சனகன் தூதர்கள் தசரதன் அரண்மனையை அடைதல்

816.கடுகிய தூதரும் காலில் காலின் சென்று
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்
அடி இணை தொழ இடம் இன்றி மன்னர்தம்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார்.
1

உரை
   
 
தூதர்கள் தசரதனை வணங்குதல்

817.முகந்தனர் திரு அருள் முறையின் எய்தினார்
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனைப்
புகழ்ந்தனர் ‘அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது ‘என நெடிது கூறினார்.
2

உரை
   
 
தூதர் ஓலையைக் கொடுத்தல்

818.கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை
‘ஈறில் வண் புகழினாய்! இது அது ‘என்றனர்;
வேறு ஒரு புல மகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான் ‘வாசி! ‘என்றனன்.
3

உரை
   
 
இராமன் வீரங்கேட்ட தயரதன் மகிழ்ச்சி

819.இலை முகப் படத்து, அவர்
    எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில்
    செவியில் சார்தலும்,
நிலை முக வலயங்கள்
    நிமிர்ந்து நீங்கிட,
மலை என வளர்ந்தன
    வயிரத் தோள்களே!
4

உரை
   
 
தசரதன் வியத்தல்

820.வெற்றி வேல் மன்னவன்
    ‘தக்கன் வேள்வியில்
கற்றை வார் சடை முடிக்
    கணிச்சி வானவன்
முற்ற ஏழ் உலகையும்
    வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலி கொல் அன்று
    இடித்தது இங்கு? என்றான்.
5

உரை
   
 
தூதர்க்கு ஆடையும் அணியும் அளித்தல்

821.என்று உரைத்து எதிர்
    எதிர், இடைவிடாது, ‘நேர்
துன்றிய கனை கழல்
    தூதர் கொள்க ‘எனப்
பொன் திணி கலன்களும்
    தூசும் போக்கினான்,
குன்று என உயரிய
    குவவுத் தோளினான்.
6

உரை
   
 
மணமுரசு அறைகவென்றல்

822.‘வானவன் குலத்து எமர்
    வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த, அம்
    மிதிலை நோக்கி நம்
சேனையும் அரசரும்
    செல்க முந்து எனா
ஆனை மேல் மண முரசு
    அறைக! ‘என்று ஏவினான்.
7

உரை
   
 
வள்ளுவன் பறையறைதல்

823.வாம் பரி விரி திரைக் கடலை வள்ளுவன்
தேம் பொழி துழாய் முடிச் செங்கண் மாலவன்
ஆம் பரிசு உலகு எலாம் அளந்து கொண்ட நாள்
சாம்புவன் திரிந்து எனத் திரிந்து சாற்றினான்.
8

உரை
   
 
முரசொலி கேட்டோர் மகிழ்தல்

824.சாற்றிய முரசு ஒலி செவியில் சாரும் முன்
கோல் தொடி மகளிரும் கோல மைந்தரும்
வேல் தரு குமரரும் வென்றி வேந்தரும்
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினார்.
9

உரை
   
 
சேனை செல்லுதல்

825.விடை பொரு நடையினான்
    சேனை வெள்ளம், ஓர்
இடை இலை உலகினில்
    என்ன ஈண்டிய,
கடையுக முடிவினில் எவையும்
    கால் படப்
புடை பெயர் கடல் என
    எழுந்து போயதே.
10

உரை
   
 
தேரும், யானையும் விளங்குதல்

826.சில் இடம் உலகு எனச்
    செறிந்த தேர்கள் தாம்,
புல்லிடு சுடர் எனப்
    பொலிந்த வேந்தரால்;
எல்லிடு கதிர் மணி
    எறிக்கும் ஓடையால்,
வில்லிடும் முகில் எனப்
    பொலிந்த வேழமே.
11

உரை
   
 
குடைகளும்-கொடிகளும்

827.கால் விரிந்து எழு குடை,
    கணக்கு இல் ஓதிமம்
பால் விரிந்தது எனப்,
    பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு
    கொடிப்படலை, விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று
    தோன்றுமால்.
12

