எழுந்து போந்து, உயர்
நறை மலரவன் இடம்
    நண்ணல் மேயினார்.
8

உரை
   
 
188.வடவரைக் குடுமியின் நடுவண் மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி நான்முகக்
கடவுளை அடிதொழுது அமரர் கண் நுதல்
உடையவன் அருளியது உரைத்திட்டார் அரோ.
9

உரை
   
 
189.பாகசாதனன் தனைப் பாசத்து ஆர்த்து அடல்
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள்
சேகு அற மீட்ட ஓதிமனும் தேவரும்
ஏகியே வைகுந்த வாயில் எய்தினார்.
10

உரை
   
 
190.‘இருபது கரம், தலை ஈரைந்து
    என்னும் அத்
திரு இலி வலிக்கு ஒரு செயல்
    இன்று எங்களால்,
கரு முகில் என வளர்
    கருணை அம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு ‘
    எனும் புணர்ப்பினால்.
11

உரை
   
 
191.திரை கெழு பயோததித் துயிலும் தயெ்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்
கர கமலம் குவித்து இருந்த காலையில்
பர கதி உணர்ந்தவர்க்கு உதவும் பண்ணவன்.
12

உரை
   
 
192.கரு முகில் தாமரைக்
    காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து
    ஏந்தி, ஏடு அவிழ்
திருவொடும் பொலிய, ஓர்
    செம்பொன் குன்றின் மேல்
வருவ போல், கலுழன் மேல்
    வந்து, தோன்றினான்.
13

உரை
   
 
193.எழுந்தனர் விண்ணவர்க்கு
    இறையும், தாமரைச்
செழும் தவிசு உகந்த அத்
    தேவும், சென்று எதிர்
விழுந்தனர் அடிமிசை
    விண்ணுேளாரொடும்
தொழும் தொறும் தொழும்
    தொறும் களி துளங்குவார்.
14

உரை
   
 
194.ஆடினர், பாடினர், அங்கும்
    இங்கும் ஆய்
ஓடினர், உவகை மா நறவு
    உண்டு, ஓர்கிலார்,
‘வீடினர் அரக்கர் ‘என்று
    உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை,
    துளவத் தாள் மலர்.
15

உரை
   
 
195.பொன்வரை இழிவது ஓர் புயலின்
    பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்
    நின்று, எம்பிரான்,
சென்னி வான் தடவு மண்டபத்துச்
    சேர்ந்து, அரி
துன்னு பொன் பீடம் மேல்
    பொலிந்து தோன்றினான்.
16

உரை
   
 
196.விதியொடு, முனிவரும்,
    விண் உேளார்களும்,
மதிதரெி குலிசியும்,
    மற்று உேளார்களும்,
அதிசயமுடன் உவந்து
    அயல் இருந்துழி,
கொதி கொள் வேல் அரக்கர்தம்
    கொடுமை கூறினார்
17

உரை
   
 
197.‘ஐயிரு தலையினோன் அனுசன் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன திருவின் நாயக!
உய்திறம் இல்லை ‘என்று உயிர்ப்பு வீங்கினார்.
18

உரை
   
 
198.‘எங்கும், நீள் வரங்களால், அரக்கர்
    என்று உளார்,
பொங்கும் மூவுலகையும்
    புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இனித்
    தீர்த்தல் இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர்
    நொடியின் ‘என்றனர்.
19

உரை
   
 
199.என்றனர், இடர் உழந்து
    இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான்,
    ‘வருந்தல்! வஞ்சகர்
தம் தலை அறுத்து இடர்
    தணிப்பன் தாரணிக்கு :
ஒன்று நீர் கேண்ம்! ‘என
    உரைத்தல் மேயினான்.
20

உரை
   
 
200.‘வான் உேளார் அனைவரும்
    வானரங்கள் ஆய்க்,
கானினும், வரையினும்,
    கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின்
    சென்று! ‘என,
ஆனனம் மலர்ந்தனன்,
    அருளின் ஆழியான்.
21

உரை
   
 
201.‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய யாம்
கசரத துரகம் ஆள் கடல் கொள் காவலன்
தசரதன் மதலை ஆய் வருதும் தாரணி.
22

உரை
   
 
202.‘வளையொடு, திகிரியும்,
    வடவை தீ தர
விளைதரு கடு உடை
    விரிகொள் பாயலும்,
இளையவர் என அடி
    பரவ, ஏகி, நாம்
வளை மதில் அயோத்தியில்
    வருதும் ‘என்றனன்
23

உரை
   
 
203.என்று அவன் உரைத்த போது,
    எழுந்து துள்ளினார்,
நன்றி கொள் மங்கல
    நாதம் பாடினார்,
‘மன்று அலர் செழும் துளவு
    அணியும் மாயனார்
இன்று எமை அளித்தனர் ‘
    என்னும் ஏம்பலால்.
24

உரை
   
 
204.‘போயது எம் பொருமல் ‘என்னா
    இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலரின் மேவும்
    தொல் மறை முகத்தினானும்,
சேய் இரு விசும்பு உேளாரும்,
    ‘தீர்ந்தது எம் சிறுமை ‘என்றார் :
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன்
    மேல் சரணம் வைத்தான்.
25

உரை
   
 
205.என்னை ஆள் உடைய ஐயன்
    கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கிப்
    பிதாமகன் பேசு கின்றான்.
‘முன்னர் ஏய் எண்கின் வேந்தன் யான்‘
    என மொழிகின்றான், மற்று,
‘அன்ன ஆறு எவரும் நீர் போய்
    அவதரித்திடுமின்! ‘என்றான்.
26

