நிலவின் வருணனை (1047-1048)

1047.வெண்ணிற நற நிறை
    வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை
    பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு
    ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலா
    தழைத்தது எங்குமே.
1

உரை
   
 
1048.கலந்தவர்க்கு இனியது ஓர்
    கள்ளுமாய்ப், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு
    விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய்
    புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது நெடு நிலா
    மதனன் வேண்டவே.
2

உரை
   
 
நிலவு மிகுதியின் விளைவு

1049.ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்
கூறு பால் கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையை இயைந்த; என் இனி
வேறு யாம் புகல்வது நிலவின் வீக்கமே?
3

உரை
   
 
நிலவினால் உலகம் வெள்ளணி அணிந்ததை ஒத்தமை

1050.எள் அரும் திசைகேளாடு,
    யாரும், யாவையும்,
கொள்ளை வெண்ணிலவினால்
    கோலம் கோடலால்,
வள் உறை வயிர வாள்
    மகர கேதனன்
வெள் அணி ஒத்தது
    வேலை ஞாலமே.
4

உரை
   
 
மகளிர் எய்திய இடங்கள்

1051.தயங்கு தாரகை புரை
    தரள நீழலும்,
இயங்கு தார் மிடைந்த கார்
    எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு
    அடுத்த கானமும்,
வயங்கு பூம்பந்தரும்,
    மகளிர் எய்தினார்.
5

உரை
   
 
மகளிர் மதுக் குடித்தல்

1052.பூக் கமழ் ஓதியர் போது போக்கிய
சேக்கை இன்பச் செருச் செருக்கும் சிந்தையார்
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார்.
6

உரை
   
 
மகளிர் கள்ளுண்டது

1053.மீன் உடை விசும்பினார் விஞ்சை நாட்டவர்
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்
மான் உடை நோக்கினார் வாயில் மாந்தினார்
தேன் உடை மலரிடைத் தேன் பெய்து என்னவே.
7

உரை
   
 
கள் குடிக்கும் காரிகை ஒருத்தியின் கவின்

1054.உக்க பால் புரை நறா,
    உண்ட வள்ளமும்,
கைக் கொள் வாள் ஒளி படச்
    சிவந்து காட்டத் தன்
மைக்கணும் சிவந்தது; ஓர்
    மடந்தை வாய்வழி
புக்க தேன் அமிர்தமாய்ப்
    பொலிந்த போன்றவே.
8

உரை
   
 
கள் காமத்தை மிகுவித்தல்

1055.தாமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை
காம வெம் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே.
9

உரை
   
 
மடந்தையொருத்தி தன் நிழலைத் தோழி என மயங்குதல்

1056.விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
    அமிழ்து ஒக்கும் இன் சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டே!
    வாள் நுதல் ஒருத்தி, காணாத்
தடன் ஒக்கும் நிழலைப் பொன் செய்
    தண் நறும் தேறல் வள்ளத்து
‘உடன் ஒக்க உவந்து நீயே
    உண்ணுதி தோழி! ‘என்றாள்.
10

உரை
   
 
ஒருத்தி தன் நிழலையே வேறொருத்தி என்று நகுதல்

1057.அச்சம் நுண் மருங்குலாள், ஓர்
    அணங்கு அனாள், அளக பந்தி
நச்சு வேல் கருங்கண் செவ்வாய்
    நளிர் முகம் மதுவுள் தோன்ற,
‘பிச்சி! நீ என்செய்தாய்? இப்
    பெரு நறவு இருக்க, வாளா
எச்சிலை நுகர்தியோ? என்று,
    எயிற்று அரும்பு இலங்க நக்காள்.
11

உரை
   
 
ஒருத்தி வள்ளத்துள் நிலவை மதுவென மயங்கல்

1058.புறம் எலாம் நகைசெய்து ஏசப்,
    பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள்,
    மணியின் வள்ளத்து வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய,
    நிறைந்தது போன்று தோன்ற,
நறவு என அதனைப் வாயின்
    வைத்தனள், நாண் உள் கொண்டாள்.
12

உரை
   
 
ஒருத்தி கள்ளில், கண்நிழலை வண்டென ஓச்சுதல்

1059.‘யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம்
    அளித்தன இவையாம் ‘என்னக்
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர்
    கிஞ்சுகம் கிடந்த வாயாள்,
தாள் கருங்குவளை தோய்ந்த
    தண் நறைச் சாடியுள் தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்,
    ‘வண்டு ‘என ஓச்சுகின்றாள்.
13

