பரதன் வணங்க முனிவன் ஆசி கூறுதல்

2463.வந்த மா தவத்தோனை அம் மைந்தனும்
தந்தை ஆம் எனத் தாழ்ந்து வணங்கினான்;
இந்து மோலி அன்னானும் இரங்கினான்
அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான்.
1

உரை
   
 
பரத்துவன் பரதனை வினாதல்

2464.‘எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான்.
2

உரை
   
 
பரதன் விடையிறுத்தல் (2465-2466)

2465.சினக் கடுந் திறல் சீற்ற வெந் தீயினால்
மனக் கடுப்பினன் மா தவத்து ஓங்கலை
‘எனக்கு அடுப்பது இயம்பிலை நீ என்தான்?
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய்! ‘எனா.
3

உரை
   
 
2466.மறையின் கேள்வற்கு
    மன் இளம் தோன்றல், பின்,
‘முறையின் நீங்கி
    முது நிலம் கொள்கிலேன்;
இறைவன் கொள்கிலன்
    ஆம் எனின், யாண்டு எலாம்
உறைவென் கானத்து
    ஒருங்கு உடனே ‘என்றான்.
4

உரை
   
 
பரதன் உரையால் முனிவர்கள் மகிழ்தல்

2467.உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம்
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்தவால்
அரைத்த சாந்துகொடு அப்பியது என்னவே.
5

உரை
   
 
அந்தி வந்தடைதல்

2468.அன்ன காதல் அருந்தவர் ‘ஆண்தகை!
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால்?
என்ன வாழ்த்திடும் ஏல்வை இரவியும்
பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே.
6

உரை
   
 
பரதன் சேனைக்குப் பரத்துவன் விருந்து அளித்தல்
(2469-2479)

2469.ஆய காலையில் ஐயனைக் கொண்டு தன்
தூய சாலை குறுகினன் தோம் இலான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து ‘எனாத்
தீயின் ஆவுதி செங்கையின் ஓக்கினான்.
7

உரை
   
 
2470.துறந்த செல்வன் நினையத் துறக்கம்தான்
பறந்து வந்து படிந்தது; பல்சனர்
பிறந்து வேறு ஒர் உலகு பெற்றார் என
மறந்து வைகினர் முன்னைத் தம் வாழ்வு எலாம்.
8

உரை
   
 
2471.நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர்
வந்து உவந்து எதிர் ஏற்றனர் மைந்தரை
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார்.
9

உரை
   
 
2472.நானம் நன்கு உரைத்தார் நளிர் வான் இடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்;
கான மா மணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார்.
10

உரை
   
 
2473.கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்
செம் பொனின் கல ராசி திருத்தினார்;
அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும்
உம்பர் கோன் நுகர் இன் அமிழ்து ஊட்டினார்.
11

உரை
   
 
2474.அஞ்சு அடுத்த அமளி அலத்தகப்
பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவம்
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின்
துஞ்ச அத்தனை மைந்தரும் துஞ்சினார்.
12

உரை
   
 
2475.ஏந்து செல்வத்து இமையவர் ஆம் எனக்
கூந்தல் தயெ்வ மகளிர் கொண்டாடினார்
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர் காறும் வரிசை வழாமலே.
13

உரை
   
 
2476.மாதர் யாவரும்
    வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து
    வைகினர், கொவ்வை வாய்த்
தீது இல் தயெ்வ
    மடந்தையர், சேடியர்,
தாதிமார், எனத்
    தம் பணி கேட்பவே.
14

உரை
   
 
2477.நந்து அம் நந்த வனங்களில் நாள் மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவில் நின்று
அந்தர் வந்தனெ அந்தி தன் கை தர
மந்தம் முந்த நடந்தது வாடையே.
15

உரை
   
 
2478.மான்று அளிக் குலம் மா மதம் வந்து உணத்
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும் கற்பகம்
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே.
16

உரை
   
 
2479.நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்
கர கதக் கரி கால் நிமிர்த்து
உண்டன; மரகத்தின் கொழுந்து என வார்ந்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே.
17

உரை
   
 
பரதன் காய்கிழங்கு உண்டு புழுதியில் வதித்தல்

2480.இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்
அன்ன காயும் கிழங்கும் உண்டு அவ் இராப்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான்.
18

உரை
   
 
இரவு நீங்கிக் கதிரவன் தோன்றுதல்

2481.நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும்
மூலம் இல் கனவில் திரு முற்று உற
ஏல நல்வினை துய்ப்பவர்க்கு ஈறுசெல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான்.
19

உரை
   
 
துறக்கம் நீங்கப் படையினர் உறக்கம் நீங்கல்

2482.ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு எனப்
பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர்
தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார்
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார்.
20

உரை
   
 
சேனை எழுந்து பாலையை அடைதல்

2483.காலை என்று எழுந்தது;
    கண்டு, வானவர்,
‘வேலை ‘என்று, ‘அனிகம் ‘என்று
    ஏங்கி விம்முறச்
சோலையும் கிரிகளும்
    சுண்ணமாய் எழப்
பாலை சென்று, அடைந்தது
    பரதன் சேனையே.
21

உரை
   
 
சேனை பாலையைக் கடத்தல் (2484-2486)