உரை
   
 
வெண்கொடிகள் வெண்மேகம் போலும் எனல்

828.நுடங்கிய துகில் கொடி,
    நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையைக்
    கடல் இது ஆம் என
இடம்பட எங்கணும்
    எழுந்த வெண் முகில்
தடம் புனல் பருகிடத்
    தாழ்வ போன்றவே.
13

உரை
   
 
சேனையில் உள்ளவர் அணிந்த ஆபரணங்கள்
முதலியவற்றின் செயல்

829.இழையிடை இள வெயில்
    எறிக்கும்; அவ் வெயில்
தழையிடை நிழல் கெடத்
    தவழும்; அத் தழை
மழையிடை எழில் கெட
    மலரும்; அம் மழை
குழைவுற முழங்கிடும்
    குழாம் கொள் பேரியே.
14

உரை
   
 
குதிரைமீதும் யானைமீதும் மகளிர் ஊர்தல்

830.மன் அணிப் புரவிகள்
    மகளிர் ஊர்வன
அன்னம் உந்திய திரை
    ஆறு போன்றன;
பொன்னணிப் புணர் முலைப்
    புரி மென் கூந்தலார்
மின் என மடப் பிடி
    மேகம் போன்றவே.
15

உரை
   
 
சேனை செல்லும் வழி

831.இணை அடுத்து இடையிடை
    நெருக்க ஏழையர்
துணை முலைக் குங்குமச்
    சுவடும் ஆடவர்
மணி வரைப் புயத்து
    மென் சாந்தும் மாழ்கி, மெல்
அணை எனப் பொலிந்தது
    அக் கடல்செல் ஆறு, அரோ!
16

உரை
   
 
மகளிர் கொங்கைகள் அணிபெற்று விளங்குதல்

832.முத்தினால் முழு நிலவு
    எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால் இள வெயில்
    பரப்பும்; பாகினும்
தித்தியா நின்ற சொல்
    சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு
    ஒளிக்கும் கூற்றமே.
17

உரை
   
 
மகளிரைத் தழுவி மைந்தர் செல்லுதல்

833.வில்லினர் வாளினர் வெறித்த குஞ்சியர்
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்
வல்லியின் மருங்கினர் மருங்கு மாப் பிடி
புல்லிய களிறு என மைந்தர் போயினார்.
18

உரை
   
 
மகளிர் சிவிகை செல்லுதல்

834.மன்றல் அம் புது மலர்
    மழையின் சூழ்ந்து எனத்
துன்று இருங் கூந்தலார்
    முகங்கள் தோன்றலால்,
ஒன்று அலா முழு மதி
    ஊரும் மானம்போல்,
சென்றன தரள வான்
    சிவிகை ஈட்டமே.
19

உரை
   
 
யானைப்படையின் மிகுதி

835.மொய் திரைக் கடல் என
    முழங்கி, மூக்கு உடைக்
கைகளில் திசை நிலைக்
    களிற்றை ஆய்வன,
மையல் உற்று இழி மத
    மழை அறாமையால்,
தொய்யலைக் கடந்தில,
    சூழி யானையே.
20

உரை
   
 
குதிரைகளின் செலவு

836.சூர் உடை நிலையெனத்
    தோய்ந்தும் தோய்கிலா
வார் உடை வன முலை
    மகளிர் சிந்தைபோல்
தாரொடும் சதியொடும்
    தாவும் ஆயினும்
பாரிடை மிதிக்கில,
    பரியின் பந்தியே.
21

உரை
   
 
ஊடிய மகளிர் செல்லுதல்

837.ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர்
நீடிய உயிர்ப்பினர் நெறித்த நெற்றியர்
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்
ஆடவர் உயிர் என அருகு போயினார்.
22

உரை
   
 
யானைகளின் செலவு

838.மாறு எனத் தடங்களைப்
    பொருது, மாமரம்
ஊறு பட்டிட இடை ஒடித்துச்,
    சாய்த்து, உராய்,
ஆறு எனச் சென்றன,
    அருவி பாய் கவுள்,
‘தாறு ‘எனக் கனல் உமிழ்
    தறுகண் யானையே.
23