உரை
   
 
206.தரு உடைக் கடவுள் வேந்தன்
    சாற்றுவான் ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன
    வாலியும் மகனும் ‘என்ன,
இரவி, மற்று, ‘எனது கூறு அங்கு
    அவற்கு இளையவன் ‘என்று ஓத
அரியும் மற்று, ‘எனது கூறு நீலன் ‘
    என்று அறைந்திட்டானால்.
27

உரை
   
 
207.வாயு மற்று, ‘எனது கூறு மாருதி ‘
    எனலும், மற்றோர்
‘காயும் மற்கடங்கள் ஆகிக்
    காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம் ‘என்றார்;
    புயல் வண்ணன் ஆதி வானோர்
மேயினர் என்னில், இந்த
    மேதினிக்கு அவதி உண்டோ?
28

உரை
   
 
208.அருள் தரு கமலக் கண்ணன்
    அருள் முறை, அலர் உேளானும்
இருள் தவிர் குலிசத்தானும், அமரரும்,
    இனையர் ஆகி
மருள் தரு வனத்தின், மண்ணின்
    வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் எவரும் தத்தம்
    உறை இடம் சென்று புக்கார்.
29

உரை
   
 
வசிட்டன் யாகம் செய்யின் குறை தீருமெனல்

209.‘ஈது முன் நிகழ்ந்த வண்ணம்‘ என முனி
    இதயத்து எண்ணி,
‘மாதிரம் பொருத திண் தோள்
    மன்ன, நீ வருந்தல் ஏழ் ஏழ்
பூதலம் முழுதும் காக்கும்
    புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தை நோய்
    தீரும்‘ என்றான்.
30

உரை
   
 
தசரதன் தான் செய்ய வேண்டியதை வினாதல்

210.என்ன மா முனிவன் கூற,
    எழுந்து, பேர் உவகை பொங்க,
மன்னவர் மன்னன், அந்த
    மா முனி சரணம் சூடி,
‘உன்னையே புகல் புக்கேனுக்கு
    உறுகண் வந்து அடைவது உண்டு ஓ?
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது
    அளித்தி‘ என்றான்.
31

உரை
   
 
கலைக்கோட்டுமுனி யாகம் நடத்தினால் மகப்பேறு உண்டு எனல் (211-213)

211.‘மாசு அறு சுரர்கேளாடு
    மற்று உேளார் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன்,
    விபண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன்,
    இரும் கலை பிறவும் எண்ணில்,
தேசு உடைத் தந்தை ஒப்பான்;
    திரு அருள் புனைந்த மைந்தன்
32

உரை
   
 
212.‘வரு கலை பிறவும், நீதி மனுநெறி,
    வரம்பு இல் வாய்மை
தரு கலை, மறையும், எண்ணில்,
    சதுமுகற்கு உவமை சான்றோன்,
திரு கலை உடைய இந்தச் செகத்து
    உேளார் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர்
    தவன் வருதல் வேண்டும்.
33

உரை
   
 
213.‘பாந்தளின் மகுட கோடி பரித்த
    பார் அதனின் வைகும்
மாந்தர்கள் விலங்கு, என்று உன்னும் மனத்தன்,
    மா தவத்தன், எண்ணில்,
பூந்தவிசு உகந்து உேளானும்,
    புராரியும் புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றில் தனயர்கள்
    உளர் ஆம்‘ என்றான்.
34

உரை
   
 
கலைக்கோட்டு முனியைப் பற்றித் தசரதன் வினாதல்

214.ஆங்கு உரை இனைய கூறும்
    அரும் தவர்க்கு அரசன் செய்ய
பூங் கழல் தொழுது வாழ்த்திப்
    பூதலம் மன்னர் மன்னன்,
‘தீங்கு அறு குணத்தால் மிக்க செழும்
    தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு நான் கொணரும் தன்மை
    இயம்புதி, இறைவ!‘ என்றான்.
35

உரை
   
 
கலைக்கோட்டு முனியின் வரலாற்றை வசிட்டன் கூறுதல் (215-235)

215.‘புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம்
    போய் ஒளிப்பப், புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயாவோடு
    தண் அளியின் சாலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான், மனு குலத்தே
    வந்து உதித்தோன், இலங்கு மௌலி
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று
    உளன் இவ் உலகை ஆள்வோன்.
36

உரை
   
 
216.அன்னவன் தான் புரந்து அளிக்கும் திருநாட்டில்
    நெடுங் காலம் அளவு அது ஆக
மின்னி எழும் முகில் இன்றி வெம் துயரம்
    பெருகுதலும், வேந்தன், நல் நூல்
மன்னும் முனிவரை அழைத்து, மா தானம்
    கொடுக்கினும் வான் வழங்காது ஆகப்,
பின்னும் முனிவரர்க் கேட்பக், ‘கலைக்கோட்டு
    முனிவரின் வான் பிலிற்றும்‘ என்றார்
37

உரை
   
 
217.‘ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில்
    வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அரும் தவனைக் கொணரும்
    வகை யாவது? ‘எனக் குணிக்கும் வேலைச்,
சோதி நுதல், கருநெடும் கண், துவர் இதழ் வாய்த்,
    தரள நகைத், துணை மென் கொங்கை
மாதர் எழுந்து, ‘யாம் ஏகி அரும் தவனைக்
    கொணர்தும் ‘ என வணக்கம் செய்தார்.‘
38