உரை
   
 
1060.களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர்
    கனங்குழை, கள்ளின் உள்ளால்
வெளிப்படுகின்ற காட்சி
    வெண் மதி நிழலை நோக்கி,
‘அளித்தனென் அபயம்; வானத்து
    அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை, அஞ்சல்! ‘என்று ஆங்கு
    இனியன உணர்த்துகின்றாள்.
14

உரை
   
 
ஒருத்தி நிலாவைக் கள்ளென்று கிண்ணத்தில் ஏற்றல்

1061.அழிகின்ற அறிவினாலோ,
    பேதைமையாலோ, ஆற்றிற்
சுழி ஒன்றி நின்றது அன்ன
    உந்தியாள், தூய செந்தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த
    பந்தரைப் புரைத்துக், கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை,
    நறவு என வள்ளத்து ஏற்றாள்.
15

உரை
   
 
காரிகையொருத்தி களியால் தடுமாறல்

1062.மின் என நுடங்குகின்ற
    மருங்குலாள் ஒருத்தி, வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல்
    இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி
    மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்,
பொன் அரி மாலை கொண்டு
    புரி குழல் புனையல் உற்றாள்.
16

உரை
   
 
ஒருத்தி மதுவின்கண் தோன்றும் தன் முகத்தை
மதியென மயங்கல்

1063.கள் மணி வள்ளத்துள்ளே
    களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை
    வீழ்ந்தது என்று, ஒருத்தி உன்னி,
‘உள் மகிழ் துணைவனோடும்
    ஊடும் நாள் வெம்மை நீங்கித்
தண் மதி ஆதி ஆகில்
    தருவென் இந் நறவை ‘என்றாள்.
17

உரை
   
 
ஒரு மடந்தை, மயக்கத்தால் வெறும் கிண்ணத்தை
வாயில் வைத்துக் கொள்ளுதல்

1064.எள் ஒத்த கோல மூக்கின்
    ஏந்திழை ஒருத்தி, முன்கை
தள்ளத் தண் நறவை எல்லாம்
    தவிசு இடை உகுத்தும் தேறாள்,
உள்ளத்தின் மயக்கம் தன்னால்
    உள்புறத்து உண்டு என்று எண்ணி,
வள்ளத்தை மறித்து வாங்கி,
    மணி நிற இதழின் வைத்தாள்.
18

உரை
   
 
ஒருத்தி மலரின் நாளத்தால் மதுப் பருகுதல்

1065.வான் தனை பிரிதல் ஆற்றா
    வண்டு இனம், வச்சை மாக்கள்
ஏன்று அவர் நிதியம் வேட்ட
    இரவலர் என்ன, ஆர்ப்ப,
தேன் தரு கமலச் செவ்வாய்
    திறந்தனள் நுகர நாணி,
ஊன்றிய கழுநீர் நாளத்
    தாளினால் ஒருத்தி உண்டாள்.
19

உரை
   
 
ஒருத்தி கள்ளைக் கணவன் உண்ணான் எனக்
கருதித் தானும் உண்ணாமை

1066.புள் உறை கமல வாவிப்
    பொரு கயல் வெருவி ஓட,
வள் உறை கழித்த வாள்போல்
    வரி உற வயங்கு கண்ணாள்,
கள் உறை மலர் மென் கூந்தல்
    களி இள மஞ்ஞை அன்னாள்,
உள் உறை அன்பன் உண்ணான்
    என நறவு உண்ணல் எண்ணாள்.
20

உரை
   
 
மதுப் பருகிய மாதொருத்தியின் நிலை

1067.கூற்று உறழ் நயனங்கள் சிவப்பக் கூன் நுதல்
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர்
மாற்று அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு
சீற்றம் ஆம் அபிநயம் தரெிக்கின்றாரினே.
21

உரை
   
 
மாதொருத்தி மதுவுண்டு வியர்த்துநிற்றல்

1068.துடித்த வான் துவர் இதழ்த்
    தொண்டைத் தூ நிலாக்
கடித்த வால் எயிறுகள்
    அதுக்கிக், கண்களாம்
வடித்த வெம் குருதி வேல்
    விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர் புறத்து உகு
    நறவம் போன்றதே.
22