உரை
   
 
முன்சேனை மிதிலையை அடைதல்

839.உழுந்து இட இடம் இலை;
    உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கு எலாம்
    அருள் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப்
    படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில்
    மிதிலை கூடிற்றே.
24

உரை
   
 
வண்டிகள் செல்லுதல்

840.கண்டவர் மனங்கள்
    கை கோப்பக் காதலின்
வண்டு இமிர் கோதையர்
    வதன ராசி ஆல்,
பண்டிகள் பண்டிகள்,
    பரிசில் செல்வன,
புண்டரீகத் தடம்
    போவ போன்றவே.
25

உரை
   
 
ஒரு காதலியின் கடைக்கண்நோக்கச் சிறப்பு

841.பாண்டிலின் வைத்த ஓர்
    பாவை, தன்னொடும்
ஈண்டிய அன்பினன்
    ஏகுவான் இடைக்
காண்டலும், நோக்கிய
    கடைக்கண் அஞ்சனம்,
ஆண் தகைக்கு இனியது, ஓர்
    அமுதம் ஆயதே.
26

உரை
   
 
பிரிந்த காதலன் பேதுறுதல்

842.பிள்ளை மான் நோக்கியைப்
    பிரிந்து போகின்றான்,
அள்ளல் நீர் மருதம் வைப்பு
    அதனின், அன்னமாம்
புள்ளும் மென் தாமரைப்
    பூவும் நோக்கினான்,
உள்ளமும் தானும் நின்று
    ஊசல் ஆடுவான்.
27

உரை
   
 
சேனை கங்கை யாற்றை ஒத்தது எனல்

843.அங்கண் ஞாலத்து அரசு மிடைதலால்
பொங்கு வெண் குடை சாமரை போர்த்தலால்
கங்கை யாறு கடுத்தது கார் எனச்
சங்கு பேரி முழங்கிய தானையே.
28

உரை
   
 
சேனை போர்க் களத்தை யொத்தது எனல்

844.அமிர்த அம் சொல் அணங்கு அனையார் உயிர்
கவரும் கூர்நுதிக் கண் எனும் காலன் வேல்
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்
சமர பூமியும் ஒத்தது தானையே.
29

உரை
   
 
சேனையின் செறிவு

845.தோள் மிடைந்தன,
    தூணம் மிடைந்து என;
வாள் மிடைந்தன,
    வான் மின் மிடைந்து எனத்;
தாள் மிடைந்தன,
    தம்மி மிடைந்து என;
ஆள் மிடைந்தன,
    ஆளி மிடைந்து என.
30

உரை
   
 
இளைஞர் செயல் கூறுவன (846-851)

846.வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான் நெறி அந்தரில் சென்று ஒரு
மூரி மாமத யானையை முட்டினான்.
31

உரை
   
 
847.சுழிகொள் வாம்பரி துள்ள,
    ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை,
    ஓர் வள்ளல்தான்,
எழுவின் நீள் புயத்தால்
    எடுத்து ஏந்தினான்,
தழுவி நின்று ஒழியான்,
    தரைதான் வையான்.
32

உரை
   
 
848.துணைத்த தாமரை நோவத்
    தொடர்ந்து இடை
கணைக் கருங் கணினாளை,
    ஓர் காளைதான்,
‘பணைத்த வெம்முலைப்
    பாய்மத யானையை
அணைக்க நம் கைக்கு
    அகலிடம் இல் ‘என்றான்.
33

உரை
   
 
849.சுழியும் குஞ்சி மிசைச்
    சுரும்பு ஆர்த்திடப்,
பொழியும் மாமத யானையின்
    போகின்றான்,
‘கழிய கூரிய! ‘என்று ஒரு
    காரிகை
விழியை நோக்கித் தன்
    வேலையும் நோக்கினான்.
34

உரை
   
 
850.தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங்கண் வாள் உடையாளை ஓர் காளைதான்
‘நெருங்கு பூண்முலை நீள்வளைத் தோளினிர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்? ‘என்றான்.
35

