மூவரும் சோணை நதியை அடைதல்

478.அலம்பும் மா மணி ஆரத்தொடு
    அகில் அளை புளினம்
நலம் பெய் பூண் முலை,
    நாகு இள வஞ்சி ஆம் மருங்குல்,
புலம்பு மேகலைப் புது மலர்,
    புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால்,
    சோணை ஆம் தரெிவையைச் சேர்ந்தார
1

உரை
   
 
சூரியாத்தமன வருணனை

479.நதிக்கு வந்து அவர் எய்தலும்,
    அருணன் தன் நயனக்
கதிக்கும் முந்து உறு
    கலினம் மான் தேரொடும், கதிரோன்
உதிக்கும் காலையில் தண்மை
    செய்வான் தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல்
    கடல் குளித்தான
2

உரை
   
 
மூவரும் ஒரு சோலையில் தங்குதல்

480.கறங்கு தண் புனல் கடி நெடும்
    தாள் உடைக் கமலத்து
அறம் கொள் நாள் மலர்க் கோயில்கள்
    இதழ்க் கதவு அடைப்பப்
பிறங்கு தாமரை வனம் விட்டுப்
    பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச்
    சோலை புக்கு உறைந்தார
3

உரை
   
 
அச்சோலையைப் பற்றி
இராமபிரான் வினாவ முனிவர்பிரான் விடைதருதல்

481.இனைய சோலை மற்ற யாது? என
    இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன்
    விளம்புவான் ‘மேல் நாள்
தனயர் ஆனவர்க்கு இரங்கியே,
    காசிபன் தனது
மனை உளான், தவம் புரிந்தனள்
    இவண்‘ என வலித்தான்.
4

உரை
   
 
வித்தியாதரமங்கை திருமகள்பால் மலர்மாலை பெறுதல்

482.அண்ட கோளகைக்கு அப்புறத்து
    என்னை ஆள் உடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி
    ஓர் விஞ்சையர் கோதை
புண்டரீகை மென் பதத்து இசை
    புணர்த்தனள் புகழ
வண்டு அறா மது மாலை கைக்
    கொடுத்தனள் மகிழ்ந்து.
5

உரை
   
 
விஞ்சைமகள் மாலையைத்
துருவாசமுனிவருக்கு அளித்தல் (483-484)

483.அன்ன மாலையை யாழ் இடை
    பிணித்து அயன் உலகம்
கன்னி மீடலும், கசட்டு உடை
    முனி எதிர் காணா
என்னை ஆள் உடை நாயகிக்கு
    இசை எடுப்பவள் என்று
அன்னள் தாள் இணை வணங்கி
    நின்று ஏத்தலும் அனையாள்.
6

உரை
   
 
484.‘உலகம் யாவையும் படைத்து அளித்து
    உண்டு உமிழ் ஒருவன்
இலகும் மார்பு அகத்து இருந்து
    உயிர் யாவையும் ஈன்ற
திலக வாள் நுதல், சென்னியில்
    சூடிய தரெியல்
அலகு இல் மா முனி பெறுக ‘என
    அளித்தனள் அளியால்.
7

உரை
   
 
துருவாசன் இந்திரலோகம் அடைதல்

485.‘தயெ்வ நாயகி சென்னியில்
    சூடிய தரெியல்
ஐய! யான் பெறப் புரிந்தது
    எத் தவம்‘ என ஆடி
வெய்ய மாமுனி சென்னியில்
    சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து
    உவந்து உம்பர் நாடு அடைந்தான்.
8

உரை
   
 
இந்திரன் பவனிகண்டு முனிவர் வியப்படைதல்
(486-489)

486.பெய்யும் மா முகில், வெள்ளியம்
    பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து,
    செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
    முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின்
    மேல் விளங்க.
9

உரை
   
 
487.அரம்பை மேனகை திலோத்தமை
    உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியில் தளிர்
    அடி நூபுரம் தழைப்பக்,
கரும்பையும் சுவை கைப்பித்த
    குதலையர் விளரி
நிரம்பு பாடலோடு, ஆடினர்
    வீதிகள் நெருங்க.
10

உரை
   
 
488.நீல மால் வரை தவழ்தரு
    கதிர் நிலாக் கற்றை
போலவே இரு புடையினும்
    சாமரை புரளக்
கோலம் மா மதி குறைவு அற
    நிறைந்து ஒளி குலாவ
மேல் இவர்ந்து என வெள்ளி
    அம் தனிக் குடை விளங்க.
11