உரை
   
 
218.“ஆங்கு அவர் அம்மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து,
    அவர்க்கு அணி தூசு ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளிப், ‘பனிப் பிறையைப்
    பழித்தநுதல், பணைத்த வேய்த் தோள்
ஏங்கும் இடை, தடிக்கும் முலை, இருண்ட குழல்,
    மருண்ட விழி, இலவச் செவ்வாய்ப்,
பூங்கொடியீர்! ஏகும் ‘எனத், தொழுது இறைஞ்சி
    இரதம் மிசைப் போயினாரே.‘‘
39

உரை
   
 
219.ஓசனை பல கடந்து,
    இனி ஓர் ஓசனை
ஏசு அறு தவன் உறை
    இடம் இது, என்றுழிப்,
பாசு இழை மடந்தையர்,
    பன்னசாலை செய்து,
ஆசு அறும் அரும்
    தவத்தவரின், வைகினார்.
40

உரை
   
 
220.“அரும் தவன் தந்தையை
    அற்றம் நோக்கியே
கரும் தடம் கண்ணியர்
    கலை வலாளனில்
பொருந்தினர்; பொருந்துபு,
    விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர் என,
    இனைய செய்தனன்.‘‘
41

உரை
   
 
221.“அருக்கியம் முதலினோடு
    ஆசனம் கொடுத்து,
‘இருக்க ‘என, இருந்தபின்,
    இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர்
    முனிவனைத் தொழாப்,
பொருக்கென எழுந்து போய்ப்
    புரையுள் புக்கனர்.‘‘
42

உரை
   
 
222.“திருந்து இழையவர் சில
    தினங்கள் தீர்ந்துழி
மருந்தினும் இனியன வருக்கை
    வாழை மாத்
தரும் தரும் கனியொடு
    தாழை இன் பலம்
‘அருந்தவ! அருந்து ‘என
    அருளினார், அரோ.“
43

உரை
   
 
223.“இன்னன பல் பகல்
    இறந்த பின், திரு
நல் நுதல் மடந்தையர்,
    நவை இல் மாதவன்
தன்னை எம் இடத்தினும்
    சார்தல்வேண்டும் என்று,
அன்னவன் தொழுதலும்,
    அவரொடு ஏகினான். ‘‘
44

உரை
   
 
224.“விம்முறும் உவகையர் வியந்த நெஞ்சினர்.
அம்ம! ‘இது! இது! ‘என அகலும் நீள் நெறி
செம்மையின் முனிவரன் தொடரச் சென்றனர்
தம் மனம் என மருள் தையலார்களே!“
45

உரை
   
 
225.“வளம் நகர் முனிவரன்
    வரும் முன், வானவன்
களன் அமர் கடு எனக்
    கருகி, வான் முகில்
சளசள என மழைத்
    தாரை கான்றன,
குளனொடும் நதிகள் தம்
    குறைகள் தீரவே.‘‘
46

உரை
   
 
226.பெரும் புனல் நதிகளும்,
    குளனும், பெட்பு உறக்,
கரும்பொடு செந்நெலும்
    கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககனம் மீது
    இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்த போது,
    அரசு உணர்ந்தனன்.
47

உரை
   
 
227.‘காமமும் வெகுளியும் களிப்பும்
    கைத்து எழு
கோ முனி இவண் அடைந்தனன்
    கொல்? கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத்
    தரள வாள் நகைத்
தூம மென் குழலியர்
    புணர்த்த சூழ்ச்சியால
48

உரை
   
 
228.என்று எழுந்து அரும் மறை
    முனிவர் யாரொடும்
சென்று இரண்டு யோசனை
    சேனை சூழ்தர
மன்றல் அம் குழலியர்
    நடுவண் மா தவக்
குன்றினை எதிர்ந்தனன்
    குவவுத் தோளினான்.
49

உரை
   
 
229.வீழ்த்தனன் அடி மிசை,
    விழிகள் நீர் தர,
‘வாழ்ந்தனன் இனி! ‘என
    மகிழும் சிந்தையான்;
தாழ்ந்து எழு மாதரார்
    தம்மை நோக்கி, ‘நீர்
போழ்ந்தனிர் எனது இடர்
    புணர்ப்பினால்! ‘என்றான்.
50

உரை
   
 
230.அரசனும் முனிவரும்
    அடைந்த ஆயிடை,
வரம் முனி வஞ்சம் என்று
    உணர்ந்த மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்;
    வேந்தன் வேண்டலால்
கரை எறியாது அலை
    கடலும் போன்றனன்.
51

உரை
   
 
231.வள் உறு வயிர வாள்
    மன்னன் பல் முறை
எள் அரு முனிவனை
    இறைஞ்சி, யாரினும்
தள் அரும் துயரமும்,
    சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய்
    ஒளித்தது, ஆம், அரோ.
52

உரை
   
 
232.அருள் சுரந்து, அரசனுக்கு
    ஆசியும் கொடுத்து,
உருள் தரு தேரின் மீது
    ஒல்லை ஏறி, நல்
பொருள் தரு முனிவரும்
    தொடரப் போயினன்,
மருள் ஒழி உணர்வு உடை
    வரத மாதவன்.
53

உரை
   
 
233.அடைந்தனன் வளம் நகர்,
    அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியொடும்
    வேந்தன் கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து
    உறையுள் எய்தி, ஓர்
மடங்கல் ஆதனத்து இடை
    முனியை வைத்தனன்.
54

