சனகன் வரவேற்பால் யாவரும் மகிழ்தல்

1245.இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேணக்
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர்
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார்.
1

உரை
   
 
சீதாதேவியின் நிலை

1246.தேடு அரு நலத்த புனல் ஆசை
    தறெல் உற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை
    எய்தும் வகை காணார்,
ஈடு அழிவு உறத் தளர்வொடு
    ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும்
    அந்நிலையள் ஆனாள்.
2

உரை
   
 
சீதை இரவொடு கூறல்

1247.‘உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனார்
கரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே எனை ஆள் உடையான் வருமே
இரவே! கொடியாய் விடியாய் ‘எனுமால்.
3

உரை
   
 
மனத்தொடு கூறல்

1248.‘கரு நாயிறு போல்பவர் காலொடு போய்
வரும் நாள் அயலே வருவாய் மனனே!
பெரும் நாள் உடனே பிரியாது உழல்வாய்
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?
4

உரை
   
 
அன்றிலொடு கூறல்

1249.கனை ஏழ் கடல் போல்
    கரு நாழிகை தான்
வினையேன் வினையால்
    விடியாவிடின், நீ,
தனியே பறவாய்,
    தகவு ஏதும் இலாய்,
பனை மேல் உறைவாய்!
    பழி பூணுதியோ?
5

உரை
   
 
நிலவொடு கூறல்

1250.‘அயில் வேல் அனல் கால்வன
    ஆம் நிழல் ஆய்
வெயில் ஏ என நீ
    விரிவாய், நிலவே!
செயிர் ஏதும் இலார்,
    உடல் தேய்வுறுவார்,
உயிர் கோள் உறுவார்
    உளரோ? உரையாய்!
6

உரை
   
 
தனெ்றலொடு கூறல்

1251.‘மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்
மின் தொத்து நிலா நகை வீழ் மலயக்
குன்றில் குலமா முழையில் குடிவாழ்
தனெ்றல் புலியே! இரை தேடுதியோ? ‘
7

உரை
   
 
உருவெளித் தோற்றம்

1252.‘தரெுவே திரிவார் ஒரு சேவகனார்
இரு போதும் விடார் இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர் கன்னியர் பால்
வருவார் உளரோ குல மன்னவரே?
8

உரை
   
 
இரவு நீட்டித்தது குறித்து இரங்கல்

1253.‘தரெுளா வினை; தீயவர் சேரலர் தோள்;
அருளா நெறி ஓடும் அவா அதுவோ;
கருள் ஆர் கடலோ கரை காண அரிதால்
இருள் ஆனதுதான் எனை ஊழி கொலாம்?
9

உரை
   
 
தேவியின் வருத்த மிகுதி

1254.‘பண்ணோ ஒழியா பகலோ புகுதாது
எண்ணோ தவிரா இரவோ விடியாது
உள் நோ ஒழியா உயிரோ அகலா
கண்ணோ துயிலா; இதுவோ கடனே?
10

உரை
   
 
கடலை நோக்கி இரங்குதல்

1255.‘இடையே வளை சோரா எழுந்து விழுந்து
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால்;
கடலே! உரை நீயும் ஒர் கன்னி கொலாம்?
11

உரை
   
 
கவிக்கூற்று

1256.என இன்னன பன்னி இருந்து உளைவாள்
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு கால்
மனை தன்னின் வயங்குறும் வைகு இருள் வாய்
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்.
12

உரை
   
 
இராமன் நினைகின்றவை (1257-1262)

1257.‘முன் கண்டு முடிப்பு அரு வேட்கையினால்
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதிப்
பின் கண்டும் ஒர் பெண் கரை கண்டிலெனால்;
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே?
13

உரை
   
 
1258.‘திருவே அனையாள் முகமே! உயிரின்
கருவே! களியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவு ஆகலையோ?
14

உரை
   
 
1259.‘கழியா உயிர் உந்திய காரிகை தன்
விழி போல வளர்ந்தது வீகிலதால்;
அழி போர் இறைவன் பட அஞ்சியவன்
பழி போல வளர்ந்தது பாய் இருளே.
15