உரை
   
 
489.தழங்கு பேரியும் குறட்டொடு
    பாண்டிலும் சங்கும்
வழங்கு கம்பலை, மங்கல
    கீதத்தை மறைப்ப,
முழங்கும் நான் மறை மூரி நீர்
    முழக்கு என உலகை
விழுங்குமா வரும் விழா அணி
    கண்டு, உளம் வியந்தான்
12

உரை
   
 
துருவாசன் இந்திரனுக்குத் தந்த மாலையை
அயிராவதம் காலின் கீழ் இட்டுத் தேய்த்தல்

490.தனை ஒவாதவன், மகிழ்ச்சியால்
    வாசவன் தன் கை
வனையும் மாலையை நீட்டலும்,
    தோட்டியால் வாங்கித்
துனை வலத்து அயிராவதத்து
    எருத்து இடைத் தொடுத்தான் :
பனை செய் கையினால் பறித்து
    அடிப்படுத்தது அப் பகடு.
13

உரை
   
 
துருவாசமுனிவர் சினம்

491.கண்ட மாமுனி விழிவழி
    ஒழுகும் வெம் கனலால்
அண்ட கூடமும் சாம்பராய்
    ஒழியும் என்று அழியா
விண்டு நீங்கினர் விண்ணவர்
    இரு சுடர் மீண்ட
எண் திசாமுகம் இருண்டன
    சுழன்றது எவ் உலகும்.
14

உரை
   
 
துருவாசமுனிவர் இந்திரனை வெகுளுதல்

492.புகை எழுந்தன உயிர் தொறும்,
    எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன, நிவந்தன
    புருவம் நல் நுதலில்,
சிகை எழும் சுடர் விழியினன்,
    அசனியும் திகைப்ப
மிகை எழுந்திடு சதமக!
    கேள் என வெகுண்டான
15

உரை
   
 
துருவாசமுனிவன் மாலை பெற்ற வரலாறு கூறுதல்

493.பூத நாயகன் புவி மகள் நாயகன்
    பொரு இல்
வேத நாயகன் மார்பு அகத்து
    இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்பு உறு
    தரெியல் கொண்டு அணைந்த
மாதராள் வயின் பெற்றனன்
    முயன்ற மா தவத்தால்.
16

உரை
   
 
துருவாசமுனிவன் இந்திரனுக்குச் சாபமிடுதல்

494.இன்று நின் பெரும் செவ்வி கண்டு,
    உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை,
    நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும்
    உவரி புக்கு ஒளிப்பக்,
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன்
    கொதித்தே.
17

உரை
   
 
இந்திரன் செல்வம் யாவும் கடலில் மறைதல்

495.அர மடந்தையர் கற்பகம்
    நவ நிதி அமிர்தச்
சுரபி வெம் பரி மத மலை
    முதலிய தொடக்கு அற்று
ஒரு பெரும்பொருள் இன்றியே
    உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடினர் விண்ணவர்
    கண்ணன் மேவாரின
18

உரை
   
 
தேவர்கள் திருமாலைச் சரணடைதல்

496.வெய்ய மாமுனி வெகுளியால்,
    விண் அகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை
    நோய் நலிதர, வானோர்
தையல் பாகனும் சதுமுகக்
    கடவுளும் கூடிச்
செய்ய தாமரைத் திரு உறு
    மார்பனைச் சேர்ந்தார்.
19

உரை
   
 
பிரமன் முதலியோர்க்குத் திருமால் அபயமளித்தல்

497.வெம் சொல் மாமுனி வெகுளியால்
    விளைந்தமை விளம்பிக்,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும்
    கடவுளர் பிறரும்
‘தஞ்சம் இல்லை; நின் சரணமே
    சரண் ‘எனச் சலியாது,
‘அஞ்சல் அஞ்சல் ‘என்று உரைத்தனன்
    உலகு எலாம் அளந்தோன்
20

உரை
   
 
திருமால் பாற்கடலைக் கடையுமாறு கட்டளையிடல்

498.மத்து மந்தரம், வாசுகி கடை
    கயிறு, அடை தூண்
மெத்து சந்திரன், சுர அசுரர்
    வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்,
    ஓடதி கொடுத்துக்
கத்து வாரிதி மறுகு உற
    அமிழ்து எழக் கடைமின
21