உரை
   
 
234.அருக்கியம் முதலிய கடன்கள்
    ஆற்றி வேறு
உரைக்குவது இலது என
    உவந்து தான் அருள்
முருக்கு இதழ் இளம் முலை
    முகம் நலாள் தனை
இருக்கொடு விதி முறை
    இனிதின் ஈந்தனன்.
55

உரை
   
 
235.‘வறுமை நோய் தணிதர
    வான் வழங்கவே
உறு துயர் தணிந்தது அவ்
    உலகம்; வேந்து அருள்
செறி குழல் போற்றிடத்,
    திருந்து மாதவத்து
அறிஞன் ஆண்டு இருக்கும் நன்,
    அரச! ‘என்றனன்.
56

உரை
   
 
கலைக்கோட்டு முனியை அழைத்துவரத்
தசரதன் புறப்பாடு

236.என்றலுமே, முனிவரன் தன் அடி இறைஞ்சி, ‘ஈண்டு
    ஏகிக் கொணர்வென் ‘என்னாத்
துன்று கழல் முடி வேந்தர் அடி போற்றச்,
    சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சரொடும், மா மணித் தேர்
    ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
“இன்று எமது வினை முடிந்தது “ எனச், சொரிந்தார்
    மலர் மாரி இடைவிடாமல்.
57

உரை
   
 
தசரதன் உரோமபதனை அடைதல்

237.காகளமும் பல் இயமும் கனை
    கடலின் மேல் முழங்கக், கானம் பாட
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள்
    வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ்வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்பக், கடல்
    தானை புடை சூழச், சுடரோன் என்ன,
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன்
    திரு நாட்டை எதிர்ந்தான் அன்றே.
58

உரை
   
 
தசரதனை வரவேற்க உரோமபதன் வருதல்

238.கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோ வேந்தன்
    அடைந்தமை சென்று ஒற்றர் கூறக்,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக்
    கடல் தானை புடை சூழக், கழல் கால் வேந்தன்,
செழும் தோடும் பல் கலனும் வில் வீச,
    மாகதர்கள் திரண்டு பாட,
எழுந்து ஓடும் உவகையுடன், யோசனை சென்றான்,
    அரசை எதிர்கோள் எண்ணி.
59

உரை
   
 
உரோமபதன் வணங்கத் தசரதன் தழுவுதல்

239.எதிர் கொள்வான் வருகின்ற வய வேந்தன்
    தனைக் கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர் பிரான்
    இழிந்துழிச் சென்று அடியின் வீழ,
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க,
    எடுத்து இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி,
    இவை உரைத்தான் களிப்பின் மிக்கான்.
60

உரை
   
 
தசரதனை உரோமபதன் நகருக்கு அழைத்து வருதல்

240.“யான் செய்த மா தவமோ? இவ் உலகம் செய்
    தவமோ? யாதோ? இங்கண்
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது? ‘‘ என,
    மனம் மகிழா, மணித் தேர் ஏற்றித்,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
    செழு நகரில் கொணர்ந்தான், தவெ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என்று
    உரைக்கும் உரவுத் தோளான்.
61

உரை
   
 
உரோமபதன் தசரதனுக்கு விருந்தளித்தல்

241.ஆடகப் பொன் சுடர் இமைக்கும் மணி மாடத்து
    இடை ஓர் மண்டபத்தை அண்ணிப்,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர்
    பல்லாண்டு இசைப்பப், பைம் பொன் பீடத்து
ஏடு துற்ற வடி வேலோன் தனை இருத்திக்,
    கடன் முறைகள் யாவும் ஈந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப,
    இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான்.
62

உரை
   
 
தசரதன் அயோத்தி மீளுதல்

242.செவ்வி நறும் சாந்து அளித்துத் தேர் வேந்தன்
    தனை நோக்கி, ‘இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருளுக ‘என, நிகழ்ந்த
    பரிசு அரசர் பிரான் கழறலோடும்,
‘அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனைக்
    கொணர்ந்து ஆங்கண் விடுப்பென், ஆன்ற
செவ்வி முடியோய்! ‘எனலும், தேர் ஏறிச்
    சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்.
63

உரை
   
 
உரோமபதன் கலைக்கோட்டுமுனியிடம் வரம் இரத்தல்

243.மன்னர் பிரான் அகன்ற அதன் பின் வய வேந்தன்
    அரு மறை நூல் வடிவு கொண்டது
அன்ன முனிவரன் உறையுள் தனை அணுகி,
    அடி இணைத் தாமரைகள் அம் பொன்
மன்னும் மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட,
    “இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?‘‘ என, ‘‘அடியேற்கு ஓர் வரம் அருளும்
    அடிகள்!‘‘ என, ‘யாவது?‘ என்றான்.
64

உரை
   
 
உரோமபதன் கலைக்கோட்டு முனியை
அயோத்திக்குப் போய்வர வேண்டுதல்

244.‘புறவு ஒன்றின் பொருட்டு ஆகத் துலை புக்க
    பெரும் தகை தன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு
    இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், தசரதன்,
    என்று உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர்
    அடைந்து, இவண் நீ மீடல் ‘என்றான்.
65