உரை
   
 
ஒருத்திக்கு மதுவுண்டதால், புருவம் வளைதலும்
நெற்றியில் வியர்வை உண்டாதலும்

1069.கனித் திரள் இதழ் பொழி
    செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று
    ஆம் ஒர் நேர் இழை,
தனித் தட மரை மலர்
    முகத்துச் சாபமும்
குனித்தது, பனித்தது
    குழவித் திங்களே.
23

உரை
   
 
கணவரும்-கள்ளும் ஒத்த எனல்

1070.இதழ்த் துவர் விட,
    எயிறு தேன் உக,
முலை மிசைக் கச்சொடு
    கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர,
    அசதி ஆட்டலால்,
கலவி செய் கொழுநரும்
    கள்ளும் ஒத்தவே.
24

உரை
   
 
காரிகையொருத்தி தன் காதலனிடம் தோழியைத் தூதனுப்புதல்

1071.கனை கழல் காமனால்
    கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி, என்று
    அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள்,
    ‘தோழி! நீயும், என்
மனம் எனத் தாழ்த்தியோ?
    வருதியோ? ‘என்றாள்.
25

உரை
   
 
தோழியரைத் தூதனுப்பியவள் தானே காதலனிடம்
தனித்துச் சேர்தல்

1072.மான் அமர் நோக்கி, ஓர்
    மதுகை வேந்தன்பால்,
ஆன தன் பாங்கியர்
    ஆயினார் எலாம்
போனவர் போனவர்;
    தொடரப் போக்கினாள்;
தானும், அங்கு அவர் பினே,
    தமியள் ஏகினாள்.
26

உரை
   
 
ஒருத்தி கணவன்பேர் சொல்லும் கிளியைப் புல்லுதல்

1073.விரை செய் பூஞ் சேக்கையின்
    அடுத்த மீ மிசைக்
கரை செயா ஆசை அம்
    கடலுளாள், ஒரு
பிரைசம் என் குதலையாள்,
    கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை
    உவந்து புல்லினாள்.
27

உரை
   
 
காதலாள் ஒருத்தி கிளியைக் கடிதல்

1074.மன்றல் நாறு ஒரு சிறை
    இருந்து, ஒர் வாள் நுதல்,
தன் துணைக் கிள்ளையைத்
    தழீஇ, ‘என் ஆவியை
இன்று போய்க் கொணர்கிலை;
    என் செய்வாய் எனக்கு?
அன்றிலோடு ஒத்தி ‘என்று,
    அழுது, சீறினாள்.
28

உரை
   
 
கணவன் இளையாள் பெயரைச் சொல்லி மூத்தாளை
அழைக்க அவள் வருந்துதல்

1075.வளை பயில் முன் கை
    ஒர் மயில் அனாள், தனக்கு
இளையவள் பெயரினைக்
    கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட
    முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது
    கயல் கண் ஆலியே.
29

உரை
   
 
ஒருவன் மனைவி ஊடலைத் தீர்க்க முயலுதல்

1076.செற்றம் முன் புரிந்தது ஓர்
    செம்மல், வெம்மையாற்
பற்றலும் அல்குலில்
    பரந்த மேகலை
அற்று உகும் முத்தின்முன்
    அவனி சேர்ந்தன,
பொற்றொடி ஒருத்தி கண்
    பொழிந்த முத்தமே.
30

உரை
   
 
ஒருத்தி யாது செய்வேன் என அயர்தல்

1077.தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி ‘தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகும் நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ? ‘எனப் பலவும் பன்னினாள்.
31

உரை
   
 
ஒருத்தி ஊடலைப் பாடிக் குறிப்பித்தது

1078.மாடகம் பற்றினாள்; மகரம் வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் ஒருத்தி தன் பாங்கு உளார்கேளாடு
ஊடினது உரைசெயாள் உள்ளத்து உள்ளதே.
32

உரை
   
 
ஒருத்தி கூடற்சுழி இழைத்தல்

1079.குழைத்த பூங்கொம்பு அனாள்
    ஒருத்தி கூடலை
இழைத்தனள், அது அவள்
    இட்ட போது எலாம்
பிழைத்தலும், அனங்கவேள்
    பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள்
    உயிர் உண்டு என்னவே.
33

