தயரதன் சோதிடரை நாள் கேட்டல்

1496.கடி கமழ் தாரினான் கணித மாக்களை
முடிவுற நோக்கி ஓர் முகமன் கூறிப் பின்
‘வடி மழு வாளவற் கடந்த மைந்தற்கு
முடி புனை கடிகை நாள் மொழிமின் ‘என்றனன்.
1

உரை
   
 
தயரதன் அழைக்க வசிட்டன் வருதல்

1497.பொருந்தும் நாள் நாளை நின்
    புதல்வற்கு ‘என்றனர்
திருந்தினார் : அன்ன சொல்
    கேட்ட செய் கழல்
பெரும் திண் மால் யானையான்,
    ‘பிழைப்பு இல் செய் தவம்
வருந்தினான் வருக ‘என,
    வசிட்டன் எய்தினான்.
2

உரை
   
 
தயரதன், இராமனுக்கு அரசியல் அறங்கூற
வசிட்டனை வேண்டல்

1498.‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது ‘எனத் தொழுது சொல்லினான்.
3

உரை
   
 
இராமன் வசிட்டனை வரவேற்றல்

1499.முனிவனும் உவகையும் தானும் முந்துவான்
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும்
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான்.
4

உரை
   
 
வசிட்டன் முடிசூட்டு விழா நாளை எனல்

1500.ஒல்கல் இல் தவத்து உத்தமன் ஓதும் நூல்
மல்கு கேள்வி அவ் வள்ளலை நோக்கினான்;
“புல்கு காதல் புரவலன் போர்வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு“ என்றான்.
5

உரை
   
 
வசிட்டன் செவியறிவுறூஉ (1501-1516)

1501.என்று பின்னும் இராமனை நோக்கி ‘நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப் பொருள்;
நன்று கேட்டுக் கடைப் பிடி நன்று ‘எனத்
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்.
6

உரை
   
 
1502.‘கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரை மேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால். ‘
7

உரை
   
 
1503.‘அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவரில்
நொந்து உளாரையும் நோய் தவிர்ந்தாரையும்
மைந்த! எண்ண வரம்பும் உண்டாம் கொலோ? ‘
8

உரை
   
 
1504.‘அனையர் ஆதலின் ஐய! இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி;
இனிய கூறி நின்று ஏயின செய்தியால். ‘
9

உரை
   
 
1505.‘ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி
யாவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்ததே? ‘
10

உரை
   
 
1506.‘உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும்
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தரெுளும் நல் அறமும் மனச் செம்மையும்
அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ? ‘
11

உரை
   
 
1507.‘சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்
நீதி மைந்த! நினக்கு இலை; ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே. ‘
12

உரை
   
 
1508.‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? ‘
13

உரை
   
 
1509.‘கோளும் ஐம்பொறியும் குறையப் பொருள்
நாளும் கண்டு நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது
வாளின் மேல் வரும் மாதவம் மைந்தனே!
14

உரை
   
 
1510.‘உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும்
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்
அமைச்சர் சொல் வழி ஆற்றுதல் ஆற்றலே.
15

உரை
   
 
1511.‘என்புதோல் உடையார்க்கும் இலார்க்கும் தம்
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி மூ உலகத்தினும்
அன்பின் அல்லது ஒர் ஆக்கம் உண்டாகுமோ?
16

உரை
   
 
1512.‘வையம் மன் உயிராக அம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?
17

உரை
   
 
1513.‘இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
நினையும் நீதிநெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ?
18

உரை
   
 
1514.சீலம் அல்லன நீக்கிச் செம் பொன் துலைத்
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டு ஆகுமோ?
19

உரை
   
 
1515.‘ஓர்வின் நல் வினை
    ஊற்றத்தினார் உரை
பேர்வு இல் தொல் விதி
    பெற்று உளது என்று அரோ,
தீர்வு இல் அன்பு செலுத்தலில்,
    செவ்வி ஓர்
ஆர்வம் மன்னவற்கு
    ஆயுதம் ஆவதே.
20

உரை
   
 
1516.‘தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனில் கடும் கேடு எனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே.
21

உரை
   
 
வசிட்டன் இராமனுடன் திருமால் கோயிலை அடைதல்

1517.ஏனை நீதி இனையன வையகப்
போனகற்கு விளம்பிப் புலன் கொளீஇ
ஆனவன் னொடும் ஆயிரம் மௌலியான்
தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான்.
22