உரை
   
 
1260.‘நினையாய் ஒருகால் நெடிதோ நெறிதான்?
வினவாதவர் பால் விடை கொண்டிலையோ?
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! எனை நீயும் மறந்தனையோ?
16

உரை
   
 
1261.‘தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொல் ஆம்?
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார்
மெல் நோக்கினதே கடுவல் விடமே.
17

உரை
   
 
1262.‘வல்லார் புனை மாளிகை வார் பொழிலொடு
எல்லாம் உள ஆயினும் என் மனமோ
கல்லோ எனும் நெஞ்சொடு கன்னியர் ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே.
18

உரை
   
 
மணமுரசு அறைதல்

1263.வானவர் பெருமானும் மனம்
    நினைவினன் ஆகத்,
‘தேன் நகு குழலாள் தன்
    திருமண வினை நாளை;
பூ நகு மணி வாசம்
    புனை நகர் அணிவீர் ‘என்று,
ஆனையின் மிசை ஆணை
    அணி முரசு அறைவித்தான்
19

உரை
   
 
நகரமாந்தர் நன்முயற்சி

1264.முரசு அறைதலும், மான
    முதியரும், இளையோரும்,
விரை செறி குழலாரும்,
    விரவினர் விரைகின்றார்,
உரை செறி கிளையோடும்
    உவகையின் உயர்கின்றார்,
கரை தரெிவு அரிது ஆகும்
    இரவு ஒரு கரை கண்டார்.
20

உரை
   
 
கதிரவன் வருகை

1265.அஞ்சன ஒளியானும்,
    அலர் மிசை உறை வாளும்,
எஞ்சல் இல் மணம் நாளைப்
    புணர்குவர் எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறித்
    தினகரன் ஒரு தேர் மேல்
மஞ்சனை அணி கோலம்
    காணிய என வந்தான்.
21

உரை
   
 
நகரமாந்தர் செயல் (1266-1281)

1266.தோரணம் நடுவாரும்,
    தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும்
    புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம்
    கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறை வாணர்க்கு
    இன் அமுது அடுவாரும்.
22

உரை
   
 
1267.அன்னம் மெல் நடையாரும்,
    மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர் வாழை
    கமுகொடு நடுவாரும்,
பன் அரு நிரை முத்தம்
    பரியன தரெிவாரும்,
பொன் அணி அணிவாரும்,
    மணி அணி புனைவாரும்.
23

உரை
   
 
1268.சந்தனம் அகில் நாறும்
    சாந்தொடு தரெு எங்கும்
சிந்தினர் திரிவாரும்,
    செழு மலர் சொரிவாரும்,
இந்திர தனு நாணும்
    எரி மணி நிரை மாடத்து
அந்தம் இல் விலை
    ஆரக் கோவைகள் அணிவாரும்.
24

உரை
   
 
1269.தளம் கிளர் மணி காலத்
    தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளம் குளிர் முளை ஆர் நல்
    பாலிகை இனம் எங்கும்,
விளிம்பு பொன் வகை நாற
    வெயிலொடு நிலவு ஈனும்
பளிங்கு உடை உயர் திண்ணைப்
    பத்தியின் வைப்பாரும்.
25

உரை
   
 
1270.மந்தரம் மணி மாடம்
    முன்றிலின் வயின் எங்கும்
அந்தம் இல் ஒளிர் முத்தின்
    அகல் நிறை ஒளி நாறி,
இந்திரன் நெடு வானம்
    ஈன் அலர்குவது என்னப்,
பந்தரின் நிழல் வீசப்,
    படர்வெயில் கடிவாரும்.
26

உரை
   
 
1271.வயிரம் மின் ஒளி ஈனும்
    மரகத மணி வேதிச்
செயிர் அற ஒளிர் தீபம்
    சிலதியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின்
    மிடை கொடி மதி தோயும்
எயிலினில் நடுவாரும்,
    அகில் எரி இடுவாரும்.
27

உரை
   
 
1272.பண்டியில் நிறை வாசப்
    பனி மலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு
    கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக்
    குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து
    ஓடைகள் அணிவாரும்.
28