2484.எழுந்தது துகள்; அதின்,
    எரியும் வெய்யவன்
அழுந்தினன், அவிப்ப அரும்
    வெம்மை ஆறினான்;
பொழிந்தன கரி மதம்,
    பொடி வெங் கானகம்
இழிந்தன, வழி நடந்து
    ஏற ஒணாமையே.
22

உரை
   
 
2485.வடி உடை அயில் படை மன்னர்
    வெண் குடை
செடி உடை நெடு நிழல்
    செய்த; தீப் பொதி
படி உடைப் பரல் உடைப்
    பாலை, மேல் உயர்
கொடி உடைப் பந்தரின்,
    குளிர்ந்தது எங்குமே.
23

உரை
   
 
2486.‘பெருகிய செல்வம் நீ பிடி ‘என்றாள் வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையாய் நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே.
24

உரை
   
 
சேனை சித்திரகூடம் சேர்தல்

2487.வன் தறெு பாலையை
    மருதம் ஆம் எனச்
சென்றது, சித்திர
    கூடம் சேர்ந்ததால்;
ஒன்று உரைத்து, ‘உயிரினும்
    ஒழுக்கம் நன்று ‘எனப்
பொன்றிய புரவலன்
    பொரு இல் சேனையே.
25

உரை
   
 
பரதன் சேனையை இலக்குவன் காணுதல் (2488-2489)

2488.தூளியின் படலையும் துரகம் தேரொடு
மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும்
ஆள் இருங் குழுவினர் ஆரவாரமும்
‘கோள் இரும் படை இது ‘என்று உணரக் கூறவே.
26

உரை
   
 
2489.எழுந்தனன் இளையவன்,
    ஏறினான் நிலம்
கொழுந்து உயர்ந்து அனையது
    ஓர் நெடிய குன்றின்மேல்,
செழும் திரைப் பரவையைச்
    சிறுமை செய்த அக்
கழுந்து உடை வரி சிலைக்
    கடலை நோக்கினான்.
27

உரை
   
 
இலக்குவன் சீற்றம் கொள்ளல்

2490.‘பரதன், இப் படை கொடு,
    பார் கொண்டான், மறம்
கருதி, உள் கிடந்தது ஓர்
    கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன்
    மேல், வந்தான்; இது
சரதம், மற்று இலது ‘எனத் ‘
    தழங்கு சீற்றத்தான்.
28

உரை
   
 
இலக்குவன் இராமனை அடைதல்

2491.குதித்தனன் பாரிடைக் குவடு நீறு எழ
மிதித்தனன் இராமனை விரைவின் எய்தினான்
‘மதித்திலன் பரதன் நின்மேல் வந்தான் மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான் ‘எனா.
29

உரை
   
 
இலக்குவன் பார்க் கோலம் கொள்ளல்

2492.கட்டினன் சுரிகையும் கழலும்;
    பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன்; கவசம்
    பூட்டு அமைத்து
இட்டனன்; எடுத்தனன் வரிவில்;
    ஏந்தலைத்
தொட்டு அடி வணங்கி நின்று,
    இனைய சொல்லினான்.
30

உரை
   
 
இலக்குவன் வீரவுரை பகர்தல் (2493-2504)

2493.‘இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ.
31

உரை
   
 
2494.‘படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன
குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால்.
32

உரை
   
 
2495.‘கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன சுடர்க் கணை திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன காண்டி வீர! நீ.
33

உரை
   
 
2496.‘கோடகத் தேர்படு குருதி தாவிய
ஆடகத் தட்டு இடை அலகை அற்று உகு
கேடகத் தடக்கைகள் கவ்விக் கிந்தின
நாடகம் நடிப்பன காண்டி நாத! நீ.
34

உரை
   
 
2497.‘பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால்
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல்! நீ.
35

உரை
   
 
2498.“நிவந்த வான் குருதியின்
    நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு
    சிறு கண் கூளியும்,
கவந்தமும், ‘உலகம் நின்
    கையது ஆயது ‘என்று,
உவந்தன குனிப்பன காண்டி,
    உம்பர் போல். ‘‘
36

உரை
   
 
2499.‘சூழி வெம் கட கரி துரக ராசிகள்
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற
ஆழி வெம் குருதியால் அழிந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால்.
37

உரை
   
 
2500.‘ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர்
வாள் அற வரிசிலை துணிய மா கரி
தாள் அறத் தலை அறப் புரவி தாெளாடும்
தோள் அற வடிக்கணை தொடுப்பக் காண்டியால்.
38

உரை
   
 
2501.‘தழைத்த வான் சிறையன,
    தசையும் கவ்வின,
அழைத்த வான் பறவைகள்,
    அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு
    இருவர் மார்பிடைப்
புழைத்த வான் பெருவழி
    போகக் காண்டியால். ‘
39

உரை
   
 
2502.‘ஒரு மகள் காதலின்
    உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன்
    தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு,
    இன்று, என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி,
    ஆழியாய்! ‘
40

உரை
   
 
2503.“‘வையகம் துறந்து வந்து
    அடவி வைகுதல்
எய்தியது உனக்கு ‘என,
    நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள்,
    நவையின் ஓங்கிய
கைகயன் மகள், விழுந்து
    அரற்றக் காண்டியால். ‘‘
41