உரை
   
 
இராமனை நீராட்டித் தருப்பையில் இருக்கச் செய்தல்

1518.நண்ணி நாகணை வள்ளலை நால் மறை
புண்ணியப் புனல் ஆட்டிப் புலமையோர்
எண்ணும் நல் வினை முற்றுவித்து ஏற்றினான்
வெள் நிறத்த தருப்பை விரித்து அரோ.
23

உரை
   
 
தயரதன் நகரை அணிசெயச் சொல்லல்

1519.ஏற்றிட ஆண் தகை இனிது இருந்துழி
நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய்
ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான்; அவன்
‘சாற்றுக நகர் அணி சமைக்க ‘என்றனன்.
24

உரை
   
 
வள்ளுவர் முரசறைதல்

1520.ஏவின வள்ளுவர் “இராமன் நாளையே
பூமகள் கொழுநன் ஆய்ப் புனையும் மௌலி; இக்
கோ நகர் அணிக“ எனக் கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொளத் திரிந்து சாற்றினார்.
25

உரை
   
 
இராமன் முடி புனைவது அறிந்து நகரமக்கள் மகிழ்தல்

1521.‘கவி அமை கீர்த்தி அக்
    காளை நாளையே
புவி அமை மணி முடி
    புனையும் ‘என்ற சொல்,
செவி அமை நுகர்ச்சியது
    எனினும், தேவர்தம்
அவி அமுது ஆனது;
    அந்நகர் உளார்க்கு எலாம்.
26

உரை
   
 
நகரமக்களின் மகிழ்வுறு செயல்கள்

1522.ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர் மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள்நிதி சொல்லினார்க்கு எலாம்.
27

உரை
   
 
நகரை அழகு செய்தல் (1523-1531)

1523.திணி சுடர் இரவியைத்
    திருத்தும் ஆறும், அப்
பணியிடைப் பள்ளியான்
    பரந்த மார்பிடை
மணியினை வேகடம்
    வகுக்கும் ஆறும் போல்,
அணி நகர் அணிந்தனர்
    அருத்தி மாக்களே.
28

உரை
   
 
1524.வெள்ளிய, கரியன, செய்ய,
    வேறு உள,
கொள்ளை வான் கொடி நிரைக்
    குழாங்கள் தோன்றுவ,
கள் அவிழ் கோதையான்
    செல்வம் காணிய
புள் எலாம் திரு நகர்
    புகுந்த போன்றவே.
29

உரை
   
 
1525.மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்;
அங்கு அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன;
தங்கு ஒளி முறுவலில் தாமம் நான்றன;
கொங்கையை நிகர்த்தன கனக கும்பமே.
30

உரை
   
 
1526.முதிர் ஒளி உயிர்த்தன முடுகிக் காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என
மதி தொட நிவந்தன மகர தோரணம்
புதியன வலந்தன புதவ ராசியே.
31

உரை
   
 
1527.துனி அறு செம் மணித்
    தூணம், நீறு தோய்
வனிதை ஓர் கூறினன்
    வடிவு காட்டின;
புனை துகில் உறை தொறும்
    பொதிந்து தோன்றின,
பனி பொதி கதிர் என
    பவளத் தூண்களே.
32

உரை
   
 
1528.முத்தினின் முழு நிலவு எறிப்ப,
    மொய்ம் மணிப்
பத்தியின் இள வெயில்
    பரப்ப, நீலத்தின்
தொத்தினம் இருள்வரத்
    தூண்டச், சோதிட
வித்தகர் விரித்த நாள்
    ஒத்த, வீதியே!
33

உரை
   
 
1529.ஆடல் மான் தேர்க் குழாம்,
    அவனி காணிய,
வீடு எனும் உலகின்
    வீழ் விமானம் போன்றன;
ஓடை மாக் கட களிறு,
    உதய மால் வரை
தேடரும் கதிரொடும்
    திரிவ போன்றவே.
34

உரை
   
 
1530.வளம் கெழு திரு நகர்
    வைகும் வைகலும்
பளிங்கு உடை நெடும் சுவர்
    படுத்த பத்தியில்
கிளர்ந்து எரி சுடர் மணி
    இருளைக் கீறலால்,
தளர்ந்தில பிரிந்தில
    சக்(க)ர வாகமே.
35

உரை
   
 
1531.பூ மழை, புனல் மழை,
    புது மென் சுண்ணத்தின்
தூ மழை, தரளத்தின்
    தோம் இல் வெண் மழை,
தாம் இழை நெரிதலில்
    தகர்ந்த பொன் மழை,
மா மழை நிகர்த்தன,
    மாட வீதியே.
36