உரை
   
 
1273.கலவைகள் புனைவாரும்,
    கலை நல தரெிவாரும்,
மலர் குழல் மலைவாரும்,
    மதி முகம் மணி ஆடித்
திலதம் முன் இடுவாரும்,
    சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம்
    எழில் பெற இடுவாரும்.
29

உரை
   
 
1274.தப்பின மணி காசும்
    சங்கமும் மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும்,
    ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச்
    சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என வாரிக்
    கொண்டனர் களைவாரும்.
30

உரை
   
 
1275.மன்னவர் வருவாரும்,
    மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின்
    இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும்,
    சிலதியர் செறிவாரும்,
கன்னலின் மண ஓலைக்
    கடிகைகள் தரெிவாரும்.
31

உரை
   
 
1276.கணிகையர் தொகுவாரும்,
    கலை பல பயில்வாரும்,
‘பணி, பணி ‘எனலோடும்,
    பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று
    அறைதலின் உகும் அம்பொன்
மணி மலை தொக மன்னன்
    வாயிலின் மிடைவாரும்.
32

உரை
   
 
1277.கேடகம் வெயில் வீசக்,
    கிளர் அயில் நிலவு ஈனக்,
கோடு உயர் நெடு விஞ்சைக்
    குஞ்சரம் அது போல
ஆடவர் திரிவாரும்,
    அரிவையர் களி கூரும்
நாடகம் நவில்வாரும்,
    நகை உயிர் கவர்வாரும்.
33

உரை
   
 
1278.கதிர் மணி ஒளி காலக்
    கவர் பொருள் தரெியா ஆறு
எதிர் எதிர் சுடர் விம்முற்று
    எழுதலின், இளையோரும்
மது விரி குழலாரும்,
    மதில் உடை நெடு மாடம்
அது இது என ஓரார்,
    அலமரல் உறுவாரும்.
34

உரை
   
 
1279.தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும்
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடைக்
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும்
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும்.
35

உரை
   
 
1280.முத்து அணி அணிவாரும்,
    மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொன்
    பலகலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை
    சுரி குழல் அணிவாரும்,
சித்திரம் நிரை தோயும்
    செம் துகில் புனைவாரும்.
36

உரை
   
 
1281.விடம் நிகர் விழியாரும்,
    அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும்,
    கிளர் நகை ஒளியாரும்,
தடம் முலை பெரியாரும்,
    தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும்,
    பிடி என வருவாரும்.
37

உரை
   
 
பல செல்வமும் நிறைந்து மணநாள் சிறத்தல்

1282.உள் நிறை நிமிர் செல்வம்
    ஒரு துறை செல என்றும்
கண் உறல் அரிது, என்றும்
    கருதுதல் அரிது, அம்மா!
எண் உறு சுடர் வானத்து
    இந்திரன் முடி சூடும்
மண் உறு திரு நாள் ஒத்தது
    அம் மண நாளே.
38

உரை
   
 
தயரதன் மணமண்டபம் அடைதல் ((1283-1284))

1283.கரை தரெிவு அரியது கனகம் வேய்ந்தது
வரை என உயர்ந்தது மணியின் செய்தது
நிரை வளை மண வினை நிரப்பும் மண்டபம்
அரசர் தம் அரசனும் அணுகல் மேயினான்.
39

உரை
   
 
1284.வெண் குடை இள நிலா விரிப்ப மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிடப்
பண் குடை வண்டினம் பாட ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான்.
40

உரை
   
 
முரசம் முதலியன ஆர்த்தல்

1285.மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன
சங்குகள் முரன்றன தாரை போர் எனப்
பொங்கின மறையவர் புகலும் நான் மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றவே.
41

உரை
   
 
தயரதனோடு சென்ற அரசர்கள்

1286.பரந்த தேர் களிறு பாய் புரவி பண்ணையில்
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர்.
42

உரை
   
 
அனைவரும் முறையாக வருதல்

1287.அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்
முனைவரும் மன்னரும் முறையின் ஏறினார்
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான்.
43