உரை
   
 
தேவர்களின் மகிழ்ச்சி

499.‘யாமும் அவ் வயின் வருதும்,
    நீர் கதும் என எழுந்து
போமின், ‘ என்று அருள்
    புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்தார்,
‘நாமம் இன்று ‘எனக் குனித்தனர்,
    ‘நல்குரவு ஒழிந்தது
ஆம் ‘எனும் பெரும் களி துளக்கு
    உறுத்தலால் அமரர
22

உரை
   
 
தேவர்கள் பாற்கடல் கடைதல்

500.மலை பிடுங்கினர், வாசுகி பிணித்தனர்,
    மதியம்
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி
    நிரைத்தார்,
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்,
    அவனி
நிலை தளர்ந்திட அனந்தனும் கீழ் உற
    நெளித்தான்.
23

உரை
   
 
பாற்கடலைக் கடைதற்குத் திருமால் உதவிபுரிதல்

501.திறல் கொள் ஆமையாய்,
    முதுகினில் மந்தரம் திரிய,
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள்
    பரப்பி மீ வலிப்ப,
மறன் இலா முனி வெகுளியின்
    மறைந்தன வரவே,
அறன் நிலார் மனத்து அடையலா
    நெடும் தகை அமைத்தான்.
24

உரை
   
 
அமிர்தத்தைத் தேவர்களே பெறுதல்

502.இறந்து நீங்கின யாவையும்
    எம்பிரான் அருளால்
பிறந்த; அவ் வயின், சுர அசுரர்
    தங்களில் பிணங்கச்
சிறந்த மோகினி மடந்தையால்
    அவுணர் தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து
    அமரர்கள் துய்த்தார்.
25

உரை
   
 
பாற்கடலில் தோன்றிய பொருள்களைத் திருமால்
பங்கிடுதல்

503.வெருவும் ஆலமும் பிறையும்
    வெள் விடையவற்கு ஈந்து,
தருவும் வேறு உள
    தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும்
    வேறு உற வழங்கித்,
திருவும் ஆரமும் அணிந்தனன்
    சீதர, மூர்த்தி.
26

உரை
   
 
தேவரைக் கொல்லவல்ல புதல்வனைத் தருமாறு திதி
தன் கணவனை வேண்டல்

504.அந்த வேலையில், திதி, பெரும் துயர்
    உழந்து அழிவாள்,
வந்து, காசிபன் மலர் அடி
    வணங்கி, ‘என் மைந்தர்
இந்திர ஆதியர் புணர்ப்பினால்
    இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை
    மடித்தலுக்கு ‘என்றாள்.
27

உரை
   
 
திதி தவம்புரிதல்

505.என்று கூறலும், ‘மகவு உனக்கு
    அளித்தனம்; இனி நீ
சென்று, பார் இடைப்பருவம்
    ஓர் ஆயிரம் தீர
நின்று, மாதவம் புரிதியேல்
    நினைவு முற்றுதி ‘என்று
அன்று கூறிடப் புரிந்தனள்
    அரும் தவம் அனையாள்.
28

உரை
   
 
இந்திரன் திதியின் கருவைச் சிதைத்தல்

506.கேட்ட வாசவன், அன்னவட்கு
    அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள்
    வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும்,
    விம்மி
நாட்டம் நீர் தர, மருத்து எனும்
    நாமமும் நவின்றான்.
29

உரை
   
 
திதி தவம்செய்த இடமூம் சரவணமும் காட்டல்

507.ஆயது இவ் இடம், அவ் இடம்
    அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமை வயின்
    தோன்றிய, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும்
    பொறுக்கலா வலத்த
சேய், வளர்ந்து அருள்
    சரவணம் என்பதும் தரெித்தான்.
30

உரை
   
 
சூரியோதய வருணனை

508.காலன் மேனியில் கருகு இருள்
    கடிந்து, உலகு அளிப்பான்,
நீல ஆர்கலித் தேரொடும்
    நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியின்
    அயனொடு வந்த
மூல தாமரை முழு மலர்
    முளைத்தனெ, முளைத்தான்
31

