வசிட்டன் சீதையை அழைத்துவரச் சொல்லுதல்

1202.தேவியர் மருங்கு சூழ,
    இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்று என்ன
    உவந்து அரசு இருந்த காலைத்
தா இல் வெண் கவிகைச் செங்கோல்
    சனகனை இனிது நோக்கி
‘மா இயல் நோக்கினாளைக் கொணர்க ‘
    என வசிட்டன் சொன்னான்.
1

உரை
   
 
சனகன் கட்டளையை ஏவல் மகளிர் தாதியரிடம் கூறல்

1203.உரைசெயத் தொழுத கையன், உவந்த
    உள்ளத்தன், ‘பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு ‘என்று,
    ஆய் இழை அவரை ஏவக்
கரை செயற்கு அரிய காதல்
    கடாவிடக் கடிது சென்றார்,
பிரைசம் ஒத்து இனிய சொல்லார்,
    பேதை தாதியரில் சொன்னார்.
2

உரை
   
 
சீதையைத் தாதியர் அணிசெய்தல்

1204.அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு
    அணி என அமைக்குமா போல்,
உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை
    உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்து என்ன,
    அழகினுக்கு அழகு செய்தார்,
இமிழ் திரைப் பரவை ஞாலம்
    ஏழைமை உடைத்து, மாதோ!
3

உரை
   
 
குழலில் மாலை சூட்டுதல்

1205.கண்ணன்தன் நிறம், தன் உள்ளக்
    கருத்தினை நிறைத்து, மீது இட்டு,
உள் நின்றும் கொடிகள் ஓடி
    உலகு எங்கும் பரந்தது அன்ன,
வண்ணம் செய் கூந்தல் பார
    வலயத்து, மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின் மென் பூஞ்
    சிகழிகைக் கோதை வேய்ந்தார்.
4

உரை
   
 
சுட்டி முதலிய அணிகள் அணிதல்

1206.விதியது வகையால், வான
    மீன் இனம் பிறையை வந்து
கது உறுகின்றது என்னக்
    கொழுந்து ஒளி கஞலத் தூக்கி,
மதியினைத் தந்த மேகம்,
    மருங்கு நா வளைப்பது என்னப்
பொதி இருள் அளக பந்தி
    பூட்டிய பூட்டும் இட்டார்.
5

உரை
   
 
குழை அணிதல்

1207.‘வெள்ளத்தின் சடிலத்தான் தன்
    வெம் சிலை இறுத்த வீரன்,
தள்ளத் தன் ஆவி சோரத்
    தனிப் பெரும் பெண்மை தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை
    அல்லன் கொல்? ஆம் கொல் என்பாள்? ‘$1.20.6.3-1207
உள்ளத்தின் ஊசல் ஆடும்
    குழை நிழல் உமிழ இட்டார்.
6

உரை
   
 
கழுத்தணி அணிதல்

1208.கோன் அணி சங்கம் வந்து
    குடி இருந்த அனைய கண்டத்து,
ஈனம் இல் கலன்கள் தம்மில்
    இயைவன அணிதல் செய்தார்.
மான் அணி நோக்கினார்தம்
    மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது,
    தனக்கு அணி யாது மாதோ?
7

உரை
   
 
முத்துமாலை அணிதல்

1209.கோண் இலா வான மீன்கள்
    இயைவன கோத்தது என்கோ?
’வாள் நிலா வயங்கு செவ்வி
    வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற
    நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?
பூண் நிலாம் முலை மேல் ஆர
    முத்தை, யான் புகல்வது என்னோ?
8

உரை
   
 
ஆரத்தின் வருணனை

1210.மொய் கொள் சறீடியைச் சேர்ந்த
    முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி,
    தயங்கு ஒளி தழுவிக்கொள்ள,
வெய்ய பூண் முலையில் சேர்ந்த
    வெண் முத்தம் சிவந்த என்றால்,
செய்யரைச் சேர்ந்து உளாரும்,
    செய்யராய்த் திகழ்வர் அன்றே?
9

உரை
   
 
தோளணி அணிதல்

1211.கொமை உற வீங்குகின்ற
    குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற
    நுசுப்பினாள் பூண் பெய் தோளுக்கு,
இமை உற இமைக்கும் செங்கேழ்
    இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டாம்
    ஆகின், ஒப்பு ஆகும் அன்றுறே.
10

உரை
   
 
கையில் கடகமணிதல்

1212.தளை அவிழ் கோதை ஓதிச்
    சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள், இராமன் செங்கை
    முறைமையில் தீண்ட நோற்ற,
அளியன, கங்குல் போதும் குவியல
    ஆகும் என்று ஆங்கு
இளம் வெயில் சுற்றி அன்ன,
    எரி மணிக் கடகம் இட்டார்.
11