உரை
   
 
மண்டபம் பொன் மலையை ஒத்தல்

1288.மன்னரும் முனிவரும் வான் உேளார்களும்
அன்னம் மெல் நடை அணங்கு அனைய மாதரும்
துன்னினர் துவன்றலில் சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது அப் பொரு இல் கூடமே.
44

உரை
   
 
மண்டபம் அண்டகோளத்தை ஒத்தல்

1289.புயல் உள மின் உள,
    பொரு இல் மின் உள,
இயல் மணி இனம் உள,
    சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய
    மணி செய் மண்டபம்
அயன் முதல் திருத்திய
    அண்டம் ஒத்ததே.
45

உரை
   
 
மண்டபம் மாலின் வயிற்றை ஒத்தல்

1290.எண் தவ முனிவரும் இறைவர் யாவரும்
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று; ஆதலின்
மண்டபம் வையமும் வானும் வாய்மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே.
46

உரை
   
 
கவிக் கூற்று

1291.தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற
விராவின குவிந்தன விளம்ப வேண்டுமோ?
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய
இராகவன் செய்தியை இயம்புவாம் அரோ.
47

உரை
   
 
இராமபிரான் திருமஞ்சனம் ஆடல்

1292.சங்கு இனம் தவழ் கடல் எழில் தந்தன
சிங்கல் இல் அரு மறை தரெிந்த தீர்த்தங்கள்
கங்கையே முதலிய கலந்த நீரினால்
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே.
48

உரை
   
 
திருமண் தரித்தல்

1293.என்றும் நான்முகன் முதல் யாரும் யாவையும்
நின்ற பேர் இருளினை நீக்கி நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே.
49

உரை
   
 
ஆதியஞ்சோதியை அடிவணங்கல்

1294.கோது அறு தவத்துத் தன்
    குலத்து உேளார் தொழும்
ஆதி அம் சோதியை
    அடி வணங்கினான்
காது இயல் கயல் விழிக்
    கன்னிமார்களை
வேதியர்க்கு அரு மறை
    விதியின் நல்கியே
50

உரை
   
 
கலவைச் சாந்தணிதல்

1295.அழிவரு தவத்தினொடு அறத்தை ஆக்குவான்
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என
எழுதரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு எனக் கலவை சாத்தியே.
51

உரை
   
 
சுழியம் சூடல்

1296.மங்கல முழு நிலா மலர்ந்த திங்களைப்
பொங்கு இரும் கருங்கடல் பூத்தது ஆம் எனச்
செங்கிடைச் சிகழிகைச் செம்பொன் மாலையும்
தொங்கலும் துயல்வரச் சுழியம் சூடியே.
52

உரை
   
 
இருகுழைக் காட்சி

1297.ஏதம் இல் இரு குழை இரவு நன் பகல்
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும்
சீதைதன் கருத்தினைச் செவியின் உள் உறத்
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே.
53

உரை
   
 
வீரபட்டம் சூடல்

1298.கார் விடக் களம் உடைக்
    கணிச்சி வானவன்
வார் சடைப் புடையின்
    ஓர் மதி மிலைச்சத் தான்
சூர் சுடர்க் குலம் எலாம்
    சூடினான் என
வீரபட்டத்தொடு திலதம்
    மின்னவே.
54

உரை
   
 
முத்தாரம் அணிதல்

1299.சக்கரத்து அயல் வரும்
    சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி
    தரள வெண் கொடி
மொய்க் கருங் குழலினாள்
    முறுவல் உள் உறப்
புக்கன நிறைந்து மேல்
    பொடித்த போன்றவே.
55

உரை
   
 
தோள்வளை தரித்தல்

1300.பந்தி செய் வயிரங்கள்
    பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி
    அழலில் தோன்றலால்
சுந்தரத் தோள் அணி வலயம்
    தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை
    மானுமே.
56

உரை
   
 
முத்துவடங்கள் தரித்தல்

1301.கோவை இன் பெரு வட முத்தம் கோத்தன
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ
மூவகை உலகுக்கும் முதல்வன் நாம் என
ஏவரும் பெரும் குறி இட்ட போன்றவே.
57