உரை
   
 
2504.“அரம் சுட அழல் நிமிர்
    அலங்கல் வேலினாய்!
விரஞ்சு ஒரு நொடியில், இவ்
    அனிக வேலையை
உரம் சுடு வடிக்கணை
    ஒன்றில் வென்று, முப்
புரம் சுடும் ஒருவனின்,
    பொலிவென் யான் ‘‘ என்றான்.
42

உரை
   
 
இராமன் இலக்குவனை மறுத்துக் கூறல் (2505-2510)

2505.‘இலக்குவ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவன் என்பது கருதினால் அது
விலக்குவது அரிது; அது விளம்ப வேண்டுமோ?
புலக்கு உரித்து ஒரு பொருள் புகலக் கேட்டியால்
43

உரை
   
 
2506.‘நம் குலத்து உதித்தவர்,
    நவையின் நீங்கினார்,
எங்கு உலப்புறுவர்கள்?
    எண்ணின், யாவரே
தம் குலத்து ஒருவரும்
    தருமம் நீங்கினார்?
பொங்கு உலத் திரெளாடும்
    பொருத தோளினாய்! ‘
44

உரை
   
 
2507.‘எனைத்து உள மறை அவை
    இயம்பல் பாலன,
பனைத் திரள் கரக் கரிப்
    பரதன் செய்கையே;
அனைத்திறம் அல்லன
    அல்ல; அன்னது
நினைத்திலை, என்வயின்
    நேய நெஞ்சினால். ‘
45

உரை
   
 
2508.‘பெருமகன் ஏவலின்,
    பிறந்த காதலின்
வரும் என நினைகையும்,
    மண்ணை என் வயின்
தரும் என நினைகையும்
    தவிரத் தானையால்
பொரும் என நினைகையும்
    புலமைப் பாலதோ? ‘
46

உரை
   
 
2509.‘பொன்னொடும் பொரு கழல்
    பரதன் போந்தனன்,
நல் நெடும் பெரும்படை
    நல்கல் அன்றியே,
என்னொடும் பொரும் என
    இயம்பற் பாலதோ?
மின்னொடும் பொருவுற
    விளங்கும் வேலினாய்! ‘
47

உரை
   
 
2510.‘சேண் உயர் தருமத்தின்
    தேவைச் செம்மையின்
ஆணியை, அன்னது
    நினைக்கல் ஆகுமோ?
பூண் இயல் மொய்ம்பினாய்!
    போந்தது ஈண்டு எனைக்
காணிய; நீ இது
    பின்னும் காண்டியால்! ‘
48

உரை
   
 
பரதனும் தம்பியும் முதலில் வருதல்

2511.என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும்
நின்றனன்; பரதனும் நிமிர்ந்த சேனையைப்
‘பின் தருக ‘என்று தன் பிரிவு இல் காதலின்
தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான்.
49

உரை
   
 
இராமன் பரதனை நோக்குதல்

2512.தொழுது உயர் கையினன்,
    துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன்,
    ‘அவலம் ஈது ‘என
எழுதிய படிவம் ஒத்து,
    எய்துவான் தனை,
முழுது உணர் சிந்தையான்
    முடிய நோக்கினான்.
50

உரை
   
 
இராமன் இலக்குவனிடம் கூறுதல்

2513.கார்ப் பொரு மேனி அக்
    கண்ணன் காட்டினான்,
‘ஆர்ப்பு உறு வரி சிலை
    இளைய! ஐய! நீ,
தேர்ப் பெருந் தானை அப்
    பரதன் சீறிய
போர்ப் பெருங் கோலத்தைப்
    பொருந்த நோக்கு ‘எனா.
51

உரை
   
 
இலக்குவன் கண்ணீர் வடித்து நிற்றல்

2514.எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன்
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும்
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர
வில்லொடும் கண்ணின் நீர் நிலத்து வீழவே.
52

உரை
   
 
தொழுதுகொண்டே பரதன் தோன்றுதல்

2515.கோது அறத் தவம் செய்து
    குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள்,
    நலத்து நீங்கினாள்,
வேதனைத் திருமகள்
    மெலிகின்றாள் விடு
தூது எனப் பரதனும்
    தொழுது தோன்றினான்.
53

உரை
   
 
பரதன் இராமன் அடியில் விழுதல்

2516.‘அறம்தனை நினைந்திலை!
    அருளை நீத்தனை!
துறந்தனை முறைமையை! ‘
    என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர் அடி
    வந்து வீழ்ந்தனன்,
இறந்தனன் தாதையை
    எதிர்கண்டு என்னவே.
54

உரை
   
 
இராமனும் அழுதல்

2517.உண்டு கொல் உயிர் என ஒடுங்கினான் உருக்
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா
மண்டலம் நிறைந்துபோய் வழிந்து சோரவே.
55

உரை
   
 
இராமன் பரதனைத் தழுவுதல்

2518.அயா உயிர்த்து, அழு கண் நீர்
    அருவி மார்பிடை
உயா உற திரு உளம்
    உருகப் புல்லினான்,
நியாயம் அத்தனைக்கும் ஓர்
    நிலயம் ஆயினான்,
தயா முதல் அறத்தினைத்
    தழீஇயது என்னவே.
56