உரை
   
 
கலைக்கோட்டுமுனி அயோத்திக்குப் புறப்படுதல்

245.‘அவ் வரம் தந்தனம், இனித் தேர் கொணர்தி ‘என
    அரும் தவத்தோன் அறைதலோடும்,
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர்
    வேலோன், அடி இறைஞ்சி, “வேந்தர் வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் ‘‘ என்று, அதிர்
    குரல் தேர் கொணர்ந்து, ‘‘இதனில் கலை வலாள!
செவ்வி நுதல் திருவினோடும் போந்து ஏறுக‘‘
    என, ஏறிச் சிறந்தான் மன்னோ.
66

உரை
   
 
கலைக்கோட்டு முனி தேரிற் செல்லுதல்

246.குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிடத்
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர
வனிதையும் அரும் மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும் பொறி மிசை நெறியை முன்னினார்.
67

உரை
   
 
தேவர்களின் மகிழ்ச்சி

247.அந்தர துந்துமி முழக்கி,
    ஆய் மலர்
சிந்தினர், களித்தனர்,
    அறமும், தேவரும்,
‘வெந்து எழு கொடும் வினை
    வீழ்க்கும் மெய்ம் முதல்
வந்து எழ அருள் தருவான்! ‘
    என்று எண்ணியே.
68

உரை
   
 
கலைக்கோட்டு முனிவரவைத் தசரதன் அறிதல்

248.தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்
மாதிரம் பொருத தோள் மன்னர் மன்னன் முன்
ஓதினர் முனிவரவு : ஓத வேந்தனும்
காதல் என்று அளவு அறு கடல் உள் ஆழ்ந்தனன்.
69

உரை
   
 
முனியை எதிர்கொளத் தசரதன் எழுதல்

249.எழுந்தனன் பொருக்கென இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை வேிா னோடுமே.
70

உரை
   
 
தசரதன் முனிவனைக் காணுதல் (250-252)

250.‘பிதிர்ந்தது எம் மனத் துயர்ப்
    பிறங்கல் ‘என்றுகொண்டு,
அதிர்ந்து எழு முரசு உடை
    அரசர் கோமகன்,
முதிர்ந்த மாதவம் உடை
    முனியைக் கண்களால்
எதிர்ந்தனன், யோசனை
    இரண்டொடு ஒன்றினே.
71

உரை
   
 
251.நல் தவம் அனைத்தும் ஓர்
    நவை இலா உருப்
பெற்று இவண் அடைந்து எனப்
    பிறங்குவான் தனைச்,
சுற்றிய சீரையும், உழையின்
    தோற்றமும்,
முற்றுறப் பொலிதரு
    மூர்த்தியான் தனை.
72

உரை
   
 
252.அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனைக்
குண்டிகை குடையொடு குலவு நூல் முறைத்
தண்டொடு பொலிதரு தடக்கையான் தனை.
73

உரை
   
 
கலைக்கோட்டு முனியைத் தசரதன் வணங்குதல்

253.இழிந்து போய் இரதம் ஆண்டு
    இணை கொள் தாள் மலர்
விழுந்தனன் வேந்தர்தம்
    வேந்தன்; மெய்ம்மையால்
மொழிந்தனன் ஆசிகள்,
    முதிய நால் மறைக்
கொழுந்து மேல் படர்தரக்
    கொளு கொம்பு ஆயினான்.
74

உரை
   
 
கலைக்கோட்டு முனியை அழைத்துப் போதல்

254.அயல் வரும் முனிவரும்
    ஆசி கூறிடப்
புயல் பொழி தடக் கையால் தொழுது,
    பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும்,
    கலை வலாளனை,
இயல்பொடு கொணர்ந்தனன்
    இரதம் ஏற்றியே.
75

உரை
   
 
தசரதனும் முனியும் அயோத்தி அடைதல்

255.அடி குரல் முரசு அதிர்
    அயோத்தி மா நகர்,
முடி உடை வேந்தன், அம்
    முனிவனோடும், ஓர்
கடிகையின் அடைந்தனன்,
    கமல வாள் முக
வடிவு உடை மடந்தையர்
    வாழ்த்து எடுப்பவே.
76

உரை
   
 
வசிட்டனும் கலைக்கோட்டு
முனியும் அவையை அடைதல்

256.கசடு உறு வினைத் தொழில்
    கள்வர் ஆய் உழல்
அசட்டர்கள் ஐவரை
    அறுவர் ஆக்கிய
வசிட்டனும், அரு மறை
    வழக்கு நீங்கலா
விசிட்டனும், வேந்து அவை
    விதியின் மேவினார்.
77

உரை
   
 
கலைக்கோட்டு முனியை உபசரித்தல்

257.மா மணி மண்டபம்
    மன்னி மாசு அறு
தூ மணித் தவிசு
    இடைச் சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்திக்
    கொள் கடன்
ஏம் உறத் திருத்தி
    வேறு இனைய செப்பினான்.
78

உரை
   
 
தசரதன் கலைக்கோட்டு முனியைத் துதித்தல்

258.‘சான்றவர் சான்றவ! தரும
    மாதவம்
போன்று ஒளிர் புனித! நின்
    அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி
    அரசின் வைகுமால் :
யான் தவம் உடைமையும் இழப்பு
    இன்று ஆம், அரோ!
79

உரை
   
 
கலைக்கோட்டு முனி தன்னை அழைத்த
காரணம் வினாதல் (259-260)

259.என்னலும் முனிவரன் இனிதின் நோக்கு உறா
‘மன்னவர் மன்ன! கேள்! வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால்
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?
80

