இராமன் சீதாபிராட்டிக்குச் சித்திரகூட மலைவளம்
காட்டல் (1-38)

2135.நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து
    ஒரு நெறி நின்ற
அனகன் அம் கணன் ஆயிரம்
    பெயர் உடை அமலன்
சனகன் மா மட மயிற்கு அந்தச்
    சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம்
    தரெிவு உறக் காட்டும்.
1

உரை
   
 
2136.வாளும் வேலும் விட்டு, அளாயின
    அனைய கண் மயிலே!
தாளின் ஏலமும் தமாலமும்
    தழைதரு சாரல்,
நீள மாலைய துயில்வன,
    நீர் உண்ட கமம் சூல்
காளமேகமும் நாகமும்
    தரெிகில காணாய்!
2

உரை
   
 
2137.குருதி வாள் எனச் செம் வரி
    பரந்த கண் குயிலே!
மருவி மால் வரை உம்பரில்
    குதிக்கின்ற வருடை,
சுருதி போல் தெளி மரகதக்
    கொழுஞ்சுடர் சுற்றப்,
பருதி வானவன் பசும் பரி
    புரைவன பாராய்!
3

உரை
   
 
2138.வடம் கொள் பூண் முலை மடம் மயிலே!
    மதக் கத மா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி,
    அமை தொறும் தொடக்கித்
தடங்கள் தோறும் நின்று ஆடுவ,
    தண்டலை அயோத்தி
நுடங்கும் மாளிகைத் துகில் கொடி
    நிகர்ப்பன நோக்காய்!
4

உரை
   
 
2139.உவரிவாய் அன்றிப் பாற்கடல்
    உதவிய அமுதே!
துவரின் நீள் மணித் தடம் தொறும்,
    இடம் தொறும், துவன்றிக்
கவரி பால் நிற வால் புடை
    பெயர்வன கடிதில்
பவள மால் வரை அருவியைப்
    பொருவிய பாராய்.
5

உரை
   
 
2140.சலம் தலைக்கொண்ட சீயத்தால்
    தனி மதக் கதம் மா
உலந்து வீழ்தலின், சிந்தின
    உதிரத்தின், மடவார்
புலந்த காலை அற்று உக்கன
    குங்குமப் பொதியில்
கலந்த முத்து என, வேழ முத்து
    இமைப்பன காணாய்.
6

உரை
   
 
2141.நீண்ட மால் வரை மதி உற,
    நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக்
    கற்றையில் தோன்ற,
மாண்ட வால் நிற அருவி அம்
    மழ விடைப் பாகன்
காண் தகும் சடைக் கங்கையை
    நிகர்ப்பன காணாய்!
7

உரை
   
 
2142.தொட்ட வார் சுனை சுடர் ஒளி
    மணியொடும் தூவி
விட்ட சென்றன, விடா மத
    மழையன வேழம்,
வட்ட வேங்கையின் மலரொடும்
    ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய
    போல்வன பாராய்!
8

உரை
   
 
2143.இழைந்த நூல் இணை மணிக் குடம்
    சுமக்கின்றது என்னக்
குழைந்த நூண் இடைக் குவி இள
    வன முலைக் கொம்பே!
தழைந்த சந்தனச்சோலை தன்
    செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற
    மதியினை நோக்காய்.
9

உரை
   
 
2144.உருகு காதலில் தழை கொண்டு
    மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செம் தேனினை
    முழைநின்றும் வாங்கிப்
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு
    பிறை மருப்பு யானை,
பருக வாயினில் கையில் நின்று,
    அளிப்பது பாராய்.
10

உரை
   
 
2145.அளிக்கும் நாயகன் மாயை புக்கு
    அடங்கினன் எனினும்,
களிப்பில் இந்தியத்து யோகியைக்
    கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்று உளர் ஆயினும்,
    உருத் தரெிகின்ற
பளிக்கு அறை சில பரி முக
    மாக்களைப் பாராய்.
11

உரை
   
 
2146.ஆடுகின்ற மா மயிலினும்
    அழகிய குயிலே
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம்
    மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை
    உருகினர் நோக்கப்
பாடுகின்றன கின்னர
    மிதுனங்கள் பாராய்.
12