உரை
   
 
மூவரும் கங்கையைக் காணுதல்

509.அங்கு நின்று எழுந்து
    அயன் முதல் மூவரும் அனையார்
செங் கண் ஏற்றவன்
    செறி சடைப் பழுவத்தின் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து
    ஒழுகலால் பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக்
    கரை பொரு திரு நதி கண்டார்.
32

உரை
   
 
கங்கையின் வரலாறு

510.‘இந்த மா நதிக்கு உற்றுள
    தகைமைய யாவும்
எந்தை கூறுக ‘என்று இராகவன்
    வினவுற, எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான்,
    அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன்,
    இம் மேதினி புரந்தோன்.
33

உரை
   
 
சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்

511.விறல் கொள் வேந்தனுக்கு
    உரியவர் இருவரில், விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு
    அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென்
    சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள்
    அறுபதினாயிரர் வலத்தார்.
34

உரை
   
 
சகரன் வேள்விக் குதிரையை இந்திரன் ஒளித்தது

512.திண் திறல் புனை சகரனும் தனயர்
    சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும்,
    கனன்று
வண்டு துற்ற தார் வாசவற்கு உணர்த்தினர்
    வானோர்,
ஒண் திறல் பரி கபிலனது இடையினில்
    ஒளித்தான்.
35

உரை
   
 
வேள்விக்குதிரை மறைந்ததை அம்சுமான்
சகரனிடம் தரெிவித்தல்

513.வாவு வாசிபின் சென்றனன்
    அஞ்சுமான், மறுகிப்
பூவின் ஓர் இடம் இன்றியே
    நாடினன் புகுந்து,
தேவர் கோ மகன் கரந்தமை
    அறிந்திலன், திகைத்து,
மேவு தாதை தன் தாதைபால்
    உரைத்தனன் மீண்டு.
36

உரை
   
 
சகரர் பூமியைக் குடைந்து வேள்விக்
குதிரையைத் தேடுதல்

514.கேட்ட வேந்தனும், மதலையர்க்கு
    அம் மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொளச் சகரர்கள்
    வடவையின் மறுகி,
நாட்டம் வெம் கனல் பொழிதர
    நால் நிலம் தடவித்,
தோட்டு நுங்கினர் புவியினைப்
    பாதலம் தோன்ற.
37

உரை
   
 
சகரர் பாதலஞ்சென்று கபிலமுனிவர் பின்புறம்
குதிரையைக்கண்டு அம்முனிவரை வருத்துதல்

515.நூறு யோசனை அகலமும்
    ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர் என்பரால் :
    வடகுண திசையின்,
ஏறும் மாதவக் கபிலன்பின்
    இவுளி கண்டு எரியின்
சீறி வைதனர் செருக்கினர்
    நெருக்கினர் சினத்தார்.
38

உரை
   
 
கபிலர் சினத்தால் சகரர் சாம்பராதலும் தூதர்
அரசற்கு அதனை அறிவித்தலும்

516.மூளும் வெம் சினத்து அருந்தவன்
    முனிந்து எரி விழிப்பப்
பூளை சூடி தன் நகையினில் எயில்
    பொடிந்தன போல்
ஆளும் மைந்தர் ஆறு
    அயுதரும் சாம்பராய் அவிந்தார்;
வேள்வி கொண்ட நல்
    வேந்தனுக்கு உரைத்தனர் வேய்கள்.
39

உரை
   
 
அம்சுமான் குதிரைகொணரப் பாதலஞ்சேர்தல்

517.உழைத்து, வெம் துயர்க்கு ஈறு காண்கிலன்,
    உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை,
    ‘அவர் கழிந்தனரேல்
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ? ‘
    என, அவன் எழுந்து
தழைத்த மாதவக் கபிலன் வாழ்
    பாதலம் சார்ந்தான்.
40

உரை
   
 
கபிலமுனிவரிடத்தினின்று வேள்விக்
குதிரை பெறுதல்

518.விண்டு நீங்கினர் உடல் உகு
    பிறங்கல் வெண் நீறு
கண்டு, துண் எனும் மனத்தினன்,
    கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது
    எழுந்தனன், புகழக்,
‘கொண்டு போதி நின் இவுளி ‘என்று
    உற்றதும் குறித்தான்.
41