உரை
   
 
260.என்றன பற்பல இனிமை
    கூறி, ‘நல்
குன்று உறழ் வரி சிலைக்
    குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம்
    நடத்த எண்ணியோ
இன்று எனை அழைத்தது இங்கு?
    இயம்புவாய்! ‘என்றான்.
81

உரை
   
 
தசரதன் புதல்வனில்லாக் குறையைப்
போக்க வேண்டுதல் (261-262)

261.எனக் கலை மா முகச்
    சிருங்கன் இவ் உரை
தனைச் சொலத், தரணிபர்க்கு
    அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிரொடும்
    அறங்கள் உய்யத், தன்
மனத் துயர் அகன்றிட,
    வணங்கிக் கூறுவான்.
82

உரை
   
 
262.‘உலப்பு இல் பல் ஆண்டு
    எலாம் உறுகண் இன்றியே
தலம் பொறை ஆற்றினென்,
    தனயர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார்
    அளிக்கும் மைந்தரை,
நலப் புகழ் பெற, இனி,
    நல்க வேண்டுமால்.
83

உரை
   
 
கலைக்கோட்டு முனி மாமகம் தொடங்கச் செல்லுதல்

263.என்றலும் ‘அரச! நீ இரங்கல்! இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு ‘என்றான்.
84

உரை
   
 
தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்

264.ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்
தூய நல் புனல் படீஇச் சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
85

உரை
   
 
தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்

265.முழங்கு அழல் மும்மையும்
    முடுகி, ஆகுதி
வழங்கியே, ஈர் அறு திங்கள்
    வாய்த்த பின்,
தழங்கின துந்துமி;
    தா இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர்
    வெளி இன்று என்னவே.
86

உரை
   
 
புத்திரகாமயாகம் செய்தல்

266.முகம் மலர் ஒளிர் தர
    மொய்த்து, வான் உேளார்
அகம் விரை நறு மலர் தூவி
    ஆர்த்து எழத்,
தகவு உடை முனியும், அத்
    தழலின் நாப்பணே
மகவு அருள் ஆகுதி
    வழங்கினான், அரோ.
87

உரை
   
 
பூதம் சுதைப் பிண்டத்துடன் எழுதல்

267.அ இடை கனலில் நின்று,
    அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர்
    பிண்டம் ஒன்று, சூழ்
தீ எரிப் பங்கியும்
    சிவந்த கண்ணுமாய்,
ஏயெனப், பூதம் ஒன்று,
    எழுந்தது, ஏந்தியே
88

உரை
   
 
கலைக்கோட்டு முனி பிண்டத்தை
மனைவியர்க்குப் பகிரச்சொல்லுதல்

268.வைத்தது தரை மிசை மறித்தும் அவ் வழித்
தைத்தது பூதம்; அத் தவனும் வேந்தனை
‘உய்த்த நல் அமிர்தினை உரிய மாதர்கட்கு
அத்தகு மரபினால் அளித்தியால்! ‘என்றான்.
89

உரை
   
 
தசரதன் கௌசலைக்கு ஒருபங்கு கொடுத்தல்

269.மாமுனி அருள் வழி மன்னர் மன்னவன்
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமர் ஒண் கௌசலை கரத்தின் ஓர் பகிர்
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ.
90

உரை
   
 
தசரதன் கைகேயிக்கு ஒருபங்கு கொடுத்தல்

270.கைகயன் தனைய தன் கரத்தும் அம்முறைச்
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழப்
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே.
91

உரை
   
 
தசரதன் சுமித்திரைக்கு ஒருபங்கு கொடுத்தல்

271.நமித்திரர் நடுக்கு உறு
    நலம் கொள் மொய்ம்பு உடை
நிமித் திரு மரபு உளான்,
    முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன்,
    சுரர்க்கு வேந்து, ‘இனிச்
சமித்தது என் பகை ‘எனத்
    தமரொடு ஆர்ப்பவே.
92

உரை
   
 
உதிர்ந்தவற்றையும் சுமித்திரைக்கு அளித்தல்

272.பின்னும் அப் பெரும் தகை,
    பிதிர்ந்து வீழ்ந்தது
தன்னையும், சுமித்திரை
    தனக்கு நல்கினான்,
ஒன்னலர்க்கு இடமும், வேறு
    உலகின் ஓங்கிய
மன் உயிர் தமக்கு நீள்
    வலமும் துள்ளவே.
93

உரை
   
 
தசரதன் யாகசாலையினின்று எழுதல்

273.வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது
ஆம் புரை ஆவுதி பிறவும் அந்தணன்
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன்
ஏம்பலொடு எழுந்தனன் யாரும் ஏத்தவே.
94

உரை
   
 
தசரதன் அவையை அடைதல்

274.முருடு அரு பல் இயம்
    முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும்
    இடரின் நீங்கின;
தரெுள் தரு வேள்வியின்
    கடன்கள் தீர்ந்துழி,
அருள் தரும் அவையின் வந்து
    அரசன் எய்தினான்.
95

உரை
   
 
தசரதன் அந்தணர்க்குத் தட்சிணைகொடுத்தல்

275.செய்ம் முறை கடன் முறை
    திறம்பல் இன்றியே,
மெய்ம் முறை கடவுளுக்கு ஈந்து,
    விண் உேளார்க்கு
அம்முறை அளித்து, நீடு
    அந்தணாளர்க்கும்
கை முறை அளித்தனன்,
    கனக மாரியே.
96