உரை
   
 
851.கூற்றம் போலும் கொலை கண்ணினால் அன்றி
மாற்றம் பேசுகிலாளை ஒர் வள்ளல்தான்
‘ஆற்று நீர் இடை அங்கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை யாவர் கொலோ? ‘என்றான்.
36

உரை
   
 
ஒட்டகங்களின் செயல்

852.தள்ள அரும் பரம் தாங்கிய ஒட்டகம்
தெள்ளு தேம் குழை யாவையும் தின்கில
உள்ளம் என்னத் தம்வாயும் உலர்ந்தன
கள் உண் மாந்தரில் கைப்பன தேடியே.
37

உரை
   
 
பப்பரர் செல்லுதல்

853.அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர்
பரித்த காவினர் பப்பரர் ஏகினார்
திருத்து கூடத்தில் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே.
38

உரை
   
 
பெண்யானையின் மீதிருந்த பெண்கள் செயல்

854.பித்த யானை பிணங்கிப் பிடியில் கை
வைத்த; மேலிருந்து அஞ்சிய மங்கைமார்
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார் இரு
கைத் தலங்களில் கண் அடங்காமையே.
39

உரை
   
 
பிடியின்மேற் சிந்தரும் போதல்

855.வாம மேகலையார் இடை வாலதி
பூமி தோய் பிடிச் சிந்தரும் போயினார்
காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்
ஆமை மேல் வரும் தேரையின் ஆய் அரோ!
40

உரை
   
 
குதிரை ஒருபெண்ணைத் தூக்கிச் செல்லுதல்

856.‘இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள்
உம்பர் கோமகற்கு ‘என்கின்றது ஒக்குமால்
கம்ப மா வரக் கால்கள் வளைத்து ஒரு
கொம்பு அனாளைக் கொண்டு ஓடும் குதிரையே.
41

உரை
   
 
மகளிர் மகிழ்ச்சியால் ஓடுதல்

857.சந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்
சிந்தும் மேகலை சிந்தையும் செய்கலார்
‘எந்தை வில் இறுத்தான்! ‘எனும் இன்சொலை
மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார்.
42

உரை
   
 
அந்தணர் மிதிலைக்குச் செல்லுதல்

858.குடையர் குண்டிகை தூக்கினர் குந்திய
நடையர் நாசி புதைத்த கை நாற்றலர்
கட களிற்றையும் காரிகை யாரையும்
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார்.
43

உரை
   
 
உருவெளிப்பாடு கண்டு பெண்கள் கூறியது

859.நாறு பூங் குழல் நங்கையர் கண்கள் நீர்
ஊற நேர்வந்து உருவு வெளிப்பட
‘மாறு கொண்டனை; வந்தனை ஆகில் வந்து
ஏறு தேர்‘ எனக் கைகள் இழிச்சுவார்.
44

உரை
   
 
படைகளின் ஒலியால் உரை கேளாமை

860.குரைத்த தேரும் களிறும் குதிரையும்
நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும்
உரைத்து உணர்ந்திலர் ஊமரின் ஏகினார்.
45

உரை
   
 
மகளிர் கூட்டம் செல்லுதல்

861.நுண் சிலம்பி வலந்து அன நுண் துகில்
கள் சிலம்பு கருங்குழலார் குழு
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்
புள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே.
46

உரை
   
 
862.தெள் திரைப் பரவைத் திரு அன்னவர்
நுண் திரைப் புரை நோக்கிய நோக்கினைக்
கண்டு இரைப்பன ஆடவர் கண்; களி
வண்டு இரைப்பன ஆனை மதங்களே.
47

உரை
   
 
மகளிர் சிலம்பும் குதிரையும் ஒலித்தல்

863.உழை கலித்தன என்ன உயிர்த் துணை
நுழை கலிக்கரும் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன்னியமா எழு
மழை கலித்து என வாசி கலித்தவே.
48

உரை
   
 
மகளிர் கண்ணைப் பார்த்து ஆடவர்
கண்கள் களித்தன எனல்

864.மண் களிப்ப நடப்பவர் வாள் நுதல்
உண் களிக் கமலங்களின் உள் உறை
திண் களிச் சிறு தும்பி எனச் சிலர்
கண் களித்தன காமன் களிக்கவே.
49