உரை
   
 
தொய்யில் எழுதல்

1213.சில் இயல் ஓதி கொங்கைத்
    திரள் மணிக் கனகச் செப்பில்,
வல்லியும், அனங்கன் வில்லும்
    மான்மதச் சாந்தும், தீட்டிப்,
பல் இயல் நெறியில் பார்க்கும்
    பரம்பொருள் என்ன, யார்க்கும்
இல்லை உண்டு என்ன நின்ற,
    இடையினுக்கு இடுக்கண் செய்தார்.
12

உரை
   
 
மேகலையும் தாரகைச் சும்மையும் அணிதல்

1214.நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி,
    நீவாத அல்குல்
புறம் செய் மேகலையும், தாழத்
    தாரகைச் சும்மை பூட்டித்,
திறம் செய் காசு ஈன்ற சோதி,
    பேதை சேய் ஒளியில் தீர்ந்த
கறங்குபு திரியத், தாமும்
    கண் வழுக்கு உற்று நின்றார்.
13

உரை
   
 
சிலம்பு அணிதல்

1215.ஐய ஆம் அனிச்சப் போதின்
    அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள் தன்
    பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்,
செய்ய பூம் கமலம் மன்னச்
    சேர்த்திய சிலம்பு, சால
நொய்யவே நொய்ய என்றே
    பல பட நுவல்வது? அம்மா!
14

உரை
   
 
விழிகட்கு மையிடுதல்

1216.நஞ்சு இடை அமிழ்தம் கூட்டி
    நாட்டங்கள் ஆன என்னச்,
செஞ்செவே நீண்டு மீண்டு
    சேய் அரி சிதறித், தீய
வஞ்சமும் களவும் இன்றி
    மழை என மதர்த்த கண்கள்,
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ?
    அறிதல் தேற்றாம்.
15

உரை
   
 
திலகம் தீட்டுதல்

1217.மொய் வளர் குவளை பூத்த
    முளரியின் முளைத்த முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண்
    மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப,
வையக மடந்தைமார்க்கும்,
    நாகர் கோதையர்க்கும், வானத்
தயெ்வ மங்கையர்க்கும் மேலாம்
    திலகத்தை திலகம் செய்தார்.
16

உரை
   
 
பல மலர்களைச் சூட்டுதல்

1218.சின்ன பூச், செருகும் மென் பூச்,
    சேகரப் போது, கோது இல்
கன்னப் பூக், கஞல, மீது
    கற்பகக் கொழுந்து மான
மின்னப், பூச் சுரும்பும் வண்டும்
    மிஞிறும் தும்பிகளும் பம்பும்
புன்னைப் பூந் தாது மானும்
    பொன் பொடி, அப்பிவிட்டார்.
17

உரை
   
 
பிராட்டிக்குக் காப்பிடுதல்

1219.நெய் வளர் விளக்கம் ஆட்டி,
    நீரொடு பூவும் தூவித்,
தயெ்வமும் பராவி, வேத
    பாரகர்க்கு ஈந்து செம்பொன்,
ஐயவி நுதலில் சேர்த்தி,
    ஆய் நிற அயினி சுற்றிக்,
கை வளர் மயில் அனாளை
    வலம் செய்து, காப்பும் இட்டார்.
18

உரை
   
 
சீதையின் அழகைக் கண்டு மகளிரும் காமுறுதல்
(1220-1221)

1220.கஞ்சத்துக் களிக்கும் இன் தேன்
    கவர்ந்து உணும் வண்டு போல,
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம்
    அருளினாள் அழகை மாந்தித்,
தம் சொற்கள் குழறித், தம் தம்
    தகை தடுமாறி நின்றார்;
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது
    ஒன்றே அன்றே?
19

உரை
   
 
1221.இழை குலாம் முலையினாளை
    இடை உவா மதியின் நோக்கி,
மழை குலாம் ஓதி நல்லார்
    களி மயக்குற்று நின்றார்,
உழை குலாம் நயனத்தார் மாட்டு,
    ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த,
அழகு எலாம் ஒருங்கே கண்டால்
    யாவரே ஆற்ற வல்லார்?
20

உரை
   
 
சீதையின் தோற்றம்

1222.சங்கு அம் கை உடைமையாலும்,
    தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு
    உள்ளத்தின் எழுதிற்று என்ன,
அங்கு அங்கே தோன்றலாலும்,
    அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்;
    நாம் இனிப் புகல்வது என்னோ?
21