உரை
   
 
தசரதன் நீராடல்

276.வேந்தர்கட்கு அரசொடு வெறுக்கை தேர் பரி
வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன் பல் இயம் துவைப்ப ஏகி நீர்
தோய்ந்தனன் சரயு நல் துறை கண் எய்தியே.
97

உரை
   
 
தசரதன் அவையில்வந்து வசிட்டனை வணங்குதல்

277.முரசு இனம் கறங்கிட
    முத்த வெண் குடை
விரசி மேல் நிழற்றிட,
    வேந்தர் சூழ்தர,
அரசு அவை அடைந்துழி,
    அயனும் நாண் உற,
உரைசெறி முனிவன் தாள்
    வணங்கி ஓங்கினான்.
98

உரை
   
 
தசரதன் கலைக்கோட்டு முனியை வணங்குதல்

278.அரிய நல் தவம் உடை
    வசிட்டன் ஆணையால்,
இரலை நல் சிருங்கமா
    இறைவன் தாள் தொழா,
உரிய பல் பல உரை பயிற்றி,
    ‘உய்ந்தனன்,
பெரிய நல் தவ! இனிப்
    பெறுவது யாது? ‘என்றான்.
99

உரை
   
 
கலைக்கோட்டு முனி வழிக்கொண்டேகுதல்

279.‘எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனன் அடியனேன் ‘என்ன ஒள் தவன்
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தித் தேர் மிசை
வந்த மா தவரொடும் வழி கொண்டு ஏகினான்.
100

உரை
   
 
மற்றை முனிவரும் ஆசிகூறி ஏகுதல்

280.வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும்
பாங்கு உடை முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா
நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே.
101

உரை
   
 
மனைவிமார் வயாக்கொள்ளுதல்

281.தரெிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்து அவர்
பொருவு அரு திருமுகம் அன்றிப் பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்பத் தோன்றினார்.
102

உரை
   
 
கோசலை இராமனைப் பெறுதல் (282-284)

282.ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரும் புவி மகள் மகிழ்வின் ஓங்கிட
வேய் புனர்பூசமும் விண் உேளார் புகழ்
தூய கர்க்கடகமும் எழுந்து துள்ளவே.
103

உரை
   
 
283.சித்தரும் இயக்கரும் தரெிவைமார்களும்
வித்தக முனிவரும் விண் உேளார்களும்
நித்தரும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உறத்
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.
104

உரை
   
 
284.ஒரு பகல் உலகு எலாம்
    உதரத்து உள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும்
    அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில்
    காட்டும் சோதியைத்,
திரு உறப், பயந்தனள்
    திறம் கொள் கோசலை.
105

உரை
   
 
கைகேயி பரதனைப் பெறுதல்

285.ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்து உறப்
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை.
106

உரை
   
 
சுமித்திரை இலக்குமணனைப் பெறுதல்

286.தளை அவிழ் தரு உடைச் சயிலகோபனும்
கிளையும் அந்தரம் மிசைக் கெழுமி ஆர்த்து எழ
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவள் பயந்தனள் இளைய வீரனை.
107

உரை
   
 
சுமித்திரை சத்துருக்கனைப் பெறுதல்

287.படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.
108

உரை
   
 
வானத்தவர் கொண்ட மகிழ்ச்சி

288.ஆடினர் அரம்பையர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்!
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்
ஓடினர் உலவினர் உம்பர் முற்றுமே.
109

உரை
   
 
சோதிடர் நாட்கணித்தல்

289.ஓடினர் அரசன் மாட்டு உவகை கூறி நின்று
ஆடினர் சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர் நாெளாடு கோளும் நின்றமை
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர்.
110

உரை
   
 
தசரதன் குழந்தைகள் முகம் பார்த்தல்

290.மா முனி தன்னொடு மன்னர் மன்னவன்
ஏம் உறு புனல் படிந்து இசைந்த ஒண் பொருள்
ஆம் முறை வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உறக்
கோமகர் திரு முகம் குறுகி நோக்கினான்.
111

உரை
   
 
முரசறையுமாறு தசரதன் கட்டளையிடுதல் (291-293)

291.‘இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஒர் ஏழொடு ஏழ்
நிறை நிதிச் சாலை தாழ் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க; என
அறை பறை! ‘என்றனன் அரசர் கோமகன்.
112

உரை
   
 
292.‘படை ஒழிந்திடுக; தம் பதிகளே இனி
விடைபெறுகுக முடி வேந்தர்; வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும்.
113

உரை
   
 
293.‘ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும்;
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தூபமும் வழங்குக! ‘என்றனன்.
114

உரை
   
 
நகரமாந்தர் மகிழ்தல் (294-298)

294.என்புழி வள்ளுவர் யானை மீ மிசை
நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால்
இன்பம் என்று அளக்க அரும் அளக்கர் எய்தினார்.
115

உரை
   
 
295.ஆர்த்தனர் முறை முறை,
    அன்பினால் உடல்
போர்த்தனர் புளகம், வேர்
    பொடித்த, நீள் நிதி
தூர்த்தனர் எதிர் எதிர்
    சொல்லினார்க்கு எலாம்;
தீர்த்தன் என்று அறிந்ததோ
    அவர் தம் சிந்தையே!
116

உரை
   
 
296.பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும்
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து
எண்ணெயும் களபமும் இழுதும் நானமும்
சுண்ணமும் தூவினார் வீதி தோறுமே.
117

உரை
   
 
297.சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடும் கலந்து தையலார்
பந்தியில் சிவிறியால் சிதறப் பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.
118