உரை
   
 
சகரன் வேள்வி முற்றிப் பரலோகம் செல்லல்

519.பழுது இலாதவன் உரைத்த சொல்
    கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து,
    அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து,
    அரசனும் முடிந்தான்;
எழுது கீர்த்தியாய்! மைந்தனுக்கு
    அரசியல் ஈந்து.
42

உரை
   
 
அஞ்சுமான் மரபில் பகிரதன் பிறத்தல்

520.சகரர் தொட்டலால், சாகரம்
    எனப் பெயர் தழைப்ப
மகர வாரிதி சிறந்தது;
    மகிதலம் முழுதும்
நிகரில் மைந்தனே புரந்தனன்;
    இவன் நெடு மரபில்
பகிரதன் எனும் பார்த்திவன்
    வந்து அவதரித்தான்.
43

உரை
   
 
பகீரதன் தன் மூதாதையர் செய்தி வசிட்டரை வினாதல்

521.உலகம் யாவையும் பொது அறத்
    திகிரியை உருட்டி,
இலகு மன்னவன் இருந்துழி,
    இறந்தமை வினவ,
அலகில் தொல் முனி உரைத்திடக்
    கேட்டனன் அரசன்,
திலகம் மண் உற வணங்கி நின்று
    ஒரு மொழி செப்பும்.
44

உரை
   
 
மூதாதையர் நற்கதி அடையும் வகையைப்
பகிரதன் வினவ முனிவர் கூறத் தொடங்கல்

522.‘கொடிய மாமுனி வெகுளியின்
    மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில்
    அழுந்திடும் முறைமை
கடியும் ஆறு, எனக்கு அருந்தவம்
    அதற்கு உறு கருமம்
அடிகள் சாற்றுக ‘என்றலும்,
    அந்தணன் அறைவான்.
45

உரை
   
 
வசிட்டமுனிவன் உபாயம் கூறல்

523.‘வையம் ஆள் உடை
    மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம்,
    ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே
செய்ய நாள் மலர்க்
    கிழவனை நோக்கி நீ செய்தி;
நையல் ‘என்று இனிது
    உரைத்தனன் நவை அறு முனிவன்.
46

உரை
   
 
பகீரதன் தவம்புரியப் பிரமதேவன் தோன்றுதல்

524.ஞாலம் யாவையும் சுமந்திரன்
    தன் வயின் நல்கிக்,
கோலும் மா தவத்து இம கிரி
    மருங்கினில் குறுகிக்,
காலம் ஓர் பதினாயிரம் அரும்தவம்
    கழிப்ப,
மூல தாமரை முழு முதல் கிழவன்
    முந்தினனே.
47

உரை
   
 
பிரமன் , கங்காநதியால் நின் முன்னோர் நல் கதி
பெறுவர் எனல்

525.‘நின் பெருந்தவம் மகிழ்ந்தனன்;
    நினது நீள் குரவர்
முன்பு இறந்தனர் அரும் தவன்
    முனிவின் ஆதலினால்,
மன் பெரும் புவி அதனில்
    வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இரும் கதி பெறுவர்‘
    என்று இசைத்தான்.
48

உரை
   
 
பிரமன் வரம் தந்து மறைதல்

526.‘மாக மா நதி புவி இடை நடக்கின்,
    மற்று அவள் தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி,
    வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி நீ அருந்தவம்
    தொடங்கு, என்று
ஏகினான்; உலகு அனைத்தும்
    எவ் உயிர்களும் ஈன்றான்.
49

உரை
   
 
பகீரதன் சிவபிரானையும் கங்கையையும்
குறித்து நோற்றல்

527.மங்கை பாகனை நோக்கி,
    முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும்,
    தழல் நிறக் கடவுள்,
‘அங்கு வந்து நின் கருத்தினை
    முடித்தும் ‘என்று; அகன்றான்
கங்கையைத் தொழக்
    காலம் ஐயாயிரம் கழித்தான்.
50

உரை
   
 
கங்கை கூறுதல்

528.ஒரு மடம் கொடி ஆகி வந்து,
    உனது மா தவத்து என்
பொரு புனல் கொடி வரின்,
    அதன் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்,
    மற்று இன்னும் நீ அறிந்து
பெருகும் நல் தவம் புரிக,
    என வர நதி பெயர்ந்தாள்.
51

உரை
   
 
பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து
மீண்டும் நோற்றல் (529-530)