உரை
   
 
கடகம் தரித்தல்

1302.மாண்ட பொன் மணி அணி
    வலயம் வந்து எதிர்
வேண்டினர்க்கு உதவுவான்
    விரும்பிக் கற்பகம்
ஈண்டு தன் கொம்பு இடை
    ஈன்றது ஆம் எனக்
காண் தகு தடக் கையில்
    கடகம் மின்னவே.
58

உரை
   
 
நவமணிமாலை அணிதல்

1303.தேன் உடை மலர் மகள் திளைக்கும் மார்பினில்
தான் இடை விளங்கிய தகையின் ஆரந்தான்
மீன் ஒடு சுடர் விட விளங்கும் மேகத்து
வான் இடு வில் என வயங்கிக் காட்டவே.
59

உரை
   
 
உத்தரீயக் காட்சி

1304.நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தர்
உணர்வினின் ஒளி திகழ் உத்தரீயம் தான்
தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்வே.
60

உரை
   
 
முப்புரி நூலின் தோற்றம்

1305.மேவு அரும் சுடர் என விளங்கும் மார்பின் நூல்
ஏவரும் தரெிந்து இனிது உணர்மின் ஈண்டு எனத்
தேவரும் முனிவரும் தரெிக்கலா முதல்
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே.
61

உரை
   
 
உதரபந்தனத் தோற்றம்

1306.சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதர பந்தனம்
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழப்
பொன் தடம் தாமரை பூத்த போன்றதே.
62

உரை
   
 
வெண்ணிறப் பட்டுச் சாத்தல்

1307.மண் உறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண் உறு கருங் கடல் அதனைக் கை வளர்
தண் நிறப் பால் கடல் தழீஇயது ஆம் என
வெண் நிறப் பட்டு ஒளி விளங்கச் சாத்தியே.
63

உரை
   
 
உடைவாள் அணிதல்

1308.சலம் வரு தரளமும் தயங்கும் நீலமும்
அலம் வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே.
64

உரை
   
 
உடைவாளின் பக்கத்தில் குஞ்சங்களைத் தொங்கவிடுதல்

1309.முகை விரி சுடர் ஒளி
    முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச்
    சுடரும் சுற்றிடத்
தகை உடை வாள் எனும்
    தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் எனத்
    தொங்கல் நாற்றியே.
65

உரை
   
 
கிம்புரி அணிதல்

1310.காசொடு கண் நிழல் கஞலக் கைவினை
ஏசு அறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின் மகரவாய் விளங்கு வாள் முகம்
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே.
66

உரை
   
 
சிலம்பும் கழலும் அணிந்தமை

1311.இனிப் பரந்து உலகினை
    அளப்பது எங்கு? எனத்
தனித்தனி தடுப்பன
    போலும் சால்பின
நுனிப்பு அரும் நுண் வினைச்
    சிலம்பு நோன் கழல்
பனிப்பு அரும் தாமரைப்
    பாதம் பற்றவே.
67

உரை
   
 
1312.இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம்
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான்
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான்.
68

உரை
   
 
இராமபிரான் கொண்ட திருக்கோலச் சிறப்பு செப்ப
அரிதனெல்

1313.முப் பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமுதம் தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ.
69

உரை
   
 
இராமபிரான் தானம் செய்தபின் திருத்தேர் ஏறுதல்

1314.பல் பதினாயிரம் பசுவும் பைம் பொனும்
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நால் மறைச்
செல்வர்கள் வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான்.
70

உரை
   
 
இராமபிரான் ஏறிய தேரின் சிறப்பு (1315-1316)

1315.பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது
சுற்று உறு நவம் மணி சுடரும் தோற்றத்தது
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒத்ததே.
71

உரை
   
 
1316.நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய
நாலையும் அனையன புரவி நான்கு ஒரு
பாலமை புணர்ந்தன பக்கம் பூண்டவே.
72

உரை
   
 
இராமபிரான் தேரேறிச் செல்லுதல்

1317.அனையது ஓர் தேரினில்
    அருணன் நின்று எனப்
பனி வரு மலர்க் கண் அப்
    பரதன் கோல் கொளக்,
குனி சிலைத் தம்பி பின்
    கூட, ஏனையன்
இனிய பொன் கவரி கால்
    இயக்க, ஏகினான்.
73