உரை
   
 
298.இதகை மா நகர் ஈர் அறு நாளும்
சித்தம் உறும் களியோடு சிறந்தே
தத்தமை ஒன்றும் உணர்ந்தில; தாவா
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.
119

உரை
   
 
இராமன் எனப் பெயரிடுதல்

299.கரா மலையத் தளர் கை கரி எய்த்தே
‘அரா அணையில் துயில்வோய்! ‘என அ நாள்
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கே
‘இராமன் ‘எனப் பெயர் ஈந்தனன் அன்றே.
120

உரை
   
 
பரதன் எனப் பெயரிடுதல்

300.கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.
121

உரை
   
 
இலக்குவன் எனப் பெயரிடுதல்

301.‘உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலம் கொடியும் துயர் நீத்தனள்! இந்த
விலக்கு அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்
இலக்குவன் ‘என்ன இசைத்தனன் அன்றே.
122

உரை
   
 
சத்துருக்கன் எனப் பெயரிடுதல்

302.முத்து உருக் கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்து இருக்கும் எழில் உடைய இவ் ஒளியால்
எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணாச்
‘சத்துருக்கன் ‘எனச் சாற்றினன் நாமம்.
123

உரை
   
 
பெயரிட்டபோது தசரதன் தானச் சிறப்பு

303.பொய் வழி இல் முனி புகல் தரு முறையால்
இவ்வழி பெயர்கள் இசைத்துழி இறைவன்
கைவழி நிதி எனும் நதி கலை மறையோர்
மெய்வழி உவரி நிறைத்தன மேல் மேல்.
124

உரை
   
 
தசரதனுக்கு இராமனிடத்து அன்பு

304.காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்
ஆவியும் உடலமும் இலது என அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.
125

உரை
   
 
குமாரர் வளர்கை

305.அமிர்து உகு குதலையோடு அணி நடை பயிலாத்
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்
தமரம் அது உடன் வளர் சதுர் மறை எனவும்
குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்.
126

உரை
   
 
வசிட்டன் கல்வி கற்பித்தல்

306.சவுளமொடு உபநயனமும் முறை தருகுற்று
இ அளவது என ஒரு கரை பிறிது இல வாய்
உவள் அரு மறையின் ஒடு ஒழிவு அறு கலையும்
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.
127

உரை
   
 
குமாரர்கள் படைபயிலுதல்

307.யானையும் இரதமும் இவுளியும் முதல் ஆ
ஏனைய பிறவும் அவ் இயல்பினின் அடையுற்று
ஊன் உறு படைபல சிலையொடு பயிலா
வானவர் தனி முதல் கிளையொடும் வளர.
128

உரை
   
 
எல்லாரும் குமாரர்களைவிரும்பி அணுகுதல்

308.அரு மறை முனிவரும் அமரரும் அவனித்
திருவும் அந்நகர் உறை செனமும் ‘நம் இடரோடு
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம் முறை ‘என உறுவார்.
129

உரை
   
 
இராமனும் இலக்குவனும்

309.ஐயனும் இளவலும் அணி நில மகள் தன்
செய் தவம் உடைமைகள் தரெிதர நதியும்
மைதவழ் பொழில்களும் வாவியும் மருவி
நெய் குழல் உறும் இழை என நிலை திரிவார்.
130

உரை
   
 
பரதனும் சத்துருக்கனும்

310.பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது
இரதமும் இவுளியும் இவரினும் மறை நூல்
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே.
131

உரை
   
 
குமாரர்கள் முனிவர்களிடம் சென்று
மாலை நகர் மீளுதல்

311.வீரரும் இளைஞரும் வெறி பொழில்களின் வாய்
ஈரமொடு உறைதரு முனிவரர் இடை போய்ச்
சோர் பொழுது அணி நகர் துறுகுவர் எதிர்வார்
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால்.
132

உரை
   
 
குமாரர்களுக்காக எல்லாரும் கடவுளரை வேண்டுதல்

312.ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இனையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே.
133

உரை
   
 
இராம இலக்குவர்க்கு உவமைகூறுதல்

313.“கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா
வட வரையுடன் வரு செயல் என மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்
புடைவரும் இளவலும் என நிகர் புகல்வார்.
134

உரை
   
 
இராமன் நகரத்தாரை நலம்வினாவுதல்

314.எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதிதரு குமரரும் வலியர் கொல்? ‘எனவே.
135

உரை
   
 
இராமனுக்கு மக்கள் விடை அளித்தல்

315.அஃது, ‘ஐய! நினை எமது
    அரசு என உடையேம்;
இஃது ஒரு பொருள் அல;
    எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுக, இம்
    மலரோன்
உகு பகல் அளவு? ‘என
    உரை நனி புரிவார்.
136

உரை
   
 
உலகம்புகழ் , தம்பியர் ஏத்த
இராமன் இனிது வாழ்தல்

316.இப் பரிசு அணி நகர் உறையும் யாவரும்
மெய்ப் புகழ் புனைதர இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற
முப்பரம் பொருளுக்கு முதல்வன் வைகுறும்.
137

உரை
   
 
தசரதனுடைய பெருமகிழ்ச்சி

317.அரசர் தம் பெருமகன்,
    அகிலம் யாவையும்
விரசு உறு தனி குடை
    விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட,
    முனிவர் ஏத்துறக்,
கரை செயல் அரியது ஓர்
    களிப்பின் வைகும் நாள்.
138

உரை