உரை
   
 
2147.வில்லி வாங்கிய சிலை எனப்
    பொலி நுதல் விளக்கே!
வல்லிது ஆம் கழை தாக்கலின்
    வழிந்து இழி பிரசம்,
கொல்லி வாங்கிய குன்றவர்
    கொடி நெடு்ங்கவலை
கல்லி வாங்கிய குழிகளை
    நிறைப்பன காணாய்!
13

உரை
   
 
2148.ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற
    உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன்
    ஆடிய மந்தி,
அருவி நீர் கொடு வீசத் தான்
    அப்புறத்து ஏறிக்
கருவி மா மழை உதிர்ப்பது ஓர்
    கடுவனைக் காணாய்!
14

உரை
   
 
2149.வீறு பஞ்சு இன்றி அமுதம் நெய்
    மாட்டிய விளக்கே!
சீறு வெம் கதிர் செறிந்தன,
    பேர்கல, திரியா,
மாறு இல் மண்டிலம் நிரம்பிய
    மாணிக்க மணிக்கல்
பாறை, மற்று ஒரு பரிதியில்
    பொலிவன பாராய்!
15

உரை
   
 
2150.சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
    அருளிய திருவே!
நீல வண்டு இனம் படிந்து எழ,
    வளைந்தன நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள்,
    பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன
    நிகர்ப்பன காணாய்!
16

உரை
   
 
2151.வில்கொள் வாள் நுதல் விளங்கு இழை
    இளம் தளிர்க் கொழுந்தே!
எல் கொள் மால் வரை உம்பரின்,
    இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து
    எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என
    விழுவன காணாய்!
17

உரை
   
 
2152.வரிகொள் நோன் சிலை வயவர் தம்
    கணிச்சியின் மறிந்த
பரிய கார் அகில் சுட, நிமிர்
    பசும் புகைப் படலம்,
அரிய வேதியர் ஆகுதிப்
    புகையொடும் அளவிக்
கரிய மால்வரைக் கொழுந்து என
    படர்வன காணாய்.
18

உரை
   
 
2153.நானம் நாள் மலர் நறை அகில்
    நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது
    இடுகு இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன
    எனப் புனல் வறந்த
கான யாறுகள் கணம் மணி
    இமைப்பன காணாய்.
19

உரை
   
 
2154.மஞ்சு அளாவிய மாணிக்கப்
    பாறையின் மறைவ
செஞ்செவே நெடு மரகதப்
    பாறையில் தரெிவ,
விஞ்சை நாடியர் கொழுநரொடு
    ஊடிய விமலப்
பஞ்சு அளாவிய சீறடிச்
    சுவடுகள் பாராய்.
20

உரை
   
 
2155.சுழித்த செம் பொன்னின் தொளை புரை
    உந்தி இன் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு
    இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர்
    அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக
    நறுமலர் காணாய்!
21

உரை
   
 
2156.அறை கழல் சிலைக் குன்றவர்
    அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று
    அடிப்பது பாராய்,
பிறையை எட்டினள் பிடித்து,
    “இதற்கு இது பிழை “ என்னாக்
கறை துடைக்குறும் பேதை ஓர்
    கொடிச்சியைக் காணாய்.
22

உரை
   
 
2157.அடுத்த பல் பகல் அன்பரைப்
    பிரிந்தனர் என்பது
எடுத்து நந்தமக்கு இயம்புவ
    எனக் கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில்,
    சூர் அரமகளிர்
படுத்து வைகிய பல்லவ
    சயனங்கள் பாராய்.
23

உரை
   
 
2158.நினைந்த போதினும் அமிர்து ஒக்கும்
    நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில்,
    வயின்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில் கொடிச்சியர்
    எடுத்த இன் குறிஞ்சிக்
கனிந்த பாடல் கேட்டு, அசுணமா
    வருவன காணாய்.
24

உரை
   
 
2159.இலவும் இந்திரகோபமும்
    புரை இதழ் இனியாய்!
அலவும் நுண் துளி அருவி நீர்,
    அரம்பையர் ஆடக்
கலவை, சாந்து, செம் குங்குமம்
    கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின், பரிமளம்
    கமழ்வன பாராய்!
25

உரை
   
 
2160.செம்பொனால் செய்து, குலிகம் இட்டு
    எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி
    வனமுலை கொடியே!
அம் பொன் மால் வரை அலர் கதிர்
    உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது
    ஒப்பது பாராய்.
26