உரை
   
 
இராமபிரானது அழகின் மேம்பாடு

1318.அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே.
74

உரை
   
 
தேவர்களின் ஆனந்தக் கூத்து

1319.வரம்பு அறும் உலகினை
    வலிந்து மாய்வு இன்றித்
திரம் பயில் அரக்கர்தம்
    வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது எனக் கொடு
    நிறைந்த தேவரும்
அரம்பையர் குழாத்தொடும்
    ஆடல் மேயினார்.
75

உரை
   
 
மிதிலை நகர மகளிர் செயல் (1320-1321)

1320.சொரிந்தனர் மலர் மழை சுண்ணம் தூவினர்
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர்
பரிந்தனர் அழகினைப் பருகினார் கொல் ஆம்
தரெிந்திலர் திருநகர் மகளிர் செய்கையே.
76

உரை
   
 
1321.வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின்
எள் அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார்;
உள்ளன யாவையும் உதவிப் பூண்டவும்
கொள்ளையில் கொள்க எனக் கொடுக்கின்றார் இனே.
77

உரை
   
 
இராமபிரான் மணமண்டபம் சேர்தல்

1322.எஞ்சல் இல் உலகத்து உள்ள
    எறி படை அரச வெள்ளம்,
குஞ்சரக் குழாத்தில் சுற்றக்
    கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனு வலானும்,
    மேரு மால் வரையில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத்
    தேர் இடைச் சென்று சேர்ந்தான்.
78

உரை
   
 
1323.இரதம் ஆண்டு இழிந்த பின்னர்
    இரு மருங்கு இரண்டு கையும்
பரதனும் இளைய கோவும்
    பரிந்தனர் ஏந்தப் பைந் தார்
வரதனும் எய்தி மைதீர் மாதவர்த்
    தொழுது நீதி
விரத மெய்த் தாதை பாதம்
    வணங்கி மாடு இருந்த வேலை.
79

உரை
   
 
சீதை மணமண்டபம் சார்தல்

1324.சிலை உடைக் கயல் வாள் திங்கள்
    ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலை இடை முகிழ்ப்பத் தேர் மேல்
    முன் திசை முளைத்தது அன்னாள்
அலை கடல் பிறந்து பின்னை
    அவனியில் தோன்றி மீள
மலை இடை உதிக்கின்றாள் போல்
    மண்டபம் அதனில் வந்தாள்.
80

உரை
   
 
வானவர் வியத்தல்

1325.நன்றி வானவர் எலாம் இருந்த
    நம்பியைத்
துன்று இரும் கருங் கடல்
    துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள்
    மாலை சூட்டிய
அன்றினும் இன்று உடைத்து
    அழகு என்றார் அரோ.
81

உரை
   
 
திருமணச் சிறப்பு

1326.ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில்
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள்
மலிதரு மணம் படு திருவை வாயினால்
மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன்.
82

உரை
   
 
திருமணம் காணத் தேவர் வருகை

1327.இந்திரன் சசியொடும் எய்தினான் இளம்
சந்திர மௌலியும் தையலாள் உடன்
வந்தனன் மலர் அயன் வாக்கினாள் உடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே.
83

உரை
   
 
வசிட்டன் வருதல்

1328.நீந்தரும் கடல் என
    நிறைந்த வேதியர்
தோய்ந்த நூல் மார்பினர்
    சுற்றத் தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு
    வசிட்டன் மை அற
ஏய்ந்தன கலப்பையோடு
    இனிதின் எய்தினான்.
84

உரை
   
 
திருமணச் சடங்கு தொடங்குதல்

1329.தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன்
மண்டலம் விதி முறை வகுத்து மெல் மலர்
கொண்டவை சொரிந்து எரி குழும மூட்டினன்
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன்.
85

உரை
   
 
சீதாராமர்கள் மணத்தவிசு ஏறுதல்

1330.மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.
86

உரை
   
 
இராமபிராற்குச் சீதையைச் சனகன் தாரை
வார்த்தளித்தல்

1331.கோமகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ மகளும் பொருளும் என நீர் என்
மா மகள் தன்னொடு மன்னுதி என்னாத்
தாமரை அன்ன தட கையின் ஈந்தான்.
87