உரை
   
 
சுண்ணமும் தூசியும் நிறைதல்

865.எண்ண மாத்திரமும் அரிதாம் இடை
வண்ண மாத் துவர் வாய்க் கனி வாய்ச்சியர்
திண்ணம் ஆத்து ஒளிர் செவ்விள நீர் இழி
சுண்ணம் ஆர்த்தன; தூளியும் ஆர்த்தவே.
50

உரை
   
 
மகளிரும் ஆடவரும் ஆரவாரத்தோடு வழிச்சேறல்

866.சித்திரத் தடம் தேர் மைந்தர் மங்கையர்
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பிலர்
இத் திறத்தினர் எத்தனையோ பலர்
மொய்த்து இரைத்து வழி கொண்டு முன்னினார்.
51

உரை
   
 
தூளி எழுதல்

867.குசை உறு பரியும், தேரும்,
    வீரரும், குழுமி, எங்கும்
விசையொடு கடுகப் பொங்கி,
    வீங்கிய தூளி விம்மிப்
பசையுறு துளியின் தாரைப்
    பசுந்தொளை அடைத்த மேகம்;
திசை தொறும் நின்ற யானை
    மதத்தொளை செம்மிற்று அன்றே.
52

உரை
   
 
மதநீர் வழுக்கில் மகளிரை அழைத்துச் செல்லல்

868.கேடகத் தடக் கையாலே
    கிளர் ஒளி வாளும் பற்றிச்,
சூடகத் தளிர்க் கை மற்றைச்
    சுடர்மணித் தடக்கை பற்றி,
ஆடகத்து ஓடை யானை
    அழி மதத்து இழுக்கல் ஆற்றில்
பாடகக் காலினாரைப் பயப்
    பயக் கொண்டு போனார்.
53

உரை
   
 
வழிநடையில் மகளிர் நீர்ப்பூக்களைப் பறித்துத்
தரவேண்டுதல்

869.செய்களில், மடுவில், நல்நீர்ச்
    சிறைகளில், நிறையப் பூத்த
நெய்தலும் குமுதப் பூவும்
    நெகிழ்ந்த செங்கமலம் போதும்,
கைகளும் முகமும் வாயும்
    கண்களும் காட்டக் கண்டு,
‘கொய்து அவை தருதிர் ‘என்று,
    கொழுநரைத் தொழுகின்றாரும்.
54

உரை
   
 
மகளிர் யானையைக் கண்டு மருண்டார் எனல்

870.பந்தியம் புரவி நின்றும்
    பார் இடை இழிந்தோர், வாசக்
கொந்தள பாரம் சோரக்,
    குலம் மணி கலன்கள் சிந்தச்,
சந்த நுண் துகிலும் வீழத்
    தளிர்க் கையால் அணைத்துச், ‘சார
வந்தது வேழம்! ‘என்ன,
    மயில் என இரியல் போவார்.
55

உரை
   
 
இரவும் பகலும் ஒருசேர உளவாயின எனல்

871.குடையொடு களிறும், தொங்கல்
    குழாங்களும், கொடியின் காடும்,
இடை இடை மயங்கி எங்கும்
    வெளி கரந்து இருளைச் செய்யப்,
படைகளும் முடியும் பூணும்
    படர் வெயில் பரப்பிச் செல்ல,
இடை ஒரு கணத்தின் உள்ளே
    இரவு உண்டு பகலும் உண்டே!
55

உரை
   
 
மகளிரைக் கண்டு ஆடவர் அகலுதல்

872.‘முருக்கு இதழ் முத்தம் மூரல்
    முறுவலார் முகங்கள் என்னும்
திருக்கிளர் கமலப் போதில்
    தீட்டின கிடந்த கூர்வாள்
நெருக்கு இடை அறுக்கும், நீங்கள்
    நீங்குமின்! நீங்கும்! ‘என்று என்று,
அருக்கனில் ஒளிரும் மேனி
    ஆடவர் அகலப் போவார்.
57