உரை
   
 
பிடியும் களிறும் செல்லுங் காட்சி

1532.காரொடு தொடர் மதக் களிறு சென்றன
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என;
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலைத்
தேரொடு நடக்கும் அத் தரெிவை மாரினே.
37

உரை
   
 
அயோத்தியை அமரர் அமராவதியாகவே எண்ணுதல்

1533.ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும்
தேய்ந்தில; அனையது தரெிகிலாமையால்
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில்
போந்தவர் ‘போந்திலம் ‘என்னும் புந்தியால்.
38

உரை
   
 
கூனி தோன்றுதல்

1534.ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகிப்,
    அமலை, வானவர்
ஆயிழை தன்னை அடைந்த ஆழி மன்னன்
    பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன்
    இழைத்த தீமை போல்,
துன்ன அரும் கொடு மனக்
    கூனி தோன்றினாள்.
39

உரை
   
 
கூனியின் சினம்

1535.தோன்றிய கூனியும்
    துடிக்கும் நெஞ்சினாள்,
ஊன்றிய வெகுளியாள்,
    உளைக்கும் உள்ளத்தாள்,
கான்று எரி நயனத்தாள்,
    கதிக்கும் சொல்லினாள்,
மூன்று உலகினுக்கும் ஓர்
    இடுக்கண் மூட்டுவாள்.
40

உரை
   
 
கூனி கைகேயியிடம் விரைதல்

1536.தொண்டை வாய்க் கேகயன்
    தோகை கோயில் மேல்
மண்டினாள், வெகுளியின்
    மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன்
    பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன்
    உள்ளத்து உள்ளுவாள்.
41

உரை
   
 
கைகேயியைக் கூனி அடைதல்

1537.நாற் கடல் படும் மணி
    நளினம் பூத்தது ஓர்
பால் கடல் படு திரைப்
    பவள வல்லியே
போல், கடைக்கண் அளி
    பொழியப் பொங்கு அணை
மேல் கிடந்தாள் தனை,
    விரைவின் எய்தினாள்.
42

உரை
   
 
கூனி கைகேயியை எழுப்புதல்

1538.எய்தி, அக் கேகயன்
    மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை
    நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமை சால்
    செம் பொன் சீறடி
கைகளில் தீண்டினாள்,
    காலக் கோள் அனாள்.
43

உரை
   
 
கூனி கூறத் தொடங்குதல்

1539.தீண்டலும், உணர்ந்த அத்
    தயெ்வக் கற்பினாள்,
நீண்ட கண் அனந்தரும்
    நீங்குகிற்றிலள்;
மூண்டு எழு பெரும் பழி
    முடிக்கும் வெவ்வினை
தூண்டிடக் கட்டுரை
    சொல்லல் மேயினாள்.
44

உரை
   
 
கூனி கைகேயியை வெகுண்டு கூறல்

1540.‘அணங்கு வாள் விட அரா
    அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி
    குளிர் வெண் திங்கள் போல்,
பிணங்கு வான் பேர் இடர்
    பிணிக்க நண்ணவும்,
உணங்குவாய் அல்லை, நீ
    உறங்குவாய்? ‘என்றாள்.
45

உரை
   
 
கைகேயி, எவ்விடர் தனக்கு வரும் எனல் (1541-1542)

1541.வெவ்விடம் அனையவள் விளம்ப,
    வேல் கணாள்,
‘தவெ் அடு சிலை கை என்
    சிறுவர் செவ்வியர்;
அவ்வவர் துறை தொறும்
    அறம் திறம்பலர்;
எவ் இடர் எனக்கு வந்து
    அடுப்பது ஈண்டு? ‘எனா.
46

உரை
   
 
1542.‘பராவு அரும் புதல்வரைப்
    பயக்க யாவரும்,
உராவு அரும் துயரை விட்டு
    உறுதி காண்பரால்;
விராவு அரும் புவிக்கு எலாம்
    வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு
    இடர் உண்டோ? ‘என்றாள்.
47

உரை
   
 
கூனி, கைகேயிக்கு வீழ்வும் கோசலைக்கு வாழ்வும்
வந்தமை கூறல்

1543.ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்
‘வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீந்தது;
வாழ்ந்தனள் கோசலை மதியினால் ‘என்றாள்.
48