உரை
   
 
இராமன் தந்தையின் நலத்தை வினாவுதல்

2519.புல்லினன் நின்று, அவன்
    புனைந்த வேடத்தைப்
பல் முறை நோக்கினான்,
    பலவும் உன்னினான்;
‘அல்லலின் அழுங்கினை,
    ஐய! ஆள் உடை
மல் உயர் தோளினான்
    வலியனோ? ‘என்றான்.
57

உரை
   
 
தந்தை இறந்ததைப் பரதன் கூறுதல்

2520.அரியவன் உரைசெயப் பரதன்,
    ‘ஐய! நின்
பிரிவு எனும் பிணியினால்,
    என்னைப் பெற்ற அக்
கரியவள் வரம் எனும்
    காலனால், தனக்கு
உரிய மெய் நிறுவிப் போய்,
    உம்பரான் ‘என்றான்.
58

உரை
   
 
இராமன் மயங்கி விழுதல்

2521.‘விண் இடை அடைந்தனன் ‘
    என்ற வெய்ய சொல்,
புண் இடை அயில் எனச்
    செவி புகாமுனம்,
கண்ணொடு மனம் சுழல்
    கறங்கு போல ஆய்,
மண் இடை விழுந்தனன்
    வானின் உம்பரான்.
59

உரை
   
 
தந்தை இறந்தமைக்கு இராமன் புலம்பல் (2522-2529)

2522.இரு நிலம் சேர்ந்தனன்
    இறை, உயிர்த்திலன்,
உரும் இனை அரவு என
    உணர்வு நீங்கினான்;
அருமையின் உயிர்வர
    அயாவுயிர்த்து, அகம்
பொருமினன் பல் முறை,
    புலம்பினான் அரோ.
60

உரை
   
 
2523.‘நந்தா விளக்கு அனைய
    நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின்
    தாயே! தயாநிலையே!
எந்தாய்! இகல் வேந்தர்
    ஏறே! இறந்தனையே?
அந்தோ! இனி, வாய்மைக்கு
    ஆர் உளரே மற்று? ‘என்றான்.
61

உரை
   
 
2524.‘சொல் பெற்ற நோன்பின்
    துறையோன் அருள் வேண்டி,
நல் பெற்ற வேள்வி,
    நவை நீங்க, நீ இயற்றி,
என் பெற்று, நீ பெற்றது
    இன் உயிர் போய் நீங்கலோ?
கொல் பெற்ற வெற்றிக்
    கொலை பெற்ற கூர் வேலோய்! ‘
62

உரை
   
 
2525.‘மன் உயிர்க்கு நல்கு உரிமை
    மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய்!
    பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்கும் கூற்றாய்
    உலகு ஆள உற்றேனோ?
மின் உயிர்க்கும் தீவாய் வெயில்
    உயிர்க்கும் வெள் வேலோய்! ‘
63

உரை
   
 
2526.‘எம் பரத்தது ஆக்கி
    அரசுரிமை, இந்தியங்கள்
தம் பரத்தில் வீழாத்
    தவம் இழைத்த ஆறு இதுவோ?
சம்பரப் பேர்த் தானவனைத்
    தள்ளிச் சதமகற்கு, அன்று,
அம்பரத்தின் நீங்கா அரசு
    அளித்த ஆழியாய்! ‘
64

உரை
   
 
2527.‘வேண்டும் திறத்தாரும்
    வேண்டா அரசாட்சி
பூண்டு, இவ் உலகுக்கு
    இடர் கொடுத்த புல்லனேன்,
மாண்டு முடிவது அல்லால்,
    மாயா உடம்பு இது கொண்டு,
ஆண்டு வருவது இனி,
    யார் முகத்தே நோக்கவோ? ‘
65

உரை
   
 
2528.‘தேன் அடைந்த சோலைத்
    திருநாடு கைவிட்டுக்
கான் அடைந்தேன் என்னத்
    தரியாது, காவல! நீ
வான் அடைந்தாய்; இன்னம்
    இருந்தேன் நான், வாழ்வு உகந்தே;
ஊன் அடைந்த தவெ்வர்
    உயிர் அடைந்த ஒள் வேலோய்! ‘
66

உரை
   
 
2529.‘வண்மையும், மானமும்,
    வானவர்க்கும் பேர்க்ககிலாத்
திண்மையும், செங்கோல்
    நெறியும், திறம்பாத
உண்மையும், எல்லாம்
    உடனே கொண்டு ஏகினையே!
தண்மை தகை மதிக்கும்
    ஈந்த தனிக் குடையோய்! ‘
67

உரை
   
 
இராமனைப் பலரும் தாங்கித் தேற்றுதல்

2530.என்று எடுத்துப் பற்பலவும்
    பன்னி, இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும்
    குவவுத் தோள் கோள் அரியை,
வன் தடக்கைத் தம்பியரும்,
    வந்து அடைந்த மன்னவரும்,
சென்று எடுத்துத் தாங்கினார்;
    மா வதிட்டன் தேற்றினான்.
68