உரை
   
 
2161.மடந்தைமார்களில் திலதமே!
    மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில் வேய் இனம்
    சொரி கதிர் முத்தம்
இடம் தொறும் கிடந்து இமைப்பன,
    எக்கு இளம் செக்கர்
படர்ந்த வான் இடை தாரகை
    நிகர்ப்பன பாராய்.
27

உரை
   
 
2162.குழுவும் நுண் தொளை வேயினும்,
    குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும்,
    இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள்
    முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது
    ஒப்பது பாராய்.
28

உரை
   
 
2163.வளைகள் காந்தளில் பெய்தன
    அனைய கை மயிலே!
தொளை கொள் தாழ் தடக் கை நெடுந்
    துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு,
    அருவி நீர் கொணர்ந்து,
களபம் மால் கரி குண்டிகைச்
    சொரிவன காணாய்!
29

உரை
   
 
2164.வடுவின் மாவகிர் இவை எனப்
    பொலிந்த கண் மயிலே!
இடுகு கண்ணினர், இடர் உறும்
    மூப்பினர், ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின,
    உருகுறும் நெஞ்சக்
கடுவன், மாதவர்க்கு அருநெறி
    காட்டுவ காணாய்.
30

உரை
   
 
2165.பாந்தள் தேர் இவை பழிபடப்
    பரந்த பேர் அல்குல்!
ஏந்தும் நூல் மணி மார்பினர்
    ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின,
    நெடுஞ்சிறை கோலிக்
காந்து குண்டத்தில் அடங்கு எரி
    எழுப்புவ காணாய்!
31

உரை
   
 
2166.அலம்பு வார் குழல் ஆய் மயில்
    பெண் அரும் கலமே!
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு
    இயைவு உற நாடிச்
சிலம்பி, பஞ்சினில் சிக்கு அறத்
    தரெிந்த நூல், தேமாம்
பலம் பெய் மந்திகள், உடன் வந்து,
    கொடுப்பன பாராய்.
32

உரை
   
 
2167.தரெிவைமார்க்கு ஒரு கட்டளை
    எனச் செய்த திருவே!
பெரிய மாக் கனி, பலாக் கனி,
    பிறங்கிய வாழை
அரிய மாக் கனி, கடுவன்கள்
    அன்பு கொண்டு அளிப்பக்
கரிய மா, கிழங்கு அகழ்ந்தன
    கொணர்வன காணாய்!
33

உரை
   
 
2168.ஐவனக் குரல், ஏனலின்
    கதிர், இறுங்கு, அவரை,
மெய் வணக்கு உறு வேய் இனம்
    ஈன்ற மெல் அரிசி,
பொய் வணக்கிய மா தவர்
    புரை தொறும் புகுந்து, உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து
    அளிப்பன காணாய்.
34

உரை
   
 
2169.இடி கொள் வேழத்தை எயிற்றெடும்
    எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம், கற்று அறிந்தவர்
    என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு இலர்
    தாம் மிதித்து ஏறப்
படிகள் ஆம் எனத் தாழ் வரை
    கிடப்பன பாராய்.
35

உரை
   
 
2170.அசும்பு பாய் வரை அருந்தவம்
    முடித்தவர், துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர்
    தமக்கு விண் தருவான்,
விசும்பு தூர்ப்பன ஆம் என,
    வெயில் உக விளங்கும்
பசும் பொன் மானங்கள், போவன
    வருவன பாராய்!
36

உரை
   
 
2171.இனைய யாவையும் ஏந்திழைக்கு
    இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந்தவர்
    எதிர் வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர்
    விருந்தினன் ஆனான்;
மனையில் மெய் எனும் மாதவம்
    புரிந்தவன் மைந்தன்.
37

உரை
   
 
சூரியன் மறைதல்

2172.மா இயல் உதயம் ஆம் துளப வானவன்
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உகக்
கா இயல் குடவரைக் காலநேமி மேல்
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான்.
38

உரை
   
 
செக்கரும் மதியும் தோன்றுதல்

2173.சக்கரம் தானவன் உடலில் தாக்குற
எக்கிய சோரியில் பரந்தது எங்கணும்
செக்கர்; அ தீயவன் வாயில் தீர்ந்து வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே.
39

உரை
   
 
மாலைக்கால வருணனை (2174-2175)

2174.ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன அலரி போன பின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணித் தடம் மலர்ந்த எங்குமே.
40