உரை
   
 
நங்கையர் நடக்க மாட்டாது நிற்றல்

873.நீந்த அரு நெறியின் உற்ற
    நெருக்கினால் சுருக்குண்டு, அற்றுக்,
காந்தின மணியும் முத்தும்
    சிந்தின, கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம் பரிபுரம்
    புலம்பப், பசுமை பொன்
பூந்தளிர் உறைப்ப, மாழ்கிப்,
    ‘போக்கு அரிது ‘என்ன நிற்பார்.
58

உரை
   
 
வண்டிக் காளைகள் வெருண்டோடுதல்

874.கொற்ற நல் இயங்கள் எங்கும்
    கொண்டலின் துவைப்பப், பண்டிப்
பெற்ற ஏறு, அன்னப் புள்ளில்
    பேதையர் வெருவி நீங்க,
முற்று உறு பரங்கள் எல்லாம்
    முறைமுறை பாசத்தோடும்
பற்று அற வீசி, ஏகி, யோகியில்
    பரிவு தீர்ந்த.
59

உரை
   
 
நீர்நிலையில் யானைகள் துளைதல்

875.கால்செறி வேகப் பாகர்
    கார்முக உண்டை பாரா,
வார் சிறைக் கொங்கை அன்ன
    கும்பமும் மருப்பும் காணப்,
பால்செறி கடலில் தோன்றும்
    பனைக்கை மால்யானை என்ன,
நீர்ச்சிறை பற்றி ஏறா,
    நின்ற குன்று அனைய வேழம்.
60

உரை
   
 
பாணர் விறலியருடன் செல்லுதல்

876.அறல் இயல் கூந்தல், கண்வாள்,
    அமுது உகு குமுதச் செவ்வாய்
விறலியரோடு, நல் யாழ்
    செயிரியர், புரவி மேலார்,
நறை செவி பெய்வது என்ன
    நைவள அமுதப் பாடல்
முறைமுறை நணுகப் போனார்,
    கின்னர மிதுனம் ஒப்பார்.
61

உரை
   
 
களிற்றில் மொய்த்தவண்டுகள் பிடியொடும் தொடர்தல்

877.அருவிபெய் வரையில் பொங்கி,
    அங்குசம் நிமிர, எங்கும்
இரியலின், சனங்கள் சிந்தும்,
    இளங்களிச் செங்கண் யானை
விரிசிறைத் தும்பி, வேறு ஓர்
    வீழ்மதம் தோய்ந்து, மாதர்
சுரிகுழல் படிய ஒற்றிப்
    பிடியொடும் தொடர்ந்து செல்வ.
62

உரை
   
 
தசரதனுடைய நேய மங்கையர் செல்லுதல்

878.நிறைமதித் தோற்றம் கண்ட
    நீல் நெடும் கடலிற்று ஆகி,
அறைபறை துவைப்பத், தேரும்,
    யானையும், ஆடல் மாவும்,
கறைகெழு வேல் கணாரும்,
    மைந்தரும், கவினி ஒல்லை
நெறி இடை படர, வேந்தன்
    நேய மங்கையர்தாம் செல்வார்.
63

உரை
   
 
கைகேசி செல்லுதல்

879.பொய்கை அம் கமலக் கானில்,
    பொலிவது ஓர் அன்னம் என்னக்,
கைகயர் வேந்தன் பாவை,
    கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐயிரு நூறு சூழ்ந்த
    ஆய் மணிச் சிவிகை தன்மேல்,
தயெ்வ மங்கையரும் நாணத்,
    தேன் இசை முரலப் போனாள்.
64

உரை
   
 
கஞ்சுக மாக்கள் கைகேயியைக் காத்துச் செல்லுதல்

880.காரணம் இன்றியேயும்
    கனல் எழ விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்தார், தாழ்ந்து
    விரிந்த கஞ்சுகத்து மெய்யார்,
தாரணி புரவி மேலார்,
    தலத்து உளார், கதித்த சொல்லார்,
ஆரணங்கு அனைய மாதர்
    அடி முறை காத்துப் போனார்.
65