உரை
   
 
தூதுபோக்கிய ஒருத்தி கணவன் வரக் கதவடைத்தது

1080.பந்து அணி விரலினாள்
    ஒருத்தி பையுளாள்
சுந்தரன் ஒருவன்பால்
    தூது போக்கினாள்
வந்தனன் எனக் கடை
    அடைத்து மாற்றினாள்
சிந்தனை தரெிந்திலம்
    சிவந்த நாட்டமே.
34

உரை
   
 
ஒருத்தி, கூடல் விருப்பைக் குறிப்பான் உணர்த்தல்

1081.உய்த்த பூம் பள்ளியின்
    ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது
    அன்பன் தேர்கிலான்
பொய்த்தது ஓர் மூரியால்
    நிமிர்ந்து போக்குவாள்
எத்தனை இறந்தன
    கடிகை ஈண்டு என்றாள்.
35

உரை
   
 
ஒருவன் ஊடற்காலத்து உதையால் மயிர் சிலிர்த்தல்

1082.விதைத்த மென் காதலின்
    வித்து மெய்ந் நிறை
இதைப் புனல் நனைத்திட
    முளைத்தவே எனப்
பதைத்தனள் ஒருத்தன்மேல்
    ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும் பொடித்தன
    உரோம ராசியே.
36

உரை
   
 
காதலி மெலிந்தமை நோக்கிக் காதலன் பூரித்தல்

1083.பொலிந்த வாள் முகத்தினான்
    பொங்கித் தன்னையும்
மலிந்த பேர் உவகையான்,
    மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன் ஓர்
    நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கித் தன்
    புயங்கள் வீங்கினான்.
37

உரை
   
 
ஒருவன் தீந்த தளிர் கண்டு திகைப்படைதல்

1084.ஏய்ந்த பேர் எழிலினான்
    ஒருவன், எய்தினான்;
வேய்ந்த போல் எங்கணும்
    அனங்கன் வெங்கணை
பாய்ந்த பூம் பள்ளியில்
    படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினான்
    திகைக்கும் சிந்தையான்.
38

உரை
   
 
கொங்கை பொற்கலசம் போன்றதனெல்

1085.ஊட்டிய சாந்து வெந்து
    உலரும் வெம்மையான்,
நாட்டினை அளித்தி நீ,
    என்று நல்லவர்
ஆட்டும் நீர்க் கலசமே
    என்னல் ஆன ஓர்
வாள் தொழில் மைந்தற்கு ஓர்
    மங்கை கொங்கையே.
39

உரை
   
 
கணவன் இருப்பிடம் தேடிச் செல்லும் காரிகையின் இயல்பு

1086.பயிர் உறு கிண்கிணி பரந்த மேகலை
வயிர வான் பூண் அவை வாங்கி நீக்கினாள்
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள்.
40

உரை
   
 
மாலையாற் கட்டுண்ட தோளின் மாண்பு

1087.ஏலும் இவ் வன்மையை
    என் என்று உன்னுதும்;
ஆலை மென் கரும்பு அனான்
    ஒருவற்கு ஆங்கு ஒரு
சோலை மென் குயில் அனாள்
    சுற்றி வீக்கிய,
மாலையை நிமிர்ந்தில
    வயிரத் தோள்களே!
41

உரை
   
 
ஒருத்தி தூதனுப்ப பாங்கியைக் குறிப்பால் நோக்குதல்

1088.சோர் குழல் ஒருத்தி தன்
    வருத்தம் சொல்லுவான்
மாரனை நோக்கி ஓர்
    மாதை நோக்கினாள்
காரிகை இவள் அவள்
    கருத்தை நோக்கி ஓர்
வேரி அம் தரெியலான்
    வீடு நோக்கினாள்.
42

உரை
   
 
காதலி காதலன்வீடு தேடிச் செல்லக் காரணம் யாதனெல்

1089.சினம் கெழு வாள் கை ஓர்
    செம்மல் பால் ஒரு
கனம் குழை மயில் அனாள்
    கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ!
    மாலை தான்கொலோ!
அனங்கனே! யார் கொலலோ!
    அழைத்த தூதரே.
43

உரை
   
 
காதலி கண்ணீர் உகுக்கக் காதலன் வினாதல்

1090.தொகுதரு காதற்குத் தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழைக்கண் ஆலி வந்து
உகுதலும் ‘உற்றது என் ‘என்று கொற்றவன்
நகுதலும் நக்கனள்; நாணும் நீங்கினாள்.
44