உரை
   
 
அப்போது நிகழ்ந்த வாழ்த்து ஒலிகள்

1332.அந்தணர் ஆசி அரும் கலம் அன்னார்
தந்த பல்லாண்டு இசை தார் முடி மன்னர்
வந்தனை மாதவர் வாழ்த்து ஒலி போல
முந்திய சங்கம் முழங்கின மாதோ.
88

உரை
   
 
வானவர் முதலியோர் மலர் மழை பொழிதல்

1333.வானவர் பூ மழை மன்னவர் பொன் பூ
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்
தான் நகு நாள் மலர் என்று இவை தம்மால்
மீன் நகு வானின் விளங்கியது இப்பார்.
89

உரை
   
 
பாணிக் கிரகணம்

1334.வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்.
90

உரை
   
 
தீவலம் செய்தல்

1335.இடம் படு தோளவனோடு இயை வேள்வி
தொடங்கிய வெம் கனல் சூழ்வரு போதில்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்.
91

உரை
   
 
அம்மி மிதித்து அருந்ததி காணல்

1336.வலம் கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம் புரி நூலவர் செய் பொருள் முற்றி
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டாள்.
92

உரை
   
 
நன்மனை புகுதல்

1337.மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார்
முற்றிய மாதவர் தாள் முறை சூடிக்
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்
பொன் தொடி கைக் கொடு பொன் மனை புக்கான்.
93

உரை
   
 
மகிழ்ச்சி ஆரவாரம்

1338.ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம்
ஆர்த்தன நால் மறை ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன அண்டம்.
94

உரை
   
 
மணமகன் தாயர் மூவரையும் வணங்கல்

1339.கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா
ஆயதன் அன்னை அடித் துணை சூடித்
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.
95

உரை
   
 
மணமகள் அம்மூவரையும் வணங்கல்

1340.அன்னமும் அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தனள் சிந்தை உவந்தார்
கன்னி அருந்ததி காரிகை காணா
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார்.
96

உரை
   
 
தாயரின் பெரு மகிழ்ச்சி

1341.சங்க வளைக் குயிலைத் தழி நின்றார்
அங்கணணுக்கு உரியார் உளராவார்
பெண்கள் இனிப் பிறர் ஆர் உளர் என்றார்
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார்.
97

உரை
   
 
பெண்ணின் பரிசு வகைகள்

1342.எண் இல கோடி பொன்
    எல்லை இல் கோடி
வண்ண அரும் கலம்
    மங்கையர் வெள்ளம்
கண் அகல் நாடொடு
    காசு உயர் தூசும்
பெண்ணின் அணங்கு அனையாள்
    பெறுக என்றார்.
98

உரை
   
 
1343.நூல் கடல் அன்னவர்
    சொல் கடன் நோக்கி
மால் கடல் அன்ன
    மனத்தவேளாடும்
கால் கடல் போல்
    கருணைக் கடல் பண்டைப்
பால் கடல் அன்னது ஒர்
    பாயல் அணைந்தான்.
99

உரை
   
 
திருமண வேள்வி நிறைவேறுதல்

1344.பங்குனி உத்தரம் ஆன பகல் போது
அங்கண் இருக்கினில் ஆயிரம் நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வளர்த்தான்.
100

உரை
   
 
1345.வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும் எனத் தமரொடு குறித்தான்.
101

உரை
   
 
1346.கொய்ந் நிறை தாரன் குசத்துவசப்பேர்
நெய்ந் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார்
மைந் நிறை கண்ணியர் வான் உறை நீரார்
மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட்டார்.
102

உரை
   
 
1347.வேட்டவர் வேட்ட பின் வேந்தனும் மேல் நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான்.
103

உரை
   
 
1348.ஈந்து அளவு இல்லது ஒர் இன்பம் நுகர்ந்தான்
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும்
வேந்தனும் அந் நகர் வைகினன் மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்.
104

உரை