529.கரந்தை மத்தமொடு எருக்கு அலர்
    கூவிளை கடுக்கை
நிரந்த பொன் சடை நின்மலக்
    கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டு
    அரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர,
    வரை உறை புனிதன்.
52

உரை
   
 
530.எதிர்ந்து, ‘நின் நினைவு என்‘ என,
    இறைஞ்சி, ‘எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்‘
    என்றலும்,‘அஞ்சேல்
பிதிர்ந்திடா வகை காத்தும் ‘
    என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மாதவம் இரண்டரை
    ஆயிரம் முடித்தான்.
53

உரை
   
 
பகீரதன் புரிந்த தவங்களின் சிறப்பு

531.பெருகு நீரொடு பூதியும்
    வாயுவும் பிறங்கு
சருகும் வெம் கதிர் ஒளியையும்
    துய்த்து, மற்று அதையும்
பருகல் இன்றியும், முப்பதினாயிரம்
    பருவம்
முருகு காதலின் மன்னவன்
    அருந்தவம் முயன்றான்.
54

உரை
   
 
கங்கைவெள்ளத்தைச் சிவபிரான் சடையினில் கரத்தல்

532.உந்தி அம்புயத்து உதித்தவன்
    உறைதரும் உலகும்
இந்திரர் ஆதியர் உலகமும்
    நடுக்கு உற இரைத்து
வந்து தோன்றினள் வரநதி,
    மலைமகள் கொழுநன்,
சிந்திடாது ஒரு சடையினில்
    கரந்தனன் சேர.
55

உரை
   
 
கங்கையை ஒரு சிறிது பூமியில் விடுதல்

533.புல் நுனித் தரு பனி என
    வான் நதி, புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்,
    வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், ‘வருந்தல், நம்
    சடையள் வான் நதி இன்று ‘
என்ன விட்டனன்; ஒரு சிறிது
    அவனி போந்து இழிந்தாள்.
56

உரை
   
 
கங்கையைச் சன்னுமுனிவன் பருகி வெளியிட , அது
சாகரரின் உடல் சாம்பலை நனைத்தல் (534-535)

534.இழிந்த கங்கை முன் மன்னவன் விரைவொடும்
    ஏகக்,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய
    கதியால்,
அழுந்து மாதவச் சன்னுவின் வேள்வியை
    அழிப்பக்,
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கையில்
    கொள்ளா,
57

உரை
   
 
535.உண்டு உவந்தனன் மறை முனிக்
    கணங்கள் கண்டு உவப்பக்
கண்டு வேந்தனும், வணங்கி, முன்
    நிகழ்ந்தன கழறக்
‘கொண்டு போக ‘எனச் செவி வழிக்
    கொடுத்தனன், குதித்து
விண்டு நீங்கினர் உடல் உகு
    பொடியின் மேவினளே.
58

உரை
   
 
பகீரதன் அயோத்திக்கு மீளுதல்

536.நிரய முற்றிய சகரர்கள்
    நெடும் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன
    விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல் இயம்
    முறை முறை துவைப்ப,
அரைசன் அப்பொழுது அணி மதில்
    அயோத்தி மீண்டு அடைந்தான்.
59

உரை
   
 
கங்கையின் சிறப்பு

537.அண்ட கோளகைப் புறத்தது ஆய்,
    அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் பதத்து இடைப்
    பிறந்து, பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய், அரன்
    கொளப், பகிரதன் கொணர,
மண் தலத்து வந்து அடைந்தது; இம்
    மா நதி மைந்த!
60

உரை
   
 
கங்கையின் வேறு பெயர்கட்குக் காரணம்

538.சகரர்தம் பொருட்டு அருந்தவம்
    பெரும் பகல் தள்ளிப்
பகிரதன் கொணரந்்திடுதலால்,
    ‘பகிரதி ‘ஆகி,
மகிதலத்து இடைச் சன்னுவின்
    செவி விழி வரலால்,
நிகரில் ‘சானவி ‘எனப் பெயர்
    படைத்தது இந் நீத்தம
61

உரை
   
 
மூவரும் விதேகநாட்டை அடைதல் (539-540)

539.என்று கூறலும், வியப்பினொடு
    உவந்தனர் இறைஞ்சிச்,
சென்று தீர்ந்தனர் கங்கையை;
    விசாலை வாழ் சிகரக்
குன்று போல் புயத்து அரசன்
    வந்து அடி இணை குறுக,
நின்று நல் உரை விளம்பி,
    மற்று அவ்வயின் நீங்கா.
62