உரை
   
 
தோழிமார் சீதையைச் சூழ்தல்

1223.பரந்த மேகலையும், கோத்த
    பாதம் சாலகமும், நாகச்
சிரம் செய் நூபுரமும், வண்டும்,
    சிலம்பொடு சிலம்பி ஆர்ப்பப்,
புரந்தரன் கோல் கீழ் ஆனோர்,
    அரம்பையர் புடைசூழ்ந்து என்ன,
வரம்பு அறு சும்மைத் தீம் சொல்
    மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார்.
22

உரை
   
 
சீதை நடந்து செல்லுதல்

1224.சிந்தொடு குறளும் கூனும்
    சிலதியர் குழாமும் தறெ்றி,
வந்து அடி வணங்கிச் சுற்ற,
    மணி அணி விதான நீழல்,
இந்துவின் கொழுந்து விண்மீன்
    இனத்தொடும் வருவது என்ன,
நந்தல் இல் விளக்கம் அன்ன
    நங்கையும் நடக்கல் உற்றாள்.
23

உரை
   
 
சீதை நடையின் வருணனை ((1225-1228))

1225.வல்லியை உயிர்த்த நில மங்கை,
    இவள் பாதம்
மெல்லிய உறைக்கும் என அஞ்சி,
    வெளி எங்கும்
பல்லவம் மலர்த் தொகை
    பரப்பினள் எனத், தன்
நல் அணி மணிச் சுடர்
    தவழ்ந்திட நடந்தாள்.
24

உரை
   
 
1226.தொழும் தகைய மெல் நடை
    தொலைந்து களி அன்னம்,
எழுந்து இடை விழுந்து அயர்வது
    என்ன, அயல் எங்கும்
கொழுந்து உடைய சாமரை
    குலாவ, ஒர் கலாபம்
வழங்க நிழல், மின்ன வரும்
    மஞ்ஞை என வந்தாள்.
25

உரை
   
 
1227.மண் முதல் அனைத்து உலகின்
    மங்கையருள் எல்லாம்,
கண்மணி எனத் தகைய
    கன்னி எழில் காண,
அண்ணல் மரபில் சுடர்
    அருத்தியொடு, தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஒர்
    விதான நிழல் வந்தாள்.
26

உரை
   
 
1228.கற்றை விரி பொன் கடை
    மயிர்த் துறு கலாபம்
சுற்றும் மணி புக்க இழை,
    மிக்கு இடை துவன்றி,
வில் தவழ, வாள் நிமிர,
    மெய் அணிகள் மின்னச்,
சிற்றிடை நுடங்க, ஒளிர்
    சீறடி பெயர்த்தாள்.
27

உரை
   
 
சீதை மண்டபத்தை அடைதல்

1229.பொன்னின் ஒளி, பூவின் வெறி,
    சாந்து பொதி சீதம்,
மின்னின் நிழல் அன்னவள்
    தன் மேனி ஒளி மான,
அன்னமும் அரம்பையரும்
    ஆர் அமிழ்தும் நாண,
மன் அவை இருந்த மணி
    மண்டபம் அடைந்தாள்.
28

உரை
   
 
சீதையின் எழிலை யாவரும் காணுதல்

1230.சமைத்தவரை இன்மை மறை
    தானும் எனலாம் அச்
சுமைத் திரள் முலைத் தரெிவை
    தூய் வடிவு கண்டார்.
அமைத் திரள் கொள் தோளியரும்,
    ஆடவரும், எல்லாம்
இமைத்திலர் உயிர்த்திலர்கள்
    சித்திரம் எனத் தாம்.
29

உரை
   
 
சீதையைக் கண்ட இராமனது மகிழ்ச்சி

1231.அன்னவளை, அல்லள் என,
    ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட
    கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு,
    உழைத்து ஆண்டு,
இன் அமிழ்து எழக் களிகொள்
    இந்திரனை ஒத்தான்.
30

உரை
   
 
சீதையைக் கண்ட இராமன் வியப்பு

1232.நறத் துறை முதிர்ச்சி உறு
    நல் அமிழ்து பில்குற்று,
அறத்தின் விளைவு ஒத்து, முகடு உந்தி,
    அருகு உய்க்கும்,
நிறத் துவர் இதழ்க் குயில்,
    நினைப்பின் இடை அல்லால்,
புறத்தும் உளதோ? என
    மனத்தொடு புகன்றான்.
31

உரை
   
 
வசிட்டன் மகிழ்ச்சி

1233.‘எங்கள் செய் தவத்தினில்
    இராமன் என வந்தான்,
சங்கினொடு சக்கரம் உடைத்
    தனி முதல் பேர்,
அங்கண் அரசு ஆதலின்,
    அவ் அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம் ‘என
    வசிட்டன் மகிழ்வு உற்றான்.
32