உரை
   
 
2175.மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான்.
41

உரை
   
 
இராமன் முதலிய மூவரும் மாலை வழிபாடியற்றல்

2176.மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில;
மை அறு நறு மலர் மலர்ந்தவாம் சில;
ஐயனொடு இளவற்கும் அமுது அன்னாளுக்கும்
கைகளும் கண்களும் கமலம் போன்றவே.
42

உரை
   
 
இராமன் இலக்குவன் அமைத்த சாலையை அடைதல்

2177.மாலை வந்து அகன்றபின்,
    மருங்கு இலாெளாடு
வேலை வந்து உறைவிடம்
    மேயதாம் எனக்
கோலை வந்து உமிழ் சிலைத்
    தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான்,
    தவத்தின் எய்தினான்.
43

உரை
   
 
இலக்குவன் அமைத்த சாலையின் அமைதி (2178-2181)

2178.நெடுங் கழை குறுந்தறி
    நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல் நெடுமுகடு
    ஒழுக்கி, ஊழ் உற
இடுங்கல் இல் கை விசித்து
    ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல்
    விரிச்சு மூட்டியே.
44

உரை
   
 
2179.தேக்கு அடைப் படலையின்
    செறிவு செய்து, பின்,
பூக் கிளர் நாணலின்
    புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களில்
    சுவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து,
    அவை புனலில் தீற்றியே.
45

உரை
   
 
2180.வேறு இடம், இயற்றினன்
    மிதிலை நாடிக்கும்
கூறின நெறி முறை
    குயிற்றிக் குங்குமச்
சேறு கொண்டு அழகு உறத்
    திருத்தித் திண் சுவர்
ஆறு இடு மணியொடு
    தரளம் அப்பியே.
46

உரை
   
 
2181.மயில் உடைப் பீலியின்
    விதானம் மேல் வகுத்து,
அயில் உடைச் சுரிகையால்
    அருகு தூக்கு அறுத்து,
எயில் இளம் கழைகளால்
    இயற்றி, ஆறு இடு
செயல் உடைப் புதுமலர்
    பொற்பச் சிந்தியே.
47

உரை
   
 
இலக்குவன் அமைத்த சாலையில் இராமன்
குடிபுகல் (2182-2183.)

2182.இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்
பொன் நிறத் திருவொடும் குடிபுக்கான்; அரோ
நல் நெடுந் திசைமுகன் அகத்தும் நம் அனோர்க்கு
உன்னரும் உயிருளும் ஒக்க வைகுவான்.
48

உரை
   
 
2183.மாயம் நீங்கிய சிந்தனை மா மறை
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம்
ஆய சாலை அரும் பெறல் அன்பினான்
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான்.
49

உரை
   
 
இராமன் உட்கோள்

2184.“மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன;
தாவில் எம்பி கை சாலை சமைத்தன;
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே.“
50

உரை
   
 
இராமன் இளையவனை நோக்கிக் கூறல் (2185-2186)

2185.என்று சிந்தித்து இளையவற் பார்த்து ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ! இது போல் ‘எனாத்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்;
51

உரை
   
 
2186.‘அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்
படரும் நல் அறம் பாலித்து இரவியில்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் ‘என்றான்.
52

உரை
   
 
இலக்குவன் கூறுதல்

2187.அந்த வாய் மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்
‘எந்தை! காண்டி! இடரினுக்கு அங்குரம்
முந்தி வந்து முளைத்தது அன்றோ? ‘என்றான்.
53

உரை
   
 
மீட்டும் இராமன் நினைதல்

2188.ஆக செய் தக்கது இல்லை; அறத்தில் நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான்;
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா.
54

உரை
   
 
இராமன் மீட்டும் கூறுதல்

2189.பின்னும் தம்பியை நோக்கி பெரியவன்
‘மன்னும் செல்வத்துக்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லையில் இன்பத்தை
உன்னு; மேல் வரும் ஊதியத்தோடு ‘என்றான்.
55

உரை
   
 
கவிக் கூற்று

2190.தேற்றித் தம்பியைத் தேவரும் கை தொழ
நோற்று இருந்தனன் நோன் சிலையோன்; இப்பால்
ஆற்றல் மாதவன் ஆணையில் போனவர்
கூற்றின் உற்றது கூறல் உற்றாம் அரோ.
56

உரை