உரை
   
 
கைகேயி, கோசலை எய்தும் வாழ்வு யாது எனல்

1544.அன்னவள் அவ் உரை உரைப்ப,
    ஆய் இழை,
‘மன்னவர் மன்னன் என் கணவன்;
    மைந்தனேல்,
பன்னரும் பெரும் புகழ்ப் பரதன்;
    பார் தனில்,
என் இதன்மேல் அவட்கு
    எய்தும் வாழ்வு? ‘என்றாள்.
49

உரை
   
 
இராமன் முடிசூடுவான் எனல்

1545.‘ஆடவர் நகை உற,
    ஆண்மை மாசு உறத்
தாடகை எனும் பெயர்த்
    தையலாள் படக்
கோடிய வரி சிலை இராமன்,
    கோ முடி
சூடுவன் நாளை; வாழ்வு இது ‘
    எனச் சொல்லினாள்.
50

உரை
   
 
கைகேயி மகிழ்தல்

1546.மாற்றம் அஃது உரைசெய,
    மங்கை உள்ளமும்
ஆற்றல் சால் கோசலை
    அறிவும் ஒத்தவால்;
வேற்றுமை உற்றிலள்,
    வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து
    இருக்கவே கொலாம்!
51

உரை
   
 
கைகேயி கூனிக்கு மாலை கொடுத்தல்

1547.ஆய பேர் அன்பு எனும்
    அளக்கர் ஆர்த்து எழத்,
தேய்வு இலா முக மதி
    விளங்கித் தேசு உறத்,
தூயவள் உவகை போய்
    மிகச், சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர்
    மாலை நல்கினாள்.
52

உரை
   
 
கூனி மாலையை எறிதல்

1548.தழெித்தனள், உரப்பினள்,
    சிறு கண் தீ உக
விழித்தனள், வைதனள்,
    வெய்து உயிர்த்தனள்,
அழித்தனள், அழுதனள்,
    அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை,
    அக் கொடிய கூனியே.
53

உரை
   
 
கூனி, தன் கருத்தை விளக்குதல் (1549-1557)

1549.வேதனைக் கூனி, பின்,
    வெகுண்டு நோக்கி, அப்
பேதையைப் ‘பித்தி! நிற்
    பிறந்த சேயொடும்
நீ துயர்ப் படுக! நான்
    நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆள் செயத்
    தரிக்கிலேன் ‘என்றாள்.
54

உரை
   
 
1550.‘சிவந்த வாய்ச் சீதையும்,
    கரிய செம்மலும்,
நிவந்த ஆசனத்து இனிது
    இருப்ப, நின் மகன்,
அவந்தனாய் வெறுநிலத்து
    இருக்கல் ஆனபோது,
உவந்தவாறு என் இதற்கு?
    உறுதி யாது? ‘என்றாள்.
55

உரை
   
 
1551.‘மறந்திலள் கோசலை
    உறுதி; மைந்தனும்,
சிறந்த நல் திருவினில்
    திருவும் எய்தினான்;
இறந்திலன், இருந்தனன்,
    என்செய்து ஆற்றுவான்?
பிறந்திலன் பரதன், நீ
    பெற்றதால் ‘என்றாள்.
56

உரை
   
 
1552.‘சரதம் இப் புவி எலாம்
    தம்பியோடும் இவ்
வரதனே காக்குமேல்,
    வரம்பு இல் காலமும்,
பரதனும் இளவலும்
    பதியின் நீங்கிப் போய்
விரத மா தவம் செய
    விடுதல் நன்று ‘என்றாள்.
57

உரை
   
 
1553.‘பண் உறு கட கரிப்
    பரதன், பார் மகள்
கண் உறு கவினராய்
    இனிது காத்த அம்
மண் உறு முரசு உடை
    மன்னர் மாலையில்
எண் உறப் பிறந்திலன்,
    இறத்தல் நன்று ‘என்றாள்.
58

உரை
   
 
1554.‘பாக்கியம் புரிந்திலாப்
    பரதன் தன்னைப் பண்டு
ஆக்கிய பொலன் கழல்
    அரசன், ஆணையால்
தேக்கு உயர் கல் அதர்
    கடிது சேண் இடைப்
போக்கிய பொருள் எனக்கு
    இன்று போந்ததால். ‘
59

உரை
   
 
1555.மந்தரை பின்னரும்
    வகைந்து கூறுவாள்,
‘அந்தரம் தீர்ந்து உலகு
    அளிக்கும் நீர்ன்மையால்
தந்தையும் கொடியன், நல்
    தாயும் தீயளால்;
எந்தை ஏ! பரதன் ஏ!
    என் செய்வாய்? ‘என்றாள்.
60