உரை
   
 
540.பள்ளி நீங்கிய பங்கயப்
    பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவு
    உறு கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடும் கண் நிழல்
    கயல் எனக் கருதா,
அள்ளி, நாண் உறும், அகன் பணை
    மிதிலைநாடு அடைந்தார்
63

உரை
   
 
விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு

541.வரம்பு இல் வான் சிறை மதகுகள்
    முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள் மலர் அசோகங்கள்
    அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள்
    நறுமலர் யாழில்
சுரும்பு பாண் செயத், தோகை நின்று
    ஆடுவ சோலை.
64

உரை
   
 
கழனிகளின் சிறப்பு

542.பட்ட வாள் நுதல் மடந்தையர்
    பார்ப்பு எனும் தூதால்
எட்ட ஆதரித்து உழல்பவர்
    இதயங்கள் வெறுப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல்
    வயல் இடை மள்ளர்
கட்ட காவி, அம் கண்
    கடை காட்டுவ கழனி.
65

உரை
   
 
பொய்கைகளின் சிறப்பு

543.தூவி அன்னம் தம் இனம் என்று
    நடை கண்டு தொடரக்
கூவும் மென் குயில் குதலையர்
    குடைந்த தண் புனல் வாய்,
ஓவில் குங்குமச் சுவடு உற,
    ஒன்றொடு ஒன்று ஊடிப்
பூ உறங்கினும் புள் உறங்காதன
    பொய்கை.
66

உரை
   
 
யாறுகளின் சிறப்பு

544.முறையினின் முது மேதியின்
    முலை வழி பாலும்,
துறையில் நின்று உயர் மாங் கனி
    தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆடிய
    அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது நளிர் புனல்
    பெருகலா நதிகள்.
67

உரை
   
 
நீரோடைகளின் சிறப்பு

545.இழைக்கும் நுண் இடை இடைதர
    முகடு உயர் கொங்கை
மழைக் கண் மங்கையர், அரங்கினில்
    வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை, வெருவிய
    மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில்
    குதிப்பன ஓடை.
68

உரை
   
 
குளங்களின் சிறப்பு

546.படை நெடுங் கண் வாள் உறை புகப்
    படர் புனல் மூழ்கிக்
கடைய, முன் கடல் செழு திரு
    எழும்படி காட்டி,
மிடையும் வெள் வளை புள்ெளாடும் ஒலிப்ப,
    மெல் இயலார்
குடைய, வண்டு இனம் கடி மலர்
    குடைவன குளங்கள்.
69

உரை
   
 
அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டை
மூவரும் காணுதல்

547.இனைய நாட்டினை இனிது சென்று,
    இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின்
    புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து, இழி
    மாதவப் பன்னி,
கனையும் மேட்டு உயர்
    கருங்கல் ஓர் வெள் இடைக் கண்டார
70

உரை
   
 
அகலிகை முன்னைய வடிவம் பெறுதல்

548.கண்ட கல் மிசைக் காகுத்தன்
    கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற,
    வேறுபட்டு, உருவம்
கொண்டு மெய் உணர்பவன்
    கழல் கூடியது ஒப்பப்
பண்டை வண்ணம் ஆய் நின்றனள்;
    மாமுனி பணிப்பான்.
71

உரை
   
 
அகலிகையை முனிவன் இராமனுக்கு அறிவித்தல்

549.மா இரு விசும்பில் கங்கை
    மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு
    மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த
    தேவர் கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி,
    அகலிகை ஆகும், என்றான்
72

உரை
   
 
அகலிகையின் சாப வரலாற்றை இராமன் உசாவுதல்

550.பொன்னை ஏர் சடையான் கூறக்
    கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னையே! என்னையே! இவ்
    உலகியல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினாலோ? நடுவு
    ஒன்று முடிந்தது உண்டோ?
‘அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்த
    ஆறு அருளுக ‘என்றான்.
73

உரை
   
 
இந்திரன் அகலிகையை அணைய விழைதல்

551.அவ் உரை இராமன் கூற, அறிவனும்
    அவனை நோக்கிச்
செவ்வியோய்! கேட்டி, மேல் நாள்
    செறி சுடர்க் குலிசத்து அண்ணல்,
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை
    அற்றம் நோக்கி,
நவ்வி போல் விழியினாள் தன் வனமுலை
    நணுகல் உற்றான்.
74