உரை
   
 
புல்லிய கை புடைபெயரப் புரவலன் வருந்துதல்

1091.பொய்த்தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய
கைத்தலம் நீக்கினாள்; கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச்செயல் ஓர் தோன்றற்குச்
சத்திரம் மார்பு இடை தைத்தது ஒத்ததே.
45

உரை
   
 
நங்கை ஒருத்தி நாணத்தால் தூதனுப்ப இயலாது விம்முதல்

1092.இயல் ஒருத்தி,
    தான் விரும்பும் சேடியைப்
புல்லிய கையினள்,
    ‘போதி தூது ‘எனச்
சொல்லுவான் உறும்; உற
    நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது
    எலாம் இருந்து விம்மினாள்.
46

உரை
   
 
ஒருத்தி தலைவன் செயலைச் சாற்ற நாணுதல்

1093.ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர்
மாறிலாக் காதலன் செயலை மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உறச் சில மொழி விளம்பினாள்.
47

உரை
   
 
காதலர் இருவர் புல்லுதல்

1094.உரு தரெி தன்மைய; உயிரும் ஒன்று தாம்;
அருத்தியும் அத்துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் ‘உடம்பும் ஒன்று என
பொருத்துவர் ஆம் ‘எனப் புல்லினார் அரோ.
48

உரை
   
 
காதலி முகம் கவிழ்து நின்ற நிலை கண்டு காதலன் அஞ்சுதல்

1095.வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி,
    வேந்தன் வந்து
எதிர்தலும், தன் மனம்
    எழுந்து முன் செல,
மதி முகம் கதும் என
    வணங்கினாள்; அது,
புதுமை, ஆதலின், அவற்கு
    அச்சம் பூத்ததே.
49

உரை
   
 
தனியே வந்த தோழி தாயை ஒத்தாள் எனல்

1096.துனி வரும் நலத்தொடு சோர்கின்றாள்; ஒரு
குனி வரும் நுதலிக்குக் கொழுநன் இன்றியே
தனி வரும் தோழியும் தாயை ஒத்தனள்
இனி வரு தனெ்றலும் இரவும் என்னவே.
50

உரை
   
 
உணர்வழிந்த ஒருத்தியின் நிலை

1097.ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில்
தாக்கிய தயெ்வம் உண்டு என்னும் தன்மையள்
நோக்கினாள்; நின்றனள் நுவன்றது ஓர்கிலள்
போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள்.
51

உரை
   
 
கணவன் வரவு நோக்கும் காரிகையின் செயல்

1098.மறப்பிலள், கொழுநனை
    வரவு நோக்குவாள்;
பிறப்பினொடு இறப்பு எனப்
    பெயரும் சிந்தையாள்;
துறப்பு அரும் முகில் இடை
    தோன்றும் மின் எனப்
புறப்படும்; புகும்; ஒரு
    பூத்த கொம்பு அனாள்.
52

உரை
   
 
அனங்கன் நோய் ஆற்றாத அணங்கு பாங்கியை
வாயில் வேண்டல்

1099.எழுதரும் கொங்கை மேல்
    அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில்
    வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்;
    அற்றம் சொல்லினாள்;
தொழுதனள்; ஒருத்தியைத்
    தூது வேண்டுவாள்.
53

உரை
   
 
ஒருத்தி பிரிவாற்றாமையைத் தோழிக்குக் குறிப்பாலுணர்த்தல்

1100.ஆர்த்தியும் உற்றதும்
    அறிஞர்க்கு அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல்
    மாசு அன்றோ! மனம்
வேர்த்தனள்; வெதும்பினள்;
    மெலிந்து சாய்ந்தனள்;
பார்த்தனள்; ஒருத்தி, தன்
    பாங்கு அனாளையே.
54

உரை
   
 
மன்மதனும் மது அருந்துதல்

1101.தனங்களின் இளையவர்
    தம்மின், மும்மடி
கனம் கனம் இடையிடை
    களிக்கும் கள்வன் ஆய்,
மனங்களின் நுழைந்து அவர்
    மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான்
    ஆதல் வேண்டுமால்.
55