உரை
   
 
1556.‘அரசர் இல் பிறந்து, பின்
    அரசர் இல் வளர்ந்து,
அரசர் இல் புகுந்து, பேர்
    அரசி ஆன நீ,
கரை செயற்கு அரும் துயர்க்
    கடலில் வீழ்கின்றாய்!
உரை செயக் கேட்கிலை;
    உணர்தியோ? ‘என்றாள்.
61

உரை
   
 
1557.‘கல்வியும், இளமையும்,
    கணக்கில் ஆற்றலும்
வில் வினை உரிமையும்,
    அழகும், வீரமும்,
எல்லை இல் குணங்களும்,
    பரதற்கு எய்திய,
புல் இடை உக்க நல்
    அமுதம் போலுமால்
62

உரை
   
 
கைகேயி சினந்து கூறல் (1558-1562)

1558.வாய் கயப்பு உற மந்தரை
    வழங்கிய வெம் சொல்,
காய் கனல் தலை நெய் சொரிந்து
    எனக் கதம் கனற்றக்,
கேகயர்க்கு இறை திரு மகள்,
    கிளர் இள வரிகள்
தோய் கயல் கண்கள் சிவப்பு உற
    நோக்கினள், சொல்லும்.
63

உரை
   
 
1559.‘வெயில் முறைக் குலக் கதிரவன்
    முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும்
    உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை,
    மனு முதல் மரபைச்
செயிர் உறப் புலைச் சிந்தையால்,
    என் சொனாய்? தீயோய்!
64

உரை
   
 
1560.‘எனக்கு நல்லையும் அல்லை நீ;
    என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத்
    தருமமே நோக்கின்,
உனக்கு நல்லையும் அல்லை; வந்து
    ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை,
    மதி இலா மனத்தோய்!
65

உரை
   
 
1561.‘பிறந்து இறந்து போய்ப்
    பெறுவதும் இழப்பதும் புகழேல்,
நிறம் திறம்பினும், நியாயமே
    திறம்பினும், நெறியின்
திறம் திறம்பினும், செய் தவம்
    திறம்பினும், செயிர் தீர்
மறம் திறம்பினும், வரன் முறை
    திறம்புதல் வழக்கோ?
66

உரை
   
 
1562.‘போதி என் எதிர்நின்று! நின்
    புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனென்;
    புறம் சிலர் அறியின்,
நீதி அல்லவும் நெறிமுறை
    அல்லவும் நினைந்தாய்
ஆதி; ஆதலின், அறிவிலி!
    அடங்குதி ‘என்றாள்.
67

உரை
   
 
மந்தரை மேலும் மொழிதல் (1563-1571)

1563.அஞ்சி மந்தரை அகன்றிலள்,
    அம்மொழி கேட்டும்;
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது
    நலிந்து என்னத்
“தஞ்சமே! உனக்கு உறு பொருள்
    உணர்த்துகை தவிரேன்;
வஞ்சி போலி!‘‘ என்று அடி மிசை
    வீழ்ந்து உரை வழங்கும்.
68

உரை
   
 
1564.‘மூத்தவற்கு உரித்து அரசு எனும்
    முறைமையின், உலகம்
காத்த மன்னனில் இளையன் அன்றோ
    கடல் வண்ணன்?
ஏத்தும் நீள் முடி புனைவதற்கு
    இசைந்தனன் என்றால்,
மீத் தரும் செல்வம் பரதனை
    விலக்கும் ஆறு எவனோ?
69

உரை
   
 
1565.‘அறம் நிரம்பிய அருள் உடை
    அருந்தவர்க்கு ஏனும்,
பெறலரும் திருப் பெற்ற பின்
    சிந்தனை பிறிது ஆம்;
மறம் நினைந்து உமை வலிகிலர்
    ஆயினும், மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர்
    இடையறா இன்னல்.
70

உரை
   
 
1566.‘புரியும் தன் மகன் அரசு எனில்,
    பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு
    உடைமையாம் என்றால்,
பரியும் நின் குலப் புதல்வற்கும்,
    உனக்கும், இப் பார் மேல்
உரியது என், அவள் உதவிய
    ஒரு பொருள் அல்லால்?
71

உரை
   
 
1567.‘தூண்டும் இன்னலும் வறுமையும்
    தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு,
    இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ?
    விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ?
    எங்ஙனம் வாழ்தி?
72