உரை
   
 
சுமித்திரை செல்லுதல்

881.விரிமணித் தார்கள் பூண்ட
    வேசரி வெரிநில் தோன்றும்
அரிமலர்த் தடங்கண் நல்லார்
    ஆயிரத்து இரட்டி சூழக்,
குருமணிச் சிவிகை தன்மேல்,
    கொண்டலின் மின் இது என்ன,
இருவரைப் பயந்த நங்கை
    யாழ் இசை முரலப் போனாள்.
66

உரை
   
 
சுமித்திரையைச் சூழ்ந்து மகளிர் செல்லுதல்

882.செங்கையில் மஞ்ஞை அன்னம்
    சிறு கிளி பூவை பாவை
சங்கு உறை கழித்த அன்ன
    சாமரை முதல தாங்கி,
இங்கு அலது, எண்ணுங்கால்,
    இவ் எழுதிரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை என்ன,
    மடந்தையர் மருங்கு போனார்.
67

உரை
   
 
கௌசல்யை செல்லுதல்

883.வெள்ளெயிற்று இலவச் செவ்வாய் முகத்தை
    வெண்மதியம் என்று
கொள்ளையில் சுற்றும் மீன்கள்
    குழுமிய அனைய ஊர்தி,
தெள் அரி பாண்டி பாணிச்
    செயிரியர் இசைத்தேன் சிந்த,
வள்ளலைப் பயந்த நங்கை,
    வானவர் வணங்கப், போனாள்.
68

உரை
   
 
கூனுங் குறளும் சிந்தரும் செல்லுதல்

884.கூனொடு குறளும், சிந்தும், சிலதியர்
    குழாமும் கொண்ட
பால் நிறப் புரவி அன்னப்
    புள் எனப் பாரில் செல்லத்,
தேனொடு மிஞிறும் வண்டும்
    தும்பியும் தொடர்ந்து செல்லப்,
பூ நிறை கூந்தல் மாதர்,
    புடைபிடி நடையில், போனார்.
69

உரை
   
 
அறுபதினாயிரம் மனைவிமார்களும் செல்லுதல்

885.துப்பினின் மணியின் பொன்னின்
    சுடர் மரகதத்தின் முத்தின்
ஒப்பு அற அமைத்த பைம் பூண்
    ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று இரட்டி கொண்ட ஆயிரம்
    முகிழ்மென் கொங்கைச்
செப்பு அரும் திருவின் நல்லார்,
    தேர் மிசை சூழப் போனார்.
70

உரை
   
 
வசிட்டன் செல்லுதல்

886.செவிவயின் அமிர்த கேள்வி
    தவெிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார்,
    ஐயிரு கோடி சூழக்,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி
    கணவன், வெள்ளைச்
சிவிகையின், அன்னம் ஊரும்
    திசைமுகன் என்னச், சென்றான்.
71

உரை
   
 
பரத சத்துருக்கனர் செல்லுதல்

887.பொரு களிறு இவுளி பொன்தேர்
    பொலம் கழல் குமரர், முந்நீர்
அருவரை சூழ்ந்தது என்ன,
    அருகுபின் முன்னும் செல்லத்,
திருவளர் மார்பர், தயெ்வச்
    சிலையினர், தேரர், வீரர்,
இருவரும் முனி பின் போன
    இருவரும் என்னப் போனார்.
72

உரை
   
 
தசரதன் புறப்படுதல்

888.நித்திய நியமம் முற்றி,
    நேமியான் பாதம் சென்னி
வைத்தபின், மறை வலோர்க்கு
    வரம்பு அறு மணியும் பொன்னும்
பத்தி ஆன் நிறையும் பாரும்
    பரிவுடன் நல்கிப் போனான்,
முத்து அணி வயிரப் பூணான்,
    மங்கல முகுர்த்த நல் நாள்.
73

உரை
   
 
அந்தணர் ஆசிகூற மாதர் பல்லாண்டிசைத்தல்

889.இரு பிறப்பாளர் எண்ணாயிரர்
    மணிக் கலசம் ஏந்தி,
அருகு மறை வருக்கம் ஓதி,
    அறுகுநீர் தெளித்து, வாழ்த்தி,
வரன் முறை வந்தார்; கோடி
    மங்கல மழலைச் செவ்வாய்
பருமணிக் கலாபத்தார், பல்லாண்டு
    இசை பரவப் போனான்.
74