உரை
   
 
தயரதன் மகிழ்ச்சி

1234.துன்று புரி கோதை எழில்
    கண்டு, உலகு சூழ் வந்து
ஒன்று புரி கோலொடு தனித்
    திகிரி உய்ப்பான்,
‘என்றும் உலகு எழும் அரசு,
    எய்தி உளன் ஏனும்,
இன்று திரு எய்தியது எனக்கு ‘
    என நினைத்தான்.
33

உரை
   
 
இராமன் முதலிய சிலர் தவிர ஏனையோர்
சீதையை வணங்குதல்

1235.நைவளம் நவிற்றும் மொழி
    நண்ண வரலோடும்,
வையம் நுகர் கொற்றவனும்
    மாதவரும் அல்லார்,
கைகள் தலை புக்கன,
    கருத்து உளதும் எல்லாம்
தயெ்வம் எனல் உற்ற, உடல்
    சிந்தை வசம் அன்றோ?
34

உரை
   
 
சீதை தன் தந்தை அருகில் அமர்தல்

1236.மாதவனை முன் கொள வணங்கி,
    நெடு மன்னன்
பாத மலரைத் தொழுது,
    கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட
    தவிசில் தனி இருத்தாள்,
போதினை வெறுத்து அரசர்
    பொன் மனை புகுந்தாள்.
35

உரை
   
 
சீதையைக் கண்ணுற்ற கோசிகனது வியப்பு

1237.அச்சு என நினைத்த முதல்
    அந்தணன் நினைந்தான்,
‘பச்சை மலை ஒத்த
    படிவத்து அடல் இராமன்,
நச்சு உடை வடிக் கண் மலர்
    நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க,
    மலை ஏழையும் இறானோ!
36

உரை
   
 
சீதை இராமனைக் காணுதல்

1238.எய்ய வில் வளைத்ததும்
    இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து
    முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே
    அல புறத்தும்
கைவளை திருத்துபு
    கடைக்கணின் உணர்ந்தாள்.
37

உரை
   
 
சீதையின் மகிழ்ச்சி ((1239-1240))

1239.கரும் கடை நெடும் கண் ஒளி ஆறு,
    நிறை கண்ணப்
பெரும் கடலின் மண்ட, உயிர் பெற்று
    இனிது உயிர்க்கும்
அரும் கலன் அணங்கு அரசி, ஆர்
    அமிழ்து அனைத்தும்
ஒருங்கு உடன் அருந்தினரை
    ஒத்து உடல் தடித்தாள்.
38

உரை
   
 
1240.கணம் குழை கருத்தின் உறை
    கள்வன் எனல் ஆனான்
வணங்கு வில் இறுத்தவன் எனத்
    துயர் மறந்தாள்.
அணங்கு உறும் அவிஞ்சை கெட,
    விஞ்சையின் அகம்பாடு
உணர்ந்து, அறிவு முற்று பயன்
    உற்றவரை ஒத்தாள்.
39

உரை
   
 
மணநாளைத் தயரதன் வினவுதல்

1241.கொல் உயர் களிற்று அரசர்
    கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி,
    கௌசிகனை, ‘மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை
    மடந்தை மண நாளாம்
எல்லையில் நலத்த பகல் என்று?
    உரை செய்க ‘என்றான்.
40

உரை
   
 
திருமணம் நாளை எனல்

1242.‘வாளை உகளக், கயல்கள்
    வாவி படி, மேதி
மூளை முதுகைக் கதுவ
    மூரிய வரால் மீன்,
பாளை, விரியக் குதிகொள்,
    பண்ணை வள நாடா!
நாளை ‘என, உற்ற பகல்
    நல் தவன் உரைத்தான்.
41

உரை
   
 
தயரதன் தன் மாளிகையை அடைதல்

1243.சொற்ற பொழுதத்து, அரசர் கை
    தொழுது எழத், தன்
ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின்
    ஒலி பொங்கப்,
பொன் தட முடிப் புது வெயில்
    பொழிதரப் போய்,
நற்றவர் அனுச்சை கொடு,
    நல் மனை புகுந்தான்.
42

உரை
   
 
கதிரவன் மறைவு

1244.அன்னம் அரிதில் பிரிய,
    அண்ணலும் அகன்று, அப்
பொன்னின் நெடு மாடவரை
    புக்கனன், மணிப்பூண்
மன்னவர் பிரிந்தனர்கள்,
    மாதவர்கள் போனார்,
மின்னு சுடர் ஆதவனும்
    மேருவில் மறைந்தான்.
43

உரை