உரை
   
 
காதலர் கலவிக்காகக் கலன் கழித்தல்

1102.நறை கமழ் அலங்கல் மாலை
    நளிர் நறும் குஞ்சி மைந்தர்
துறை அறி கலவிச் செவ்வித்
    தோகையர் தூசு வீசி
நிறை அகல் அல்குல் புல்கும்
    கலன் கழித்து அகல நீத்தார்
அறை பறை அனைய நீரார்
    அரு மறைக்கு ஆவரோ தான்.
56

உரை
   
 
நாணுத் துறவுரைத்தல்

1103.பொன் அரும் கலனும், தூசும்,
    புறத்து உள துறத்தல் வம்பே!
நல் நுதல் ஒருத்தி, தன்பால்
    அகத்து உள நாணும் நீத்தாள்;
உன் அரும் துறவு பூண்ட
    உணர்வு உடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை
    காமத்தே தங்கிற்று அன்றே.
57

உரை
   
 
வெல்வார் யார்?

1104.பொரு அரும் மதனன் போல்வான்
    ஒருவனும், பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள்
    ஒருத்தியும், சேக்கைப் போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார்;
    ஒத்தனர்; உயிரும் ஒன்றே;
இருவரது உணர்வும் ஒன்றே;
    என்றபோது யாவர் வெல்வார்.
58

உரை
   
 
ஒருத்தி முன்னையிற் புலத்தல்

1105.கொள்ளைப் போர் வாள் கணாள் அங்கு
    ஒருத்தி, ஓர் குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம் தன்னை
    மலர்க் கையால் புதைப்ப நோக்கி
உள்ளத்து ஆர் உயிர் அன்னாள்மேல்
    உதை படும் என்று நீ நின்
கள்ளத்தால் புதைத்தி என்னா
    முன்னையில் கனன்று மிக்காள்.
59

உரை
   
 
ஒருத்தி தன்னை அரம்பை மாதோ என்று ஐயுறச் செய்தமை

1106.பால் உள பவளச் செவ்வாய்ப்
    பணை முலை நிகர்த்த மென் தோள்
வேல் உள நோக்கினாள் ஓர்
    மெல் இயல் வேலை அன்ன
மால் உள சிந்தை ஆங்கு ஓர்
    மழை உள தடக்கையாற்
மேல் உள அரம்பைமாதர்
    என்பது ஓர் விருப்பை ஈந்தாள்.
60

உரை
   
 
காதல் வென்றது எனல்

1107.புனத்து உறை மயில் அனாள்
    கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள்
    ஒருத்தி நீடிய
சினத்தொடு காதல்கள்
    செய்த போர் இடை
மனத்து உறை காதலே
    வாகை கொண்டதே.
61

உரை
   
 
காரிகை ஒருத்தி கணவன் முதுகை நோக்கல்

1108.கொலை உரு அமைந்து எனக்
    கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள்,
    கணவன் புல்குவாள்
சிலை உரு அழிதரச்
    செறிந்த மார்பில் தன்
முலை உருவின என
    முதுகை நோக்கினாள்.
62

உரை
   
 
கலவியின் விளைவு

1109.குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்கினம் முரன்றன; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசல் இட்டன;
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே.
63

உரை
   
 
காரிகை ஒருத்தி கனவென்ற பெயரால் காதலன் புல்லுதல்

1110.துனி உறு புலவியைக்
    காதல் சூழ் சுடர்
பனி எனத் துடைத்தலும்
    பதைக்கும் சிந்தையாள்
புனை இழை ஒரு மயில்
    பொய் உறங்குவாள்
கனவு எனும் சலத்தினால்
    கணவன் புல்லினாள்.
64

உரை
   
 
காதலர் புல்லிக் கிடந்தமை

1111.வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும்
கிட்டிய போது உடல் கிடைக்கப் புல்லினார்;
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால்.
65

உரை
   
 
கங்குல் போது கலவியால் கழிந்தமை

1112.அரும் களி மால் களிறு அனைய வீரர்க்கும்
கரும் குழல் மகளிர்க்கும் கலவிப் பூசலால்
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது அம் மாலைக் கங்குலே.
66

உரை
   
 
மதியம் மறைதலும் இரவி எழுதலும்

1113.கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என இந்து நந்தினான்;
படர் திரைக் கருங்கடல் பரமன் மார்பு இடைச்
சுடர் மணிக்கு அரசு என இரவி தோன்றினான்.
67

உரை