உரை
   
 
முனிவர் மன்னர் முதலியோர் வருதல்

2531.பன் அரிய நோன்பின்
    பரத்துவனே ஆதியாம்
பின்னு சடையோரும்,
    பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும், மந்திரியர்
    எல்லாரும், வந்து அடைந்தார்;
தன் உரிமைச் சேனைத்
    தலைவோரும் தாம் அடைந்தார்.
69

உரை
   
 
வசிட்டன் பேசத் தொடங்குதல

2532.மற்றும் வரற்பாலர்
    எல்லாரும் வந்து அடைந்து,
சுற்றும் இருந்த
    அமைதியினில், துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில்
    முகம் நோக்கிக் கோ மலரோன்
பெற்ற பெருமைத்
    தவ முனிவன் பேசுவான்.
70

உரை
   
 
்வசிட்டன் மரணத்தின் உண்மையைக் கூறுதல் (2533-2539)

2533.“‘துறத்தலும் நல் அறத்
    துறையும் அல்லது,
புறத்து ஒரு துணை இலை,
    பொருந்தும் மன்னுயிர்க்கு,
இறத்தலும் பிறத்தலும்
    இயற்கை ‘என்பதை
மறத்தியோ, மறைகளின்
    வரம்பு கண்ட நீ? ‘‘
71

உரை
   
 
2534.“உண்மை இல் பிறவிகள்
    உலப்பு இல் கோடிகள்
தண்மையில் வெம்மையில்
    தழுவின எனும்
வண்மையை நோக்கிய,
    வலிய கூற்றின்பால்
கண்மையும் உளது எனக்
    கருதல் ஆகுமோ? ‘‘
72

உரை
   
 
2535.“பெறுவதன் முன் உயிர்
    பிரிதல் காண்டியால்,
மறு அறு கற்பினில்
    வையம் யாவையும்
அறுவதினாயிரம் ஆண்டும்
    ஆண்டவன்
இறுவது கண்டு, அவற்கு
    இரங்கல் வேண்டுமோ? ‘‘
73

உரை
   
 
2536.“சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? “
74

உரை
   
 
2537.“கண் முதல் காட்சிய,
    கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்கு எலாம்
    ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள்
    மாயும் என்ற போது,
எண் முதல் உயிர்க்கு நீ
    இரங்கல் வேண்டுமோ?‘‘
75

உரை
   
 
2538.“புண்ணிய நறு நெயில்,
    பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில்,
    விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை
    இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு
    ஐயம் யாவதோ? ‘‘
76

உரை
   
 
2539.“இவ் உலகத்தினும் இடர் உளே கிடந்து
அவ் உலகத்தினும் நரகில் ஆழ்ந்து தம்
வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்
எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ? “
77

உரை
   
 
தயரதன் விண்டுவின் உலகினை அடைந்தான் எனல்

2540.“உண்டு கொல் இது அலது
    உதவி நீ செய்வது?
எண் தகு குணத்தினாய்!
    தாதை என்றலால்,
புண்டரீகத் தனி முதற்கும்
    போக்கு அரு
விண்டுவின் உலகிடை
    விளங்கினான் அரோ! ‘‘
78

உரை
   
 
தந்தைக்கு நீர்க்கடன் செலுத்தக் கூறுதல் (2541-2542)

2541.“ஐய! நீ யாது ஒன்றும்
    அவலிப்பாய் அலை;
உய் திறம் அவற்கு இனி இதனின்
    ஊங்கு உண்டோ?
செய்வன வரன் முறை திருத்திச்
    சேந்த பின்
கையினால் ஒழுக்குதி
    கடன் எலாம் ‘‘ என்றான்.
79

உரை
   
 
2542.“விண்ணு நீர் மொக்குளின்
    விளியும் யாக்கையை
எண்ணி நீ அழுங்குதல்
    இழுதைப் பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின்
    கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ,
    மலர்க் கையால் ‘‘ என்றான்.
80

உரை
   
 
இராமன் நீர்க்கடன் செலுத்துதல் (2543-2544)

2543.என்ற பின், ஏந்தலை
    ஏந்தி, வேந்தரும்,
பொன் திணிந்து அன சடைப்
    புனிதனோடும், போய்ச்
சென்றனர் செறி திரைப்
    புனலில்; ‘செய்க ‘என,
நின்றனர் இராமனும்,
    நெறியை நோக்கினான்.
81

உரை
   
 
2544.புக்கனன் புனலினில்,
    முழுகிப் போந்தனன்,
தக்க நல் மறையவன்
    சடங்கு காட்டத் தான்
முக்கையின் நீர் விதி
    முறையின் ஈந்தனன்,
ஒக்க நின்று உயிர் தொறும்
    உணர்வு நல்குவான்.
82

உரை
   
 
இராமன் பன்னசாலைக்குத் திரும்புதல்

2545.ஆனவன் பிற உள யாவும் ஆற்றிப் பின்
மான மந்திரத்தவர் மன்னர் மாதவர்
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன்
சானகி இருந்த அச் சாலை எய்தினான்.
83

உரை
   
 
பரதன் சீதையின் காலில் விழுந்து அழுதல் (2546-2547)

2546.எய்திய வேலையில் தமியள் எய்திய
தையலை நோக்கினன் சாலை நோக்கினான்
கைகளின் கண்மலர் புடைத்துக் கால் மிசை
ஐயன் அப்பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ.
84