உரை
   
 
இந்திரன் கௌதமன் உருவொடு புகுதல்

552.தையலாள் நயன வேலும்
    மன்மதன் சரமும் பாய,
உய்யலாம் உறுதி நாடி
    உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி,
    மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன்
    உருவமே கொண்டு புக்கான
75

உரை
   
 
இந்திரன் அகலிகையை அணைந்திருத்தலும்
கௌதம முனிவர் வருதலும்

553.புக்கு, அவேளாடும் காமப்
    புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும்,
    உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள்,
    தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல்
    முனிவனும் முடுகி வந்தான்.
76

உரை
   
 
இந்திரன் அஞ்சிப் பூனையாய்ப் போதல்

554.சரம் தரு சாபம் அல்லால்
    தடுப்பு அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த
    வருதலும், வெருவி, மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும்
    நெடும் பழி பூண்டாள் நின்றாள்,
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர்
    பூசையாய்ப் போகல் உற்றான
77

உரை
   
 
கௌதமன் இந்திரனுக்குச் சாபங் கொடுத்தல்

555.தீ விழி சிந்த நோக்கிச், செய்ததை
    உணர்ந்து, செய்ய,
தூயவன், அவனை நின்கைச் சுடுசரம்
    அனைய சொல்லால்,
‘ஆயிரம் மாதர்க்கு உள்ள
    அறிகுறி உனக்கு உண்டாக‘ என்று
ஏயினன்; அவை எலாம் வந்து
    இயைந்தன இமைப்பின் முன்னம்.
78

உரை
   
 
கௌதமன் அகலிகைக்குச் சாபங் கொடுத்தல்

556.எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும்
    நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
    புரந்தரன் போயபின்றை,
மெல்லியலாளை நோக்கி, விலை
    மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான்; கரும்
    கல் ஆய் மருங்கு வீழ்வாள்.
79

உரை
   
 
அகலிகை வேண்டக் கௌதமன் சாபம்
நீங்கும் வகை கூறுதல்

557.பிழைத்தது பொறுத்தல் என்றும்
    பெரியவர் கடனே என்பர்,
‘அழல் தரும் கடவுள் அன்னாய்!
    முடிவு இதற்கு அருளுக ‘என்னத்,
‘தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
    தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக்
    கல் உருத் தவிர்தி‘ என்றான்.
80

உரை
   
 
இந்திரன் சாபத்தை முனிவன் போக்குதல்

558.அந்த இந்திரனைக் கண்ட
    அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட,
    மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து,
    சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,
தம் தமது உலகு புக்கார்;
    தையலும் கிடந்தாள் கல்லாய்.
81

உரை
   
 
விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்

559.இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
    இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்
    துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின்
    மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்.
82

உரை
   
 
இராமன் அகலிகையை வணங்கிச் செல்லுதல்

560.தீது இலா உதவி செய்த
    சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன
    பொருள் எலாம் மனத்தில் கொண்டு,
‘மாதவன் அருள் உண்டாக
    வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை ‘என்று
    பொன் அடி வணங்கிப் போனான்.
83

உரை
   
 
விசுவாமித்திரன் அகலிகையை ஏற்றுக்கொள்ளுமாறு
கௌதமரிடம் கூறுதல் (561-562)

561.அருந்தவன் உறையுள் தன்னை
    அனையவர் அணுகலோடும்,
விருந்தினர் தம்மைக் காணா
    விம்மலால் வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்குக்
    கடன் முறை பழுது உறாமல்
புரிந்த பின், காதி செம்மல்,
    புனித மாதவனை நோக்கி.
84

உரை
   
 
562.‘அஞ்சன வண்ணத்தான் தன்
    அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை
    வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை,
    நீ அழைத்திடுக‘ என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன முனிவனும்
    கருத்துள் கொண்டான்.
85

உரை
   
 
அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து மூவரும்
மிதிலையை அடைதல்

563.குணங்களால் உயர்ந்த வள்ளல்,
    கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி,
    மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து,
    ஆண்டு அருந்தவனொடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி,
    மணி மதில் கிடக்கை கண்டார்.
86

உரை