உரை
   
 
1568.‘சிந்தை செய்கையில் திகைத்தனை;
    இனிச் சில நாளில்,
தம் தம் இன்மையும் எளிமையும்
    நின்கொண்டு தவிர்க்க,
உந்தை, உன்னை, உன் கிளைஞர், மற்று
    உன் குலத்து உள்ேளார்,
வந்து காண்பது உன் மாற்றவள்
    செல்வமோ? மதியாய்
73

உரை
   
 
1569.‘காதல் உன் பெருங்கணவனை அஞ்சி,
    அக் கனி வாய்
சீதை தந்தை உன் தாதையைத்
    தறெுகிலன்; இராமன்
மாதுலன் அவன் : உந்தைக்கு
    வாழ்வு இனி உண்டோ?
பேதை உன் துணை யார் உளர்
    பழி படப் பிறந்தார்?
74

உரை
   
 
1570.‘மற்றும் நுந்தைக்கு வான் பகை
    பெரிது உள; மாற்றார்
செற்றபோது இவர் சென்று உதவார்
    எனில், செருவில்
கொற்றம் என்பது ஒன்று எவ் வழி
    உண்டு? அது கூறாய்;
சுற்றமும் கெடச் சுடு துயர்க்
    கடல் விழத் துணிந்தாய்.
75

உரை
   
 
1571.‘கெடுத்து ஒழிந்தனை உனக்கு
    அரும் புதல்வனை; கிளர் நீர்
உடுத்த பார் அகம் உடையவன்
    ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு, அவன்
    குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்கும் ஆம்; பிறர்க்கு
    ஆகுமோ? ‘என்றாள்
76

உரை
   
 
கவிக்கூற்று (1572-1573)

1572.தீய மந்தரை இவ் உரை
    செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது;
    சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற
    நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய
    அரும் தவத்தாலும்.
77

உரை
   
 
1573.அரக்கர் பாவமும், அல்லவர்
    இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள்
    தூ மொழி மட மான்;
இரக்கம் இன்மை அன்றோ இன்று
    இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப்
    பருகுகின்றனவே?
78

உரை
   
 
கைகேயி, பரதன் முடிசூட வழி வினாதல்

1574.அனைய தன்மையள் ஆகிய
    கேகயன் அன்னம்,
வினை நிரம்பிய கூனியை
    விரும்பினள் நோக்கி,
‘எனை உவந்தனை; இனியை
    என் மகனுக்கும்; அனையான் ‘
புனையும் நீள் முடி பெறும் படி
    புகலுதி ‘என்றாள்.
79

உரை
   
 
கூனி, என் சொல்வழிநிற்பின் எளிது எனல்

1575.மாழை உண் கணி உரைசெயக்
    கேட்ட மந்தரை, ‘என்
தோழி வல்லள்! என் துணை வல்லள்! ‘
    என்று அடி தொழுதாள்;
‘தாழும் மன் நிலை; என் உரை
    தலைநிற்பின், உலகம்
ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு
    ஆக்குவென்; ‘ என்றாள்.
80

உரை
   
 
கூனி கூறும் உபாயம் (1576-1577)

1576.‘நாடி ஒன்று உனக்கு உரை செய்வென்,
    நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
    தொலைவுற்ற வேலை,
ஆடல் வென்றியான் அருளிய வரம்
    அவை இரண்டும்
கோடி ‘என்றனள், உள்ளமும்
    கோடிய கொடியாள்.
81

உரை
   
 
1577.‘இரு வரத்தினில், ஒன்றினால்
    அரசு கொண்டு, இராமன்
பெரு வனத்திடை ஏழ் இரு
    பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி ஒன்றினால்;
    செழும் நிலம் எல்லாம்
ஒரு வழிப்படும் உன் மகற்கு;
    உபாயம் ஈது ‘என்றாள்.
82

உரை
   
 
கைகேயியின் உவகை

1578.உரைத்த கூனியை உவந்தனள்,
    உயிர் உறத் தழுவி,
நிரைத்த மா மணி ஆரமும்
    நிதியமும் நீட்டி,
‘இரைத்த வேலை சூழ் உலகம்
    என் ஒரு மகற்கு ஈந்தாய்!
தரைக்கு நாயகன் தாய்
    இனி நீ; எனத் தணியா.
83

உரை
   
 
கைகேயியின் உறுதிமொழி

1579.நன்று சொல்லினை! நம்பியை
    நளிர் முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத்
    துரத்தல், இவ் இரண்டும்
அன்று அது ஆம் எனில்,
    அரசன் முன் ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான்;
    போதி நீ ‘என்றாள்.
84

உரை