| |
| 325. | இன் தளிர்க் கற்பகம் நறும் தேன் |
| இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து |
| நின் தளிக்கும் தனிக் குடையின் |
| நிழல் ஒதுங்கிக், குறை இரந்து நிற்ப, நோக்கிக் |
| குன்று அளிக்கும் குலம் மணித் தோள் சம்பரனைக் |
| குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு, |
| அன்று அளித்த, அரசு அன்றோ புரந்தரன் இன்று |
| ஆள்கின்றது; அரச! என்றான். |
|