உரை
   
 
மண்டலாதிபர்கள் நெருங்கிச் செல்லுதல்

890.‘கண்டிலன் என்னை ‘என்பார்;
    ‘கண்டனன் என்னை ‘என்பார்;
‘குண்டலம் வீழ்ந்தது ‘என்பார்;
    ‘குறுக அரிது இனிச் சென்று ‘என்பார்;
‘உண்டு கொல் எழுச்சி ‘என்பார்;
    ‘ஒலித்தது சங்கம் ‘என்பார்;
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர்
    மயங்கி, மாதோ!
75

உரை
   
 
தயரதன் தேரில் செல்லுதல்

891.பொன்தொடி மகளிர் ஊரும்
    பொலன்கொள் தார் புரவி வெள்ளம்
சுற்றுறு கமலம் பூத்த
    தொடுகடல் திரையில் செல்லக்,
கொற்றம் வேள் மன்னர் செங்கைப்
    பங்கயக் குழாங்கள் கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன
    மணிநெடும் தேரில் போன்னான்.
76

உரை
   
 
புழுதியின் செயல்

892.ஆர்த்தது விசும்பை முட்டி; மீண்டு
    அகன் திசைகள் எல்லாம்
போர்த்தது; அங்கு ஒருவர் தம்மை ஒருவர்
    கண் புலம் கொளாமை
தீர்த்தது; செறிந்தது ஓடித்;
    திரை நெடும் கடலை எல்லாம்
தூர்த்தது, சகரரோடும் பகைத்து எனத்,
    தூளி வெள்ளம்.
77

உரை
   
 
ஒலியும் ஒளியும் மிஞ்சுதல்

893.சங்கமும் பணையும் கொம்பும்
    தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேரொலி
    மழையை ஓட்டத்,
தொங்கலும் குடையும் தோகைப்
    பிச்சமும் சுடரை ஓட்டத்
திங்கள், வெண் குடை கண்டு ஓடத்,
    தேவரும் மருளச், சென்றான்.
78

உரை
   
 
பலவகை ஓசை எழுதல்

894.மந்திர கீத ஓதை,
    வலம் புரி முழங்கும் ஓதை,
அந்தணர் ஆசி ஓதை,
    ஆர்த்து எழும் முரசின் ஓதை,
கந்து கொல் களிற்றின் ஓதை,
    கடிகையர் கவிதை ஓதை,
இந்திர திருவன் செல்ல
    எழுந்தன திசைகள் எல்லாம்.
79

உரை
   
 
புழுதியால் விண்ணும் மண்ணுலகாயிற்று எனல்

895.நோக்கிய திசைகள் எல்லாம்
    தன்னையே நோக்கிச் செல்ல,
வீக்கிய கழல்கால் வேந்தர்
    விரிந்த கை மலர்கள் கூம்பத்,
தாக்கிய களிறும் தேரும்
    புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி, விண்ணும் மண் உலகு
    ஆக்கப், போனான்.
80

உரை
   
 
உடன் சென்ற சேனையின் மிகுதி

896.வீரரும் களிறும் தேரும் புரவியும்
    மிடைந்த சேனை
பேர்விடம் இல்லை, மற்றோர் உலகு இல்லை,
    பெயர்க்கல் ஆகா,
நீர் உடை ஆடை யாளும்,
    நெளித்தனள் முதுகை என்றால்,
‘பார்பொறை நீக்கினான் ‘என்று
    உரைத்தது எப்பரிசு மன்னோ?
81

உரை
   
 
தசரதன் சந்திர சயிலத்தின் சாரலில் தங்குதல்

897.இன்னணம் ஏகி மன்னன்
    யோசனை இரண்டு சென்றான்,
பொன்வரை போலும் இந்து
    சயிலத்தின் சாரல் புக்கான்;
வல் மதம் களிறும் மாதர்
    கொங்கையும் மாரன் அம்பும்
தனெ்வரைச் சாந்தும் நாறும்
    சேனையும் இறுத்தது அன்றே.
82

உரை