உரை
   
 
2547.வெந்துயர் தொடர்தர விம்மி விம்மி நீர்
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில
சிந்திய குரிசில் அச் செம்மல் சேந்த கண்
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே.
85

உரை
   
 
இராமன் தந்தை இறந்தமை சீதைக்குக் கூறல்

2548.அந்நெடும் துயர் உறும்
    அரிய வீரனைத்
தன் நெடும் தடக்கையால்
    இராமன் தாங்கினான்,
நல் நெடும் கூந்தலை
    நோக்கி, ‘நாயகன்,
என் நெடும் பிரிவினால்,
    துஞ்சினான் ‘என்றான்.
86

உரை
   
 
தயரதன் மாண்டது கேட்டுச் சீதை துயருறல் (2549-2550)

2549.துண்ணொனும் நெஞ்சினாள்
    துளங்கினாள், துணைக்
கண் எனும் கடல் நெடும்
    கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல்
    வைத்த கையினாள்,
பண் எனும் கிளவியால்
    பன்னி, ஏங்கினாள்.
87

உரை
   
 
2550.கல் நகு திரள் புயக்
    கணவன் பின் செல,
நல் நகர் ஒத்தது
    நடந்த கானமும்;
‘மன்னவன் துஞ்சினன் ‘என்ற
    மாற்றத்தால்,
அன்னமும் துயர்க் கடல்
    அடி வைத்தாள், அரோ!
88

உரை
   
 
சீதை நீராடி மீளுதல்

2551.ஆயவள் தன்னை நேர்ந்து
    அங்கை ஏந்தினர்,
தாயரின், முனிவர் தம்
    தருமப் பன்னியர்,
தூய நீர் ஆட்டினர்,
    துயரம் நீக்கினர்,
நாயகற் சேர்த்தினர்,
    நவையுள் நீங்கினார்.
89

உரை
   
 
தாயரும் சுமந்திரனும் வந்தடைதல்

2552.தேன் தரும் தரெியல்
    அச் செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு,
    இருமை நோக்குறும்
சான்றவர் குழாத்தொடும்,
    தருமம் நோக்கிய
தோன்றல் பால், சுமந்திரன்
    தொழுது தோன்றினான்.
90

உரை
   
 
தந்தை எங்கே என்று தாயரிடம் இராமன் அழுதல்

2553.‘எந்தை யாண்டையான்? இயம்புவீர்! ‘எனா
வந்த தாயர் தம் வயங்கு சேவடி
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர்
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான்.
91

உரை
   
 
எல்லோரும் வருந்துதல்

2554.தாயரும் தலைப் பெய்து தாம் தழீஇ
ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்;
ஆய சேனையும் அணங்கு அனார்களும்
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார்.
92

உரை
   
 
தாயர் சீதையைத் தழுவிக் கொண்டு வருந்துதல்

2555.பின் அவ் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன் அனார்களும் சனகன் பூவையைத்
துன்னி மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார்.
93

உரை
   
 
சேனையும் நகரமக்களும் எல்லோரும் வந்து சேர்தல்

2556.சேனை வீரரும் திரு நல் மா நகர்
மால் நை மாந்தரும் மற்று உேளார்களும்
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும்
கோனை எய்தினார் குறையும் சிந்தையார்.
94

உரை
   
 
மாலை வருதல்

2557.படம் செய் நாகணைப்
    பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து
    இறைவன் ஆதலால்,
தடம் செய் தேரினான்,
    தானும் நீரினால்
கடம் செய்வான் எனக்
    கடலின் மூழ்கினான்.
95

உரை
   
 
மறுநாள் யாவரும் இராமனைச் சூழ்ந்திருத்தல்

2558.அன்று தீர்ந்தபின் அரச வேலையும்
துன்று செஞ்சடைத் தவரும் சுற்றமும்
தன் துணைத் திருத் தம்பிமார்களும்
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல் தான்.
96

உரை
   
 
பரதனின் விரத வேடம் குறித்து இராமன் வினாவல்

2559.‘வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்
சரதம் நின்னதே; மகுடம் தாங்கலாய்
விரத வேடம் நீ என் கொல் வேண்டுவான்?
பரத! கூறு ‘எனாப் பரிந்து கூறினான்.
97

உரை
   
 
பரதன் வருந்திக் கூறுதல் (2560-2565)

2560.என்றலும் பதைத்து எழுந்து கைதொழா
நின்று தோன்றலை நெடிது நோக்கி ‘நீ
அன்றி யாவரே அறத்து உேளார்? அதில்
பின்றுவாய் கொலாம்? ‘என்னப் பேசுவான்.
98

உரை
   
 
2561.‘மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான்
தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால்
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால்.
99

உரை
   
 
2562.‘நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவ காரியின் பிறந்த பாவியேன்
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
யாவன் ஆகி இப் பழி நின்று ஏறுவேன்?
100

உரை
   
 
2563.‘நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ?
101

உரை
   
 
2564.‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் அறம்
துறந்து மாதவம் தொடங்குவாய் என்றால்
மறந்தும் நீதியில் திறம்பி வாளின் கொன்று
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ?
102

உரை
   
 
2565.‘தொகை இல் அன்பினால்
    இறைவன் துஞ்ச, நீ
புகையும் வெஞ்சுரம்
    புகுதப் புந்தியால்
வகை இல் வஞ்சனாய்
    அரசு வௌவ, யான்
பகைவனே கொலாம்
    இறவு பார்க்கின்றேன்? ‘
103

உரை
   
 
மீண்டு அரசாள்க எனப் பரதன் இராமனை வேண்டுதல்

2566.‘உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்க ‘எனாச்
சிந்தை யாவதும் தரெியக் கூறினான்.
104

உரை
   
 
இராமன் பரதனை மறுத்துக் கூறுதல் (2567-2574)

2567.சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின்
‘இற்றதோ இவன் மனம்! ‘என்று எண்ணுவான்
‘வெற்றி வீர! யான் விளம்பக் கேள் ‘எனா
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்.
105

உரை
   
 
2568.‘முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.
106

உரை
   
 
2569.‘பரவு கேள்வியும் பழுது இல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும்
உர விலோய்! தொழற்கு உரிய தேவரும்
குரவரே எனப் பெரிது கோடியால்.
107

உரை
   
 
2570.‘அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச்
சிந்தை தேர்வு உற தரெிய நோக்கினால்
தந்தை தாயர் என்று இவர்கள் தாம் அலால்
எந்தை! கூற வேறு எவரும் இல்லையால்.
108

உரை
   
 
2571.‘தாய் வரம் கொளத் தந்தை ஏவலால்
மேய நம் குலத் தருமம் மேவினேன்;
நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ?
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய்!
109

உரை
   
 
2572.‘தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனிதலோ ஐய! புதல்வர் ஆதல்தான்?
110

உரை
   
 
2573.‘இம்மை பொய் உரைத்து
    இவறி, எந்தையார்
அம்மை வெம்மை சேர்
    நரகம் ஆள, யான்
கொம்மை வெம் முலைக்
    குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து
    அரசு செய்வெனோ? ‘
111

உரை
   
 
2574.‘வரன் நில் உந்தை சொல்
    மரபினால், உடைத்
தரணி நின்னது என்று
    இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து
    உரிமை ஆதலால்,
அரசு நின்னதே, ஆள்க ‘
    என்ன வே.
112

உரை
   
 
பரதன் இராமனை மீண்டும் முடி புனைய
வேண்டுதல் (2575-2576)

2575.‘முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு ‘எனா.
113

உரை
   
 
2576.‘மலங்கி வையகம் வருந்தி வைக நீ
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ?
கலங்குறா வணம் காத்தி போந்து ‘எனாப்
பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான்.
114

உரை
   
 
பரதனை அரசாளும்படி இராமன் ஆணையிடுதல்
(2577-2580)

2577.‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?
115

உரை
   
 
2578.‘வாய்மை என்னும் ஈது அன்றி வையகம்
தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமை தான் அதில் தீர்தல்; அன்றியே
ஆய் மெய் ஆக வேறு அறையல் ஆவதே?
116

உரை
   
 
2579.‘எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால்.
117

உரை
   
 
2580.‘மன்னவன் இருக்கவேயும்,
    “மணி அணி மகுடம் சூடுக “
என்ன, யான் இயைந்தது, அன்னான்
    ஏயது மறுக்க அஞ்சி;
அன்னது நினைந்து நீ என்
    ஆணையை மறுக்கலாமோ?
சொன்னது செய்தி, ஐய!
    துயர் உழந்து அயரல்! ‘என்றான்.
118

உரை
   
 
வசிட்டன் கூறத் தொடங்குதல்

2581.ஒள்ளியோன் இனைய எல்லாம்
    உரைத்தலும், உரைக்கல் உற்ற
பள்ளம் நீர் வெள்ளம் அன்ன
    பரதனை விலக்கிப் பண்டு
தெள்ளிய குலத்தோர் செய்கை
    சிக்கு அறச் சிந்தை நோக்கி,
‘வள்ளியோய்! கேட்டி ‘என்னா,
    வசிட்ட மா முனிவன் சொன்னான்.
119

உரை
   
 
வசிட்டன் இராமன் ஆளுதலே முறை எனல் (2582-2587)

2582.‘கிளர் அகன் புனலுள் நின்று,
    அரி, ஓர் கேழல் ஆய்,
இளை எனும் திருவினை
    ஏந்தினான் அரோ,
உளைவு அரும் பெருமை ஓர்
    எயிற்றின் உள் புரை
வளர் இளம் பிறை இடை
    மறுவின் தோன்றவே. ‘
120

உரை
   
 
2583.‘ஆதிய அமைதியின் இறுதி ஐம்பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின்
நாதன் அவ் அகன் புனல் நல்கி நண்ணரும்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான்.
121

உரை
   
 
2584.‘ஏற்ற இத்தன்மையின் அமரர்க்கு இன் அமுது
ஊற்றுடைக் கடல்வணன் உந்தி உந்திய
நூற்று இதழ்க் கமலத்தின் நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான்.
122

உரை
   
 
2585.‘அன்று அவன் உலகினை
    அளிக்க, ஆகியது
உன் தனிக் குலம் முதல்;
    உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை
    இகந்துளார் இலை;
ஒன்று உளது உரை இனம்,
    உணரக் கேட்டி யால். ‘
123

உரை
   
 
2586.‘இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய்! “மறு இல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்கப் பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் “ என்பரால்.
124

உரை
   
 
2587.‘என்றலால் யான் உனை
    எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல
    உதவிற்று உண்மையால்,
அன்று எனது, இன்று எனது
    ஆணை, ஐய! நீ
நன்று போந்து அளி, உனக்கு
    உரிய நாடு ‘என்றான்.
125

உரை
   
 
இராமன் வசிட்டனை மறுத்து வினாவுதல் (2588-2591)

2588.‘கூறிய முனிவனைக் குளிர்ந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது செங்கணான்
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது ‘எனக் கூறல் மேயினான்.
126

உரை
   
 
2589.‘சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய்
போன்றவர் ஆக பொன் புதல்வர் ஆக தான்
தேன் தரு மலர் உளான் சிறுவ! செய்வென் என்று
ஏன்றபின் அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?
127

உரை
   
 
2590.‘தாய் பணித்து உவந்தன,
    தந்தை செய்கென
ஏய, எப்பொருள்களும்
    இறைஞ்சி மேல் கொளாத்
தீய அப் புலையனின்,
    செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது
    நல்லது அல்லதோ? ‘
128

உரை
   
 
2591.‘முன் உறப் பணித்தவர்
    மொழியை யான் என
சென்னியில் கொண்டு, “அது
    செய்வென் “ என்றதன்
பின் உறப் பணித்தனை,
    பெருமையோய்! எனக்கு
என் இனிச் செய்வகை?
    உரைசெய் ஈங்கு ‘என்றான்.
129

உரை
   
 
பரதன் தானும் காடு உறைவதாகக் கூறல்

2592.முனிவனும் ‘உரைப்பது ஓர்
    முறைமை கண்டிலம்
இனி ‘என இருந்தனன்;
    இளைய மைந்தனும்,
‘அனையதேல் ஆள்பவர்
    ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன்
    படர்தல் மெய் ‘என்றான்.
130

உரை
   
 
இமையவர் விசும்பில் நின்று பரதன் நாடாள
வேண்டும் எனல் (2593-2594)

2593.அவ்வழி இமையவர்
    அறிந்து கூடினார்,
‘இவ்வழி இராமனை இவன்
    கொண்டு ஏகுமேல்,
செவ்வழித்து அன்று நம்
    செயல் ‘என்று எண்ணினார்,
கவ்வையர், விசும்பு இடை
    கழறல் மேயினார்.
131

உரை
   
 
2594.‘ஏத்தரும் பெருங் குணத்து
    இராமன் இவ்வழி
போத்து அரும் தாதை சொல்
    புரக்கும் பூட்சியான்
ஆத்த ஆண்டு ஏழினோடு
    ஏழும் அந்நிலம்
காத்தல் உன் கடன்;
    இவை கடமை ‘என்றனர்.
132

உரை
   
 
பதினான்காண்டும் ஆளும்படி இராமன் கட்டளையிடுதல்

2595.வானவர் உரைத்தலும்,
    ‘மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்,
    இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின்
    அளித்தி பார் ‘எனா,
தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.
    தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.
133

உரை
   
 
பதினான்காண்டில் திரும்பாவிடில் பரதன் சாவேன் எனல்

2596.‘ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரிச்
சாம் இது சரதம்! நின் ஆணை சாற்றினேன்!
134

உரை
   
 
இராமன் இசைதல்

2597.என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பிலன் அவனது துணிவை நோக்கினான்;
அன்பினன் உருகினன் ‘அன்னது ஆக ‘என்றான்
தன்புகழ் தன்னினும் பெரிய தன்மையான்.
135

உரை
   
 
இராமன் மரவடி நல்குதல்

2598.விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் ‘அரிது ‘என எண்ணி ஏங்குவான்
‘செம்மையின் திருவடித் தலம் தந்தீக ‘என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.
136

உரை
   
 
பரதன் மர அடிகளை தலைமேல் கொண்டு செல்லுதல்

2599.அடித் தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித் தலம் இவை என முறையின் சூடினான்;
படித் தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.
137

உரை
   
 
பரதனுடன் வந்த யாவரும் திரும்புதல் (2600-2601)

2600.ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும்
சான்றவர் குழுவொடு தவத்துேளார்களும்
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான்.
138

உரை
   
 
2601.பண்டை நூல் தரெி பரத்துவனும் போயினான்;
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்;
விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்;
கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான்.
139

உரை
   
 
பரதன் அயோத்தி நகருள் புகாதிருத்தல்

2602.பாதுகம் தலைக்கொடு பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான்.
140

உரை
   
 
இராமன் பாதுகை அரசாளப் பரதன் தொழுதிருத்தல்

2603.நந்தி அம் பதி இடை நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.
141

உரை
   
 
இராமனும் இலக்குவனும் சீதையும் தறெ்கே செல்லுதல்

2604.‘குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால்
நின்றவர் நலிவரால் நேயத்தால் ‘எனாத்
தன் துணைத் தம்பியும் தானும் தையலும்
தனெ் திசை நெறியினைச் சேறல் மேயினான